இந்தியா (National)

சுவர் ஏறி குதித்த அகிலேஷ் யாதவ் - காரணம் என்ன?

Published On 2023-10-11 09:19 GMT   |   Update On 2023-10-11 10:05 GMT
  • சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
  • அவருக்கு மரியாதை செலுத்தச் சென்ற அகிலேஷ் யாதவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

லக்னோ:

சுதந்திரப் போராட்ட வீரரான ஜெயப்பிரகாஷ் நாராயணின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் ஜெய பிரகாஷ் நாராயண் சர்வதேச மையம் செயல்பட்டு வருகிறது.

இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல் மந்திரியுமான அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்துவதற்காக அங்கு

தொண்டர்களுடன் திரண்டார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அங்கு தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டு கதவும் மூடப்பட்டது. இதைக் கண்டித்து சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் கோஷமிட்டனர்.

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் அருகிலுள்ள சுவர் மீது ஏறி குதித்து உள்ளே சென்று ஜெயப்பிரகாஷ் நாராயணுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News