உள்ளூர் செய்திகள் (District)
பூலுவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
- உள்நோயாளிகள், குளிரூட்டப்பட்ட மருந்துகள் தேவை இருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார்,
- மகப்பேறு தாய்மார்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூலுவப்பட்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் சமீரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நோயாளிகள் வருகை, மருந்துகள் இருப்பு மற்றும் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகள், குளிரூட்டப்பட்ட மருந்துகள் தேவை இருப்பு உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தார், வேறு ஏதும் மருந்துகள் தேவைப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
மகப்பேறு தாய்மார்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மகப்பேறு தாய்மாருக்கு அரசு சார்பில் மகப்பேறு பெட்டகம் வழங்கினார். ஆய்வின் போது சுகாதார துறை அருணா, பிளாக் சூப்பர்வைசர் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.