இந்தியா
அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு
- அசாமில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
- இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கம் மோரிகன் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தெரியவில்லை.