search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    16 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திருப்பம்... பாதிக்கப்பட்டவரே மாறியதால் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியானார்
    X

    16 ஆண்டுகளாக நடந்த வழக்கில் திருப்பம்... பாதிக்கப்பட்டவரே மாறியதால் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதியானார்

    • காயம் பட்டிருந்த போது சொன்ன வாக்குமூலத்திற்கும் 16 ஆண்டுகளுக்கு பிறகு சொன்ன வாக்குமூலமும் முற்றிலும் மாறுபட்டு இருந்ததை பார்த்து கோர்ட்டே அதிர்ச்சி அடைந்தது.
    • பாதிக்கப்பட்டவரே மாறி விட்டதால் குற்றம் சாட்டப்பட்டவரையும் நிராபராதியாக கருதி விடவேண்டிய சூழல் கோர்ட்டுக்கு ஏற்பட்டது.

    சென்னை, செப்.27-

    பரபரப்பை ஏற்படுத்தும் கொலை வழக்குகளில் கூட சாட்சியங்கள் மாறிவிடுவ தால் குற்றவாளிகள் விடு தலை பெறுவதை கேள்விப் பட்டிருப்போம்.

    ஆனால் பாதிக்கப்பட்ட வரே மாறியதால் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி யாக மாறிய சம்பவம் சென் னையில் அரங்கேறி இருக்கிறது.

    16 ஆண்டுகளுக்கு முன்பு... அதாவது கடந்த 2008-ம் ஆண்டு சென்னை எம்.கே.பி.நகரைச் சேர்ந்த இப்ராமின் கனி (39) அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் மதன் கால்பந்து விளையாடியபோது பந்து இப்ராமினின் மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் இப்ராமின் மதனை சுற்றி வளைத்து தாக்கி இருக்கி றார்.

    அப்போது பாலகிருஷ் ணன் கெஞ்சி தனது மகனை மீட்டு இருக்கிறார். இப்ரா மின் கனி தனது பைக்கில் இருந்து பெட்ரோலை பிராந்தி பாட்டிலில் நிரப்பி பாலகிருஷ்ணன் மீது ஊற்றி தீ வைத்ததாகவும் கூறப்படு கிறது. பலத்த தீக்காயம் அடைந்த பாலகிருஷ்ணன் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். அவருக்கு மார்பு, முதுகு மற்றும் கைகளில் பலத்த தீக்காயங்களும் ஏற்பட்டு இருந்தது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாலகிருஷ் ணனிடம் இருந்து மரண வாக்கு மூலம் பெற்று கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இப்ராமின் கனி கைது செய்யப்பட்டார். தனது குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரி விக்கப்பட்டது. பாலகிருஷ் ணனின் சட்டைப் பையில் இருந்து எரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஆதாரமாக இருந்தது.

    இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளாக மதன் உள்பட 5 பேரை போலீசார் பதிவு செய்து இருந்தனர். வழக்கு விசாரணையின் போது அந்த 5 சாட்சிகளும் பிறள் சாட்சியம் அளித்தனர். இதற்கிடையில் பாதிக்கப் பட்ட பாலகிருஷ்ணனும் குறுக்கு விசாரணையின் போது "அய்யா என் ஆடு திருட்டு போகலை அப்படி கனவுதான் கண்டேன்" என்று சொல்லும் வடிவேலு பட காமெடியை போல் மாறிவிட்டார்.

    அய்யா, நான்தான் குடிபோதையில் இருந்தேன். சட்டைப் பையில் பிராந்தி பாட்டிலை வைத்திருந்தேன். பைக்கின் டயரில் எரிந்த தீப்பொறி பறந்து விழுந்த தில் என் மீதும் தீ பிடித்து கொண்டது என்றார்.

    காயம் பட்டிருந்த போது சொன்ன வாக்குமூலத்திற் கும் 16 ஆண்டுகளுக்கு பிறகு சொன்ன வாக்குமூலமும் முற்றிலும் மாறுபட்டு இருந்ததை பார்த்து கோர்ட்டே அதிர்ச்சி அடைந்தது.

    பாதிக்கப்பட்டவரே மாறி விட்டதால் குற்றம் சாட்டப் பட்டவரையும் நிராபராதி யாக கருதி விடவேண்டிய சூழல் கோர்ட்டுக்கு ஏற்பட்டது. குற்றம் சாட்டப் பட்டவரே குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்த போதும் அரசு தரப்பு சாட்சியங்கள் மாறியது சந்தேகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கோர்ட்டு கூறி உள்ளது. இருப்பினும் வழக்கின் போக்கால் குற்றம் சாட்டப் பட்டவரை கோர்ட்டு விடுவித்தது.

    Next Story
    ×