உள்ளூர் செய்திகள் (District)
தவறவிட்ட நகையை பெண்ணிடம் ஒப்படைத்த டி.எஸ்.பி., தேன்மொழிவேல்.

தவறவிட்ட நகையை பெண்ணிடம் ஒப்படைத்த போலீசார்

Published On 2022-05-29 08:33 GMT   |   Update On 2022-05-29 08:33 GMT
டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உரிமையாளரான லட்சுமியிடம் தங்க செயினை ஒப்படைத்தார்.

உடுமலை:

உடுமலை காந்திபுரத்தைச்சேர்ந்தவர் லட்சுமி. சம்பவத்தன்று வெங்கடகிருஷ்ணா ரோட்டிலுள்ள ஓட்டலுக்கு உணவு வாங்க வந்த போது, தனது பர்சில் வைத்திருந்த 3 பவுன் தங்கச்செயினை தொலைத்து விட்டார்.

இதுகுறித்து உடுமலை போலீசில் புகார் கொடுத்ததையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சி.சி.டி.வி. கேமரா பதிவை ஆய்வு செய்து, தங்கச்செயினை கண்டு பிடித்தனர். அதனை டி.எஸ்.பி., தேன்மொழிவேல், உரிமையாளரான லட்சுமியிடம் ஒப்படைத்தார்.

Tags:    

Similar News