புதுவை சபாநாயகர் செல்வத்துக்கு பிரதமர் மோடி கடிதம்
- விஞ்ஞானிகளை பாராட்டுவதில் தேசம் ஒன்றாக நிற்கிறது
- சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சந்திரயான்-3 உலக அளவில் முதன்முதலாக நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த வரலாற்று வெற்றியை பாராட்டி சட்டசபையில் பிரதமர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட வாழ்த்து செய்தியை சபாநாயகர் பிரதமருக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி சபாநாயகர் செல்வத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான்-3 அற்புதமான வெற்றி தொடர்பான உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில், நமது தேசத்தை நிலவுக்கு கொண்டுசென்ற சந்திரப் பயணத்தை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. இஸ்ரோ மற்றும் நமது விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் கடின உழைப்பு, ஆர்வம் இந்தியாவின் நிலையை உலகளாவிய அளவில் மேம்படுத்தியுள்ளன.
விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது விண்வெளித்துறையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பல நாடுகள் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் உதவி வருகின்றது. முதல் முயற்சியில் செவ்வாய் கிரகத்தில் சக்திரயான் 3 தரையிறங்கியது மற்றும் மூலம் இந்தியாவை உலகம் தீவிரமாக கவனித்துள்ளது.
ஒவ்வொரு இந்தியரும் இதனை தனது சொந்த வெற்றியாக எடுத்துக் கொண்டனர். இந்த சந்திரப்பயணத்திற்கான உங்கள் ஆதரவும் உற்சாகமும் நமது விஞ்ஞானிகளை போற்றுவது ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக நிற்கிறது என்பதைக் காட்டுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது,