search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    • சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் இந்த மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை டிரை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு, இஞ்சி - 50 கிராம்

    ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

    சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

    குடை மிளகாய் - 1

    பச்சை மிளகாய் - 2

    கருவேப்பிலை -சிறிதளவு

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

    மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

    செய்முறை

    ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். குடை மிளகாயை நறுக்கவும்.

    ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும் வரை வதக்க வேண்டும். இதற்கிடையில், மிக்சியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்க வேண்டும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, கசூரி மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் க்ரீமி கார்ன் மசாலா தயார். இதை தோசை, சப்பாத்தி, சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.

    • கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான்.
    • எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான்.

    கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான். மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்."மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்" குணம்."மாதா பழமொழி. உணவில் பல விதமாக மாங்காயை பயன்படுத்தலாம்.

    மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். அந்த வகையில் சுவையான வெங்காயம்-மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - அரை கிலோ

    மாங்காய் - பெரியது 1

    கடுகு - தேவையான அளவு

    வெந்தயம் - அரை ஸ்பூன்

    மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரை கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி அதை காய் சீவலைக் கொண்டு துருவிக் கொள்ள வேண்டும். புளிப்பான ஒரு பெரிய சைஸ் மாங்காயின் தோலை நீக்கி, இதையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து இதை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய வெங்காயை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய மாங்காயையும் சேர்க்க வேண்டும்.

    இதை நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், கடுகு வெந்தயப் பொடியை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து விட வேண்டும்.

    இதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு இதை வேக வைக்க வேண்டும். மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.

    இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தியுன் வைத்து சாப்பிட இந்த டிஷ் மிகவும் நன்றாக இருக்கும்.

    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம்.
    • எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

    கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு- 1 கப்

    நிலக்கடலை - 1/4

    தேங்காய்த்துருவல் - 1/2 கப்

    வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.

    பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும்சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


    • அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன்.
    • மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும்.

    அசைவ உணவுகளில் ஆரோக்கியம் நிறைந்தது மட்டன். மற்ற உணவுகளை காட்டிலும் மட்டன் சமைக்கும் போது வீடே மணக்கும். மட்டன் தொடங்கி மட்டன் ஈரல், மட்டன் எலும்பு, மட்டன் குடல், மட்டன் தலைக்கறி, மட்டன் சூப் என பல வகைகளில் செய்யலாம். அதிலும் மட்டனில், அரைத்த மசாலா சேர்த்து செய்யப்படும் மட்டன் கோலா உருண்டை சாப்பிடவே அட்டகாசமாக இருக்கும். அதை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்:

    மட்டன் (வெள்ளாட்டு இறைச்சி) -1கிலோ

    மிளகாய்த் தூள் 12 கிராம்

    மஞ்சள் தூள் - 4 கிராம்

    உப்பு -தேவைக்கு ஏற்ப

    நறுக்கிய பச்சை மிளகாய்- 10 கிராம்

    நறுக்கிய பூண்டு - 20 கிராம்

    நறுக்கிய கொத்தமல்லி - 30 கிராம்

    எலுமிச்சைச் சாறு- 5மி.லி.

    எண்ணெய் - கால் லிட்டர்

    அரைக்க

    துருவிய தேங்காய் 25 கிராம்

    லவங்கப்பட்டை 2 கிராம்

    கிராம்பு, கசகசா - 10 கிராம்

    வறுத்த உளுந்தம்பருப்பு - 15 கிராம்

    செய்முறை:

    முதலில் மிக்சியில், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட ஆட்டிறைச்சியை அரைத்து எடுக்கவும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டு, நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலவையை கலந்துகொள்ளவும்.

    பின்னர் மிக்சியில் தேங்காய்த் துருவல், லவங்கப்பட்டை, கிராம்பு, கசகசா, வறுத்த உளுந்தம்பருப்பு சேர்த்து அரைக்கவும். இந்த கலவையை அரைத்த இறைச்சியுடன் சேர்த்து கலக்கவும்.

    கடைசியாக, உருண்டை பிடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பொரித்து எடுத்தால் சுவையான கோலா உருண்டை, உங்களை ருசிக்க கூப்பிடும்.

