இந்த வழித்தடத்தில் மட்டும் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
- அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களால் பொது போக்குவரத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுவது மின்சார ரெயில்களே. அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு மின்சார ரெயில்களில் பயணம் செய்து பணிக்கு சென்று வருகின்றனர்.
மின்சார ரெயில்களால் பெரும்பாலும் நன்மை அடையும் மக்களுக்கு சில சமயங்களில் அசவுகரியங்களும் ஏற்படுகிறது.
அந்த வகையில், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக காலை 9.15 முதல் மாலை 3.15 மணி வரை ரெயில்கள் இயங்காது என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பொன்னேரி, எண்ணூர் வரை அதிகமான சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.