என் மலர்
உள்ளூர் செய்திகள்

கரிவரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

- கரிவராஜ பெருமாள் கோவில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த கோவில் புதூரில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவராஜ பெருமாள் கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது.
மேலும் கோவி லில் திருப்பணிகள் நடை பெற்று வருவதால் விநாயகர் கருத்திருமராயப் பெருமாள் எனும் ஸ்ரீ கரிவரத வரதராஜ பெருமாள். கருடாழ்வார். ஆஞ்சநேயர். கிருஷ்ணர் பாமா ருக்மணி. மற்றும் கோபுரங்கள் அத்தி மரத்தி னால் சிலைகள் அமைத்து பாலாலயம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
புஞ்சை புளியம்பட்டி கரிவராஜ பெருமாள் கோவில் இன்று புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்பு கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து பொதுமக்கள் தாசர்களுக்கு அரிசி பருப்பு, புளி உள்ளி ட்ட பொருட்களை கொடுத்து வழிபட்டனர்.