தமிழ்நாடு
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது
- ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தினர்.
- சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார்கைது செய்தனர்.
அ.தி.மு.க. நிர்வாகி மீதான தாக்குதலை கண்டித்து அக்கட்சியினர் திருக்கழுக்குன்றத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள வந்த அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.வினரை கைது செய்த காவல்துறையை கண்டித்து ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட ஜெயக்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார்கைது செய்தனர்.