உள்ளூர் செய்திகள் (District)

சாயல்குடி பேரூராட்சி சார்பில் தேசியக்கொடிகள் வழங்கல்

Published On 2022-08-13 08:22 GMT   |   Update On 2022-08-13 08:22 GMT
  • சாயல்குடி பேரூராட்சி சார்பில் தேசியக்கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடந்தது.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேசிய கொடிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் மணிமேகலை பாக்கியராஜ், செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி கண்ணப்பன் முன்னிலை வகித்தனர்.

இதில் கவுன்சிலர்கள் ஆபிதா அனிபா அண்ணா, குமரையா, மாணிக்கவேல், அமுதா, கோவிந்தன், இந்திரா செல்லத்துரை உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News