கிரிக்கெட் (Cricket)
கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிப்பு
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு.
- இந்திய அணியின் ஆகாஷ் தீப் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா வங்கதேசம் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியில் உணவு இடைவேளை வரை வங்கதேசம் அணி 2 விக்கெட்டுகளை இழந்து வெறும் 74 ரன்களையே எடுத்திருந்தது.
இதன்பிறகு ஆட்டம் துவங்கிய நிலையில், வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்த போது போதிய வெளிச்சம் இல்லாததால், முதல்நாள் போட்டி முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.
முதல் நாளில் வங்கதேசம் அணியின் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகுர் ரகுமான் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா சார்பில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.