    • ஷீர் குருமா ஒரு முகலாய டிஷ்
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டெசட்

    தேவையான பொருட்கள்

    கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர்

    சேமியா - முக்கால் கப்

    பேரீச்சைப் பழம் -10

    முந்திரி பருப்பு - கால் கப் (நறுக்கியது)

    பாதம் பருப்பு - கால் கப் மெல்லியதாக நறுக்கியது

    பிஸ்தா - 2 ஸ்பூன் நறுக்கியது

    சாரை பருப்பு - ஒரு ஸ்பூன்

    காய்ந்த திராட்சை - 15

    சர்க்கரை - கால் கப்

    ஏலக்காய் தூள் - சிறிதளவு

    ரோஸ் எசன்ஸ் - 2 சொட்டு

    நெய் - தேவையான அளவு

    செய்முறை

    அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து அதில் முக்கால் கப் சேமியாவை சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

    இப்போது அதே கடாயில் மீண்டும் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து அதில் 10 பேரீச்சை பழங்களை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை 2 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

    அதே கடாயில் மீண்டும் 1 ஸ்பூன் நெய் சேர்த்து இதில் பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடங்களுக்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து இதில் 15 காய்ந்த திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில் 1 லிட்டர் முழு கொழுப்பு பாலை சேர்த்து காய்ச்ச வேண்டும். பால் ஒரு கொதி வந்ததும் அதில் வறுத்த சேமியாவை சேர்க்க வேண்டும். சேமியா வெந்ததும் இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்க்க வேண்டும்.

    பின்னர் இதில் கால் ஸ்பூன் ஏலக்காய் பொடி சேர்க்க வேண்டும். இரண்டு சொட்டு ரோஸ் எசன்ஸ் சேர்த்து, பின்னர் வறுத்த பேரீச்சைப்பழம், திராட்சை, பருப்பு வகைகளை சேர்க்க வேண்டும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு அடுப்பை சிம்மில் வைத்து சேமியாவை வேக வைத்து இறக்கி விடலாம். அவ்வளவுதான் சுவையான ஷீர் குருமா தயார்.

    இதை சூடாக சாப்பிடலாம். அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர வைத்தும் பறிமாறலாம். இதன் சுவை அபாரமாக இருக்கும்.

    • குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்

    உருளைக்கிழங்கில் சமைக்கும் அனைத்து ரெசிபிகளையும் நாம் விரும்பி சாப்பிடுவோம். இப்போது உருளைக்கிழங்கை வைத்து குறைவான நேரத்தில் ஒரு மொறு மொறு மொறு ஸ்நாக் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த ரெசிபி மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட பெஸ்ட் ஸ்நாக் ரெசிபியாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த ஸ்நாக்கை விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இந்த ஸ்நாக் ரெசிப்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு- 3

    சில்லி ஃப்ளேக்ஸ்- ஒரு ஸ்பூன்

    சாட் மசாலா அரை ஸ்பூன்

    கொத்தமல்லித்தழை- ஒரு கைப்பிடி

    உப்பு- சுவைக்கேற்பவாறு

    மிளகுத்தூள்- ஒரு ஸ்பூன்

    தனியா தூள்- கால் ஸ்பூன்,

    செய்முறை:

    உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சில்லி ஃப்ளேக்ஸ், சாட் மசாலா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகுத்தூள், தனியா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து வடை போல் தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது இரண்டு பிரட்டை எடுத்து தோசைக்கல்லில் சேர்த்து டோஸ்ட் செய்ய வேண்டும். இந்த பிரட் பொன்னிறமாக மாறும் அளவு டோஸ்ட் செய்து எடுத்து ஆற விடவும். பின்னர் இந்த பிரட்டை துண்டுகளாக்கி மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த துகளை ஒரு தட்டுக்கு மாற்றிக் கொள்ளவும்.

    வேறொரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் சோளமாவு சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து அரை டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், கால் கப் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது நாம் தயாரித்த வடையை இதனுள் சேர்த்து எடுத்து பின் இதை பிரட் துகளில் புரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். அவ்வளவு தான் சுவையான உருளைக்கிழங்கு ஸ்நாக்ஸ் தயார். இந்த ஸ்நாக் சாப்பிடுவதற்கு மொறு மொறுவென இருக்கும்.

    • பழ எசென்ஸ் விட்டு லட்டு பிடித்தால் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.
    • தேங்காய்க்கு பதில் கசகசாவை அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

    * இஞ்சியுடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும். டீ தயாரிக்கும்போது கொதி வந்த பின்பு இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு பருகவும். டீ சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * மோர்க் குழம்பு செய்யும்போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் கெட்டியாக, சுவையாக இருக்கும்.

    * பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.

    * லட்டு பிடிக்கும்போது ஏதாவது ஒரு பழ எசென்ஸ் விட்டுப் பிடித்தால் லட்டு சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

    * முட்டையை வேக வைக்கும் போது சில சமயங்களில் வெடிப்பு ஏற்பட்டு வெள்ளைக்கரு வெளியே வரக்கூடும். அப்படி வெளியில் வராமல் இருக்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வினிகரை சேர்க்கவும். இதனால் முட்டையின் ஓடு வெடித்தாலும் உள்ளே இருப்பவை வெளியில் வராது.

    * பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

    * முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் மூழ்கும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

    * ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள். சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

    * பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு பிரெஷ் ஆக இருக்கும்.

    * பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டால் சாதம் உதிரி உதிராக இருக்கும்.

    • வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும்.
    • ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும்.

    வட்லப்பம் என்பது மிகவும் சுவையான ஒரு இனிப்பு பொருளாகும். இது ஸ்ரீலங்காவில் மிகவும் பிரபலமான உணவாகும். இது அங்கு வாழும் தமிழ் மக்களால் விரும்பி உண்ணப்படும் அற்புதமான உணவாகும். இது அனைத்து விழாக்களின் போதும் செய்து அனைவரும் உண்பார்கள். இதன் சுவை அமோகமாக இருக்கும். ஈசியாக செய்யக்கூடியது.

    பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான கருப்பட்டி வட்லப்பம் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சுவையில் சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.

    தேவையான பொருட்கள்

    நாட்டுக்கோழி முட்டை- 4

    தேங்காய் பால்- அரை கப்

    சர்க்கரை- ஒரு ஸ்பூன்

    கருப்பட்டி- 1½ கப்

    உப்பு- ஒரு சிட்டிகை

    ஏலக்காய் தூள்- அரை ஸ்பூன்

    செய்முறை:

    கருப்பட்டி வட்லப்பம் செய்ய முதலில் மிக்சி ஜாரில் தேங்காய்களை ஏலக்காயை சேர்த்து நன்கு அரைத்து முதல் தேங்காய் பாலை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    முட்டையை நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் கருப்பட்டியை சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கருப்பட்டி கரையும் வரை சுட வைக்க வேண்டும்.

    பின்னர் தேங்காய்ப்பால், கருப்பட்டி கரைசல், அரைத்த சீனி எல்லாவற்றையும் நன்றாக கலந்து கரைந்ததும் வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.

    அதன்பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும். ஒரு பாத்திரத்தில் அடித்து வைத்த முட்டை, தேங்காய் பால் கலவையில் கருப்பட்டி கரைந்த நீரினை கலந்து எடுத்து ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    தண்ணீர் சூடானதும் இட்லி பாத்திரத்தினுள் இந்த கலவையை வைத்து மூடி வைக்க வேண்டும். 25 நிமிடம் வட்லபத்தை வேகவிட வேண்டும்.

    வட்டிலப்பம் வெந்ததும் ஒரு கரண்டியால் வட்லபத்தை குத்தி எடுத்து பார்த்தால் கரண்டியில் வட்லப்பம் ஒட்டாமல் இருக்க வேண்டும். இப்பொழுது சுவையான கருப்பட்டி வட்டலப்பம் தயார்.

    • ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது.
    • அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

    ஐஸ்கிரீம் குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் விருப்பமானது. இன்றும் ஐஸ்கிரீம் சாப்பிடும் பொழுது அனைவரும் குழந்தைகளாகவே மாறி விடுகிறோம். கோடையை சமாளிக்க ஒரு புறம் பருவக்கால பழங்களை சமாளிக்க ஐஸ்கிரீமை மறந்துவிட முடியாது. குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் எப்படி ஈஸியாக செய்வது என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    அவகாடோ – 2

    ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்

    கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு

    வெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி

    செய்முறை:

    ஹெவி கிரீம் செய்ய... ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெயை சேர்த்து உருக்கி ஆற விடவும். இதனுடன் பால் சேர்த்து ஹான்டு பீட்டர் கொண்டு நன்கு அடித்து எடுத்தால் கிரீம் ரெசி. இதனை ஃப்ரிட்ஜில் வைத்து 2 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

    ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைத்து, மேலே படிந்து வரும் ஆடைகளை எடுத்து ஒரு பாத்திரத்தில் சேமித்து வைக்கவும். சேகரித்த பால் ஆடைகளை மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி இறக்கினால் ஹெவி கிரீம் தயார்.

    முதலில் அவகாடோவை 1 கப் கிரீமுடன் சேர்த்து மசித்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பெரிய கிண்ணத்தில் அவற்றை மாற்றி அத்துடன் கன்டன்ஸ்டு மில்க், கிரீம் சேர்த்து ஹான்ட் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்க வேண்டும். வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்றாக கலந்து 5 முதல் 6 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான சத்தான அவகாடோ ஐஸ் கிரீம் ரெடி.

    • லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    • குழந்தைகளுக்கு தினமும் விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து அசத்தலாம்.

    குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் என்றால் கொள்ளை பிரியம். இனி நீங்களே உங்கள் குழந்தைகளுக்கு விதவிதமாக ஐஸ்கிரீம் செய்து கொடுத்து அசத்தலாம். இன்றைக்கு லெமன் ஷாட் பாப்சிகிள் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    எலுமிச்சைச்சாறு – 1/2 கப்,

    தண்ணீர் – 1 கப்,

    சர்க்கரை – 3/4 கப்,

    புதினா சாறு – 1 டீஸ்பூன்.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீருடன், 3/4 கப் சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இதனுடன் புதினா சாறு சேர்க்க வேண்டும். பின்னர் ஆற வைக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து வடிகட்டி எடுக்கவும். இதனை பாப்சிகிள் மோல்டில் ஊற்றி 3-4 மணி நேரங்கள் ஃப்ரீசரில் வைத்து எடுக்கவும். லெமன் ஷாட் பாப்சிகிள் ரெடி.

    • நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும்.
    • பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.

    காளான் கிரேவி கொஞ்சம் வித்தியாசமான முறையில், மசாலாவை வித்தியாசமாக சேர்த்து இப்படி வைத்து பாருங்கள். சூப்பரா இருக்கும். பரோட்டா சப்பாத்தி இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள பரோட்டா சைட் டிஷ் இது. உங்களுடைய குழந்தைகளுக்கு, இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். நாவிற்கு அதிகப்படியான சுவையையும் தரும். ரொம்ப ரொம்ப சுலபமாக மஷ்ரூம் கிரேவி செய்வது எப்படி? பார்க்கலாமா?

    தேவையான பொருட்கள்:

    காளான் – 1 பாக்கெட்

    நறுக்கிய வெங்காயம் – 1

    நறுக்கிய தக்காளி – 1

    கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

    உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்

    கடலை பருப்பு – 1 டீஸ்பூன்

    மிளகு – 1 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் – 3

    கடுகு, சீரகம், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை

    கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்சி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    பின்னர் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்க வேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா பொடி கலவையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்போது தண்ணீர் விட்டு மூடி வைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்.

    • உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர்.

    இது சுவையான பானம் மட்டுமல்ல. உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடியதும் கூட. அவலில் கார்போஹைட்ரேட், இரும்புச் சத்து, நார்ச்சத்து, ஆக்சிஜனேற்றிகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் அடங்கியிருக்கின்றன. ருசிக்கும் ஆவலைத் தூண்டும் அவல் பால் கீர் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாமா?

    தேவையான பொருட்கள்:

    அவல்- ஒரு கப்

    பால்- 3 கப்

    வெல்லம்- 1/2 கப்

    நெய்- 1 ஸ்பூன்

    முந்திரி- 10

    உலர் திராட்சை- 2 ஸ்பூன்

    கன்டென்ஸ்டு மில்க்- 1/4 கப்

    ஏலக்காய் தூள்- கால் டீஸ்பூன்

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். பின்னர் அதே நெய்யில் அவல் சேர்த்து மொறுமொறு என்று பொன்னிறமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுத்து ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள அவல் சேர்த்து வேகவைக்க வேண்டும்.

    பின்னர் அதில் முந்திரியை ஊறவைத்து அரைத்துச் சேர்த்து கொதிக்கவிடவும். தொடர்ந்து, அதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்கவிடுங்கள். இதனால் கீர் நன்கு கெட்டி யாகி வரும். கடைசியாக வெல்லத்தை பாகு காய்ச்சி சேர்த்து கொதிக்கவிடவும்.

    பின்னர் ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கினால், சூடான, சுவையான அவல் பால் கீர் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அருந்துவார்கள்.

    ×