தமிழ்நாடு (Tamil Nadu)

பிரதமர் மோடிக்கு பரிசு பெட்டகம் வழங்கிய மு.க.ஸ்டாலின்

Published On 2024-09-27 07:03 GMT   |   Update On 2024-09-27 07:03 GMT
  • பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
  • இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சாணக்கியாபுரத்தில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்திற்கு சென்று தங்கினார்.

இன்று காலையில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை சென்று சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி அவரை இன்முகத்துடன் வரவேற்றார். பிரதமருக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரஸ்பர வணக்கம் தெரிவித்துக் கொண்டார். அதன் பிறகு பிரதமருடன் அமர்ந்து பேசினார்.

 

பிரதமர் மோடி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.

தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தடம் பெட்டகத்தை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பரிசளித்தார்.

நெல்லையில் தயாரிக்கப்படும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழைநார் கூடை, பனை ஓலை பெட்டியை பிரதமர் மோடிக்கு பரிசளித்தார்.

இதைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடியை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Tags:    

Similar News