கிரிக்கெட் (Cricket)

ஆப்கானிஸ்தானிடம் தோற்றதற்கும் இந்தியா தான் காரணம் என கூறுவார்கள்- முன்னாள் இங்கி, வீரர்களை சாடிய கவாஸ்கர்

Published On 2025-02-27 20:49 IST   |   Update On 2025-02-27 20:49:00 IST
  • அவர்கள் தோல்வியை சந்தித்தாலே ஏதாவது சாக்கு வைத்திருப்பார்கள்.
  • நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை எதிரணி சிறப்பாக இருந்தது என்று அவர்களால் சாக்கு சொல்ல முடியாது.

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலிருந்து ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து பரிதாபமாக வெளியேறியது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

இதற்கிடையே இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. அங்கே வங்கதேசம், பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.

ஆனால் துபாயில் ஒரே மைதானத்தில் விளையாடுவதால் இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகம் இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் ஆகியோர் விமர்சித்தார்கள். அதே போல கேப்டன் ஜோஸ் பட்லரும் இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள சாதகம் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிடம் தோற்று வெளியேறியதற்கு கூட இந்தியா தான் காரணம் என்று இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் தெரிவிப்பார்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இப்போதும் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் நாளை மறுநாள் காலை வந்து புலம்பத் துவங்குவார்கள். அவர்கள் தோல்வியை சந்தித்தாலே ஏதாவது சாக்கு வைத்திருப்பார்கள். ஆனால் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை எதிரணி சிறப்பாக இருந்தது என்று அவர்களால் சாக்கு சொல்ல முடியாது.

மாறாக எல்லாவற்றையும் குற்றம் சொல்லத் துவங்குவார்கள். அவர்கள் இந்தியாவை குறை சொல்லத் துவங்குவார்கள். ஏனெனில் இந்தியா அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடுகிறது. நாங்கள் ஏன் அவ்வாறு விளையாடவில்லை? என்று சொல்வார்கள்.

எனக் கூறினார். 

Tags:    

Similar News