தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைக்கப்பட்ட உயர்மட்ட தலைவர் உட்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைக்கப்பட்ட உயர்மட்ட தலைவர் உட்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

மகாராஷ்டிராவில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூத்த நக்சல் தலைவர் பிரபாகர் உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பாதுகாப்புப் படையினரைக் கண்டதும் நக்சலைட்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதற்குப் பதிலடி கொடுத்த கமாண்டோக்கள் நடத்திய தாக்குதலில் 7 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்களில் நக்சலைட் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான பிரபாகர் என்பவரும் அடங்குவார். தெலுங்கானாவை சேர்ந்த பிரபாகரின் தலைக்கு ரூ.25 லட்சம் விலை வைப்பட்டிருந்தது.

கொல்லப்பட்டவர்களிடம் இருந்து ஏகே-47 ரகத் துப்பாக்கிகள் உள்ளிட்ட  ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தாக்குதலின் போது பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com