புதுச்சேரி

கலையரங்கத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் கலையரங்கம்

Published On 2023-10-29 05:49 GMT   |   Update On 2023-10-29 05:49 GMT
  • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்
  • கெங்கைவராக நதீஸ்வரருக்கு பால்,தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுவையை அடுத்த திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவில் காசியைவிட வீசம் அதிகம் என போற்றப்படுகிறது.

இங்கு காசியில் நடைபெறுவது போல் சனிக்கிழமை தோறும் சங்கராபரணி ஆற்றங்கரையில் கங்கா ஆரத்தி நடந்தது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அகல் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு செய்தனர்.

ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அன்னாபிஷேகம் நடந்தது. கெங்கைவராக நதீஸ்வரருக்கு பால்,தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து கெங்கைவராக நதீஸ்வரருக்கு அன்னம் மற்றும் விவசாய நிலங்களில் விளைவிக்கப்பட்ட கத்திரிக்காய், அவரைக்காய், பீர்க்கங்காய், பீன்ஸ் சுரக்காய், வெண்டைக்காய், முருங்கக்காய் உள்ளிட்ட காய்கறிகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

முன்னதாக திருக்காஞ்சி கோவிலுக்கு புதிய கலையரங்கத்தை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் சொந்த செலவில் கட்டியுள்ளார். கலையரங்கத்தை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் திறந்து வைத்தார்.

Tags:    

Similar News