தமிழ்நாடு

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திய ஜாபர் சாதிக்- அமலாக்கத்துறை

Published On 2025-02-27 15:28 IST   |   Update On 2025-02-27 15:28:00 IST
  • சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.
  • ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது.

ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

அப்போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்த பணத்தை இயக்குனர் அமீர் உள்ளிட்டோரின் வங்கிக் கணக்குகளில் ஜாபர் சாதிக் செலுத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலின் மூளையாக ஜாபர் சாதிக் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்துள்ளார்.

ஜாபர் சாதிக் திமுகவின் நிர்வாகியாக இருந்ததால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமின் வழங்கக்கூடாது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News