விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 நாள் பயிற்சி
- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
- வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் அமலோற்பவ நாதன் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுவை குரும்பாப்பட்டில் உள்ள பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், உற்பத்தி யாளர்கள் சங்கங்களுக்கு திறன்மிகு மேலாண்மை பற்றிய பயிற்சி 5 நாட்கள் நடக்கிறது.
ஜெய்ப்பூரில் இயங்கும் மத்திய அரசின் தேசிய வேளாண்மை சந்தைப்படுத்துதல் நிறுவன நிதி உதவியுடன் நடைபெறும் இந்த பயிற்சி முகாமின் தொடக்கவிழா இன்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.
நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன், ஜெய்ப்பூர் தேசிய வேளாண்மை சந்தைப் படுத்துதல் நிறுவனத்தின் துணை இயக்குநர் சிங் நோக்க உரையாற்றினர். வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் அமலோற்பவ நாதன் நன்றி கூறினார்.
பயிற்சியில் புதுவையை சேர்ந்த 5, காரைக்காலை சேர்ந்த ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 36 உறுப்பினர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.