search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜி 20 மாநாடு காரணமாக மாமல்லபுரம் விழாக்கோலம்- தேசிய கொடி வண்ணத்தில் விளக்குகள் அமைப்பு
    X

    ஜி 20 மாநாடு காரணமாக மாமல்லபுரம் விழாக்கோலம்- தேசிய கொடி வண்ணத்தில் விளக்குகள் அமைப்பு

    • மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் செல்லும் பகுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது.
    • தொல்லியல்துறை சார்பில் புதிதாக புல்வெளி அமைத்தல், புராதன சின்னங்கள் பகுதியில் புதிய மணல் வெளி அமைத்தல்.

    மாமல்லபுரம்:

    சென்னையில் வருகிற 31-ந் தேதி முதல் பிப்ரவரி 2-ந் தேதி வரை ஜி20 மாநாடு நடை பெறுகிறது.

    இதில் பங்கேற்கும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100-க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1-ந்தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்க்கிறார்கள். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் அவர்கள் செல்லும் பகுதிகள் அனைத்தையும் சுத்தமாக வைக்கும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சாலையோர விளக்கு கம்பங்களில் தேசிய கொடியின் வண்ணத்தில் சீரியல் விளக்குகள், சுவரில் தமிழ் கலாச்சார வரைபடங்கள் என அலங்கார பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தொல்லியல்துறை சார்பில் புதிதாக புல்வெளி அமைத்தல், புராதன சின்னங்கள் பகுதியில் புதிய மணல் வெளி அமைத்தல், இரும்பு கிரில்களுக்கு வண்ணம் தீட்டுதல், இரவு ஒளி விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதனால் விழாக்கோலம் காண மாமல்லபுரம் தயாராகி வருகிறது.

    Next Story
    ×