என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கேரளா, ராஜஸ்தானை தொடர்ந்து பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது மகாராஷ்டிரா
Byமாலை மலர்22 May 2022 7:41 PM GMT (Updated: 22 May 2022 7:41 PM GMT)
மாநில அரசுகள் பெட்ரோலிய பொருட்கள் மீதான வாட் வரியைக் குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டிருந்தார்.
மும்பை:
பெட்ரோல் டீசல் விலை உயர்வில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைத்து மத்திய அரசு நேற்று முன்தினம் அதிரடியாக அறிவித்தது.
இதற்கிடையே, முதல் மாநிலமாக கேரள அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ.2.41-ம், டீசல் மீதான வாட் வரியை ரூ.1.36-ம் குறைப்பதாக அறிவித்தது.
கேரளாவைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் பெட்ரோல் மீதான வாட் வரியை ரூ. 2.48-ம், டீசல் மீதான வரியை ரூ. 1.16-ம் குறைத்து அறிவித்தது.
இந்நிலையில், கேரளா, ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர மாநில அரசு பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து அறிவித்துள்ளது.
அதன்படி மகாராஷ்டிர அரசு பெட்ரோல் மீதான வாட் வரியில் 2.08 ரூபாயும், டீசல் மீதான வரியில் 1.44 ரூபாயும் குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதையும் படியுங்கள்...மண் காப்போம் இயக்கம் வெற்றி பெற உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X