என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜர்
Byமாலை மலர்22 March 2017 12:34 AM GMT (Updated: 22 March 2017 12:34 AM GMT)
டெல்லி கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானும் தொடர்ந்த அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார்.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகளும், பாலியல் குற்றங்களும் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் மீது டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் டெல்லி கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அவருடