என் மலர்
நீங்கள் தேடியது "Mammootty"
- பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.
2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநிலத்தின் திரைப்பட விருதுகள் கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று குடியரசு தினத்தன்று முதல்வர் பினராயி விஜயன் விருதுகளை வழங்கினார்.
பிரம்மயுகம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்மூட்டிக்கு முதல்வர் பினராயி விஜயன் வழங்கினார்.

அதே சமயம், பெமினிசி பாத்திமா படத்தில் நடித்த ஷாம்லா ஹம்சாவுக்கு சிறந்த நடிகை, மஞ்சுமல் பாய்ஸ் சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் மமூட்டி சிறந்த நடிகருக்கான மாநில விருதை பெறுகிறார்.
இது மம்மூட்டி பெற்றுள்ள 7-வது மாநில விருதாகும். 1984, 1989, 1993, 2004 மற்றும் 2009,2023 ம் ஆண்டுகளில் சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை மம்மூட்டி வென்றுள்ளார்.
- நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை.
- நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார்.
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் நடிகர்கள் தர்மேந்திரா, மம்மூட்டி, நடிகர் மாதவனுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தர்மேந்திராவுக்கு பத்ம விபூஷனும், மம்மூட்டிக்கு பத்ம பூஷனும், மாதவனுக்கு பத்மஸ்ரீயும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் விருதுபெற்ற நடிகர் மம்மூட்டிக்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன்,
"என்னுடைய பிரியத்துக்குரிய நண்பர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்ததில்லை. ஆனால், நான் அவரையும் அவர் என்னையும் தூர இருந்து ரசித்தும் ஒருவருக்கொருவர் நேரடியாக விமர்சித்துக்கொண்டும் ஒரு 'கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார்' நட்பை நீண்ட நாட்களாகப் பேணி வருகிறோம்.
நாங்கள் இருவரும் இன்னும் கொஞ்சம் அதிகமாக நேரில் சந்தித்துக்கொண்டிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. என்னுடைய ரசிகர்கள் அவருடைய ரசிகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதே ஒரு மம்மூட்டி ரசிகனாக என்னுடைய எதிர்பார்ப்பு. நண்பன் மம்மூட்டி, இப்போது பத்ம பூஷன் மம்மூட்டியாகி இருக்கிறார். நண்பனுக்கு வாழ்த்து." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
- மாதவனுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் 77வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் 2026-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகின்றன.
கலை, இலக்கியம், சமூக சேவை, மருத்துவம், கல்வி, பொது சேவை போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கும், பொதுவாழ்க்கையில் நீண்டகாலம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுக்கும் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்மூட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்கா யாக்னிக் (பாடகி) மற்றும் மம்மூட்டி ஆகியோருக்கு 'பத்ம பூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவன், பிரசென்ஜித் சட்டர்ஜி (நடிகர்) மற்றும் சதீஷ் ஷா (மறைந்த நகைச்சுவை நடிகர்) ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவிற்கு முன்னதாக விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே குடியரசுத் தலைவர் மாளிகையில் பதக்கங்களை வழங்குவார்.
- Patriot படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.
- Patriot படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், மம்மூட்டி, மோகன்லால், நயன்தாரா, ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த போஸ்டர்களில் Morse Code-ல் ஏப்ரல் 23 என குறிப்பு வைத்து வித்தியாசமான முறையில் ரிலீஸ் தேதியை Patriot படக்குழு வெளியிட்டுள்ளனர்
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், பேட்ரியாட்" படத்தின் நயன்தாரா கதாபாத்திர போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.80 கோடி வசூல் செய்தது.
- படம் நாளைமுதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
சமீப காலங்களாகவே வித்தியாசமாக கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார் நடிகர் மம்மூட்டி. அந்த வகையில், அறிமுக இயக்குநர் ஜித்தின் கே ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி, விநாயகன், காயத்ரி அர்ஜூன், ரஜிஷா விஜயன், ஸ்ருதி ராமசந்திரன், மாளவிகா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'களம்காவல்'.
இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வில்லனாக மம்மூட்டி நடித்திருப்ப இப்படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.80 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நாளைமுதல் Sony LIV ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
- அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார்.
தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரும், நடிகருமான பாக்யராஜ், சினிமாவிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவு மற்றும் அவரது பிறந்தநாளையொட்டி நேற்று முன் தினம் விழா நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்த் கலந்துகொண்டு பாக்யராஜை வெகுவாக பாராட்டினார். இதற்கிடையே பாக்யராஜ் நேர்காணல் ஒன்று பங்கேற்று பேசியுள்ளார். அதில் ரஜினியின் தளபதி படத்திற்கு தான் யோசித்த வேறு மாதிரியான கிளைமாக்ஸ் குறித்து பாக்யராஜ் மனம் திறந்துள்ளார்.
1991 இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி திரைப்படம் வெளியாகி கிளாசிக் அந்தஸ்து பெற்றது அனைவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் துரியோதனன், கர்ணன் நட்பை இன்ஸபிரேசனாக கொண்டு அர்ஜுனனாக அரவிந்த் சாமியை வைத்து தளபதி கதையை மணிரத்னம் அமைத்திருப்பார்.
இந்த படத்தின் தாதா மம்மூட்டி தனக்கு இடையூறு தரும் கலெக்டர் அரவிந்த் சாமியை கொல்ல வேண்டும் என தனது உயிர் நண்பன், தளபதி ரஜினியிடம் கூறுவார். ஆனால் மம்மூட்டி இவ்வாறு சொல்வதற்கு முன் ரஜினி தனது தாயை சந்தித்து, அரவிந்த் சாமி தனது தம்பி என்பதை அறிந்துகொள்வார்.
எனவே மம்மூட்டி கேட்கும் போது தன்னால் கொலை செய்ய முடியாது என ரஜினி கூறுவார். ஒரு கட்டத்தில் அவன் என் தம்பி, எனது உயிரை எடுத்துக்கோ, நான் உன் உயிர் நண்பன் ஆனால் அவனை கொல்ல சொல்லாதே என மம்மூட்டி இடம் கூற, ரஜினியின் நட்பை பார்த்து அவர் பூரித்துப்போவார்.
நண்பனுக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டு சரணடையலாம் என அரவிந்த் சாமியை பார்க்க இருவரும் போக, வில்லன் அந்நேரம் வந்து துப்பாக்கியால் சுட்டவுடன் மமூட்டி ரஜினியின் கண் முன்னேயே உயிரிழப்பார். இது கதை.

நேர்காணலில் பாக்கியராஜ் கூறியதாவது, தளபதி படம் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றியது. அவன் என் தம்பி, அவனை கொல்ல முடியாது என ரஜினி செல்லும்போது அந்த தேவா கதாபாத்திரத்தின் உயிர் நட்பு என்பது விழுந்துவிடுகிறது.
மம்மூட்டி சொன்னவுடன் எதுவும் சொல்லாமல் ரஜினி சிறு புன்னகையுடன் கையை நீட்டி துப்பாக்கியை வாங்கிக்கொண்டு தம்பியை கொல்ல புறப்பட வேண்டும்.
ரஜினி சென்றவுடன் அங்கு வரும் உண்மை தெரிந்த மற்றொருவன் இதை மாமூட்டியிடம் சொல்ல, மம்மூட்டி தனது நண்பன் தனக்காக தம்பியையே கொல்ல சென்றிருக்கிறான் என நெகிழ வேண்டும்.
ரஜினியை தடுக்க மம்மூட்டி கிளம்ப வேண்டும். மம்மூட்டி செல்லும் வழியில் வில்லன் கும்பல் அவரை இடைமறித்து தடுக்க வேண்டும். இப்போது ரஜினி அரவிந்த் சாமியை கொன்றுவிடுவாரா, அல்லது மம்மூட்டி வில்லன் கும்பலை சமாளித்து ரஜினியை சரியான நேரத்தில் தடுத்து நிறுத்துவாரா என்ற விறுவிறுப்பு படம் பார்பவர்களிடையே ஏற்படும்.
இதை ஏன் மணிரத்னம் யோசிக்கிக்கவில்லை என்று தெரியவில்லை. நீண்ட காலத்துக்கு பிறகு ரஜினியின் வீட்டுக்கு சென்று பேசிக்கொண்டிருந்தபோது இந்த மாற்று கிளைமாக்ஸை அவரிடம் கூறினேன்.
அவர் உடனே எழுந்து வந்து என் கையைப் பற்றிக்கொண்டு எப்படி இதை யோசித்தீர்கள் என்று வியந்தார். ஒரு திரைக்கதை எழுத்தாளனாக படம் பார்க்கும்போது எனக்கு இயல்பாகவே இது தோன்றியது. அந்த தேவா கதபாத்திரம் அந்த இடத்தில் சட்டென விழுந்துவிட்டதே என்று தோன்றியது என்று ரஜினியிடம் கூறினேன்" என்று தெரிவித்தார்.
- நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம்.
- 'Where the Forest Meets the Sea' என்ற சிறப்புத் திரையிடல் இதுவாகும்.
மலையாளத் திரையுலகின் மெகா ஸ்டார் மம்மூட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 'பிரம்மயுகம்'.
இந்நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 12, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள புகழ்பெற்ற ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்பட உள்ளது.
உலகளவில் நாட்டுப்புறக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட திகில் படங்களுக்காக நடத்தப்படும் 'Where the Forest Meets the Sea' என்ற சிறப்புத் திரையிடல் இதுவாகும்.
ஆஸ்கர் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படும் மம்மூட்டியின் முதல் திரைப்படம் இதுவாகும். மேலும் இந்த பிரிவில் திரையிடப்பட தேர்வான முதல் இந்திய படம் இதுவாகும்.
இது குறித்து இயக்குநர் ராகுல் சதாசிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "நான் கேட்டு வளர்ந்த கதைகள், என்னுள் இருந்த பயங்கள் மற்றும் மௌனங்களின் வெளிப்பாடே பிரம்மயுகம்.
மொழி மற்றும் நிலங்களைக் கடந்து இந்தப் படம் அங்கீகரிக்கப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
பிரம்மயுகம் படத்துடன் புகழ்பெற்ற திகில் திரைப்படங்களான 'Midsommar', 'The Witch' மற்றும் 'The Wicker Man' போன்ற படங்களுடன் இதில் திரையிடப்படுகிறது.
- PATRIOT படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
- PATRIOT படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மலையாள திரையுலகின் 2 பெரும் சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர் ஒன்றாக இணைந்து நடிக்கும் படம் PATRIOT.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஃபகத் ஃபாசில், ரேவதி, நயன்தாரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 130 நாட்கள் இப்படத்தில் படப்பிடிப்பு நடந்தது. மம்மூட்டியும் மோகன்லாலும் ஒன்றாக இணைந்து நடிப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
- மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார்.
நடிகரும், இயக்குநருமான ஸ்ரீனிவாசன் மலையாளம், தமிழ் உள்ளிட்ட 225-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி உள்ளார். தமிழில் லேசா லேசா, புள்ளக்குட்டிக்காரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.
தேசிய திரைப்பட விருதுகள், கேரள மாநில திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் பெற்றவர் ஆவார். 69 வயதான இவர் கடந்த 20 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, சூர்யா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீனிவாசனின் சொந்த ஊரான எர்ணாகுளம் மாவட்டத்தின் உதயம்பேரூரில் உள்ள அவரது வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று உடல் அடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் ஸ்ரீனிவாசனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியப் நடிகர் பார்த்திபன், மம்மூட்டியைச் சந்தித்து ஸ்ரீனிவாசனுடனான நினைவுகள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பார்த்திபன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒரு நீண்ட தூக்கத்தின் துக்கத்தை , ஒரு சிறிய தூக்கம் லேசாய் களைந்தெறிய, கண்களைத் துடைத்துக் கொண்டு அடுத்ததில் விரைகிறோமோ?
துக்க வீட்டில் நான் வெறுமையுடன் உரையாடிக் கொண்டிருப்பதை தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் மம்மூட்டி சாரிடம் சொல்லியிருப்பார் போல, ஶ்ரீனிவாசனின் இறுதி யாத்திரைக்கு நெருப்புப் படுக்கை தயாராகிக் கொண்டிருக்க ,அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த என்னால், அந்த உஷ்ணத்தை ஶ்ரீனயின் உடல் உணராது என்பதும் சுட்டது.
அதற்கு மேல் அங்கிருக்க இயலாமல் வருத்தத்துடன் வெளியேற, வாசலில் மம்முட்டியின் தயாரிப்பாளர் ஆறுதலாய் அழைத்துச் சென்றார்.
ஶ்ரீனியின் நினைவுகளை இருவரும் அசை போட்டபடி மாலைவரை அவரது அன்பான உபசரிப்பில்!!!நட்பிற்கில்லை மொழி பேதங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. தள்ளுமலா, ஆலப்புழா ஜிம்கானா, அனுராக கரிக்கின் வெள்ளம் போன்ற படங்களை இயக்கிய மலையாளத் திரைத்துறையின் முக்கிய இளம் இயக்குநரான கலித் ரஹ்மான் இப்படத்தை இயக்குகிறார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'உண்டா' படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி இணையும் இரண்டாவது படம் இதுவாகும். நடிகர் உன்னி முகுந்தனின் ஆக்ஷன் த்ரில்லர் படமான 'மார்கோ' படத்தை தயாரித்த கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஹ்மான் இயக்கும் இந்தப் படத்திற்கு நியோக் திரைக்கதை எழுதுகிறார் .
நடிகர்கள், மற்ற தகவல்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் ஸ்ரீனிவாசன் நடித்துள்ளார்.
- தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் ஸ்ரீனிவாசன் கவர்ந்தவர்.
மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் காலமானார். 69 வயதான ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
225 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சமூகத்தில் நடக்கும் விஷயங்களை தனது காமெடி வாயிலாக வெளிப்படுத்தி ரசிகர்களால் கவரப்பட்டவர்.
மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள அவர், தனது நகைக்சுவை நடிப்பால் தமிழக ரசிகர்களையும் கவர்ந்தவர். திரைப்பட துறையில் நடிப்பு மட்டுமின்றி, பல படங்களில் இயக்குனராகவும் இருந்துள்ளார். மேலும் திரைக்கதை எழுத்தாளராகவும் திகழ்ந்தார். இவர் இயக்கிய பல படங்கள் மாநில மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீனிவாசன் உயிரிழந்த பிறகு மம்முட்டி குறித்தும் மதம் குறித்தும் அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் "தனக்கு திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆனால் அதற்கான அடிப்படை செலவுக்குக் கூட என்னிடம் பணம் இல்லை. அப்போது அப்போது இன்னசென்ட் (குணசித்திர நடிகர்) தனது மனைவி ஆலிஸின் வளையல்களை அடகு வைத்து ரூ. 400 கொடுத்து உதவினார்
தனது தாயார், இந்து முறையில் தாலி கட்டவேண்டும் என்று வற்புறுத்தினார். அதற்காக மம்முட்டியிடம் தாலிக்குத் தங்கம் வாங்க ரூ.2000 கேட்டேன். அவரும் தந்து உதவினார். அந்த பணத்தில் தாலி வாங்கி, அடுத்த நாள் நானும் விமலாவும் ரெஜிஸ்டர் ஆபீசில் திருமணம் செய்து கொண்டும்.
என் திருமணத்திற்கு ரூ.400 கொடுத்தவர் ஒரு கிறிஸ்தவர். ஒரு முஸ்லிம் மம்மூட்டி தாலி வாங்க கொடுத்த பணத்தால் என் இந்து மனைவிக்கு தாலி கட்டினேன். என்ன மதம், யாருடைய மதம், அது எங்கே இருக்கிறது? வாழ்க்கையில் மதம் முக்கியமில்லை, மனிதனும் மனிதநேயமும் தான் முக்கியம்" என்று ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
நடிகர் ஸ்ரீனிவாசன் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் கூறிய இந்த மனிதநேயக் கதை நமக்கு வழிகாட்டும் விளக்காக இருக்கும் என்றால் அது மிகையாகாது.






