உள்ளூர் செய்திகள் (District)
- பிரதான் மந்திரி கிராம டிஜிட்டல் சக்சரா அபியான் திட்டத்தின் கீழ் இலவச கணினி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
- ஆன்லைன் தேர்வு எழுதப்பட்டு மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும்.
திருவோணம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், அக்கரைவட்டம் ஊராட்சியில் மத்திய அரசின் பிரதான் மந்திரி கிராம டிஜிட்டல் சக்சரா அபியான் திட்டத்தின் கீழ் இலவச கணினி பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
பயிற்சியில் கிராமப்புற மக்கள் டிஜிட்டல் மற்றும் கணினி கல்வி மேம்பாடு செய்முறை விளக்க பயிற்சி டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தி பணமில்லா பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் முறையில் ஆன்லைன் தேர்வு எழுதப்பட்டு மத்திய அரசின் சான்றிதழும் வழங்கப்படும்.
இதில் அக்கரைவட்டம் ஊராட்சி மன்ற தலைவர், ஆர்.கண்ணையன் தலைமையேற்று கணினி பயிற்சியினை துவங்கி வைத்தார். மேலும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மற்றும் பொதுமக்கள் என சுமார் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்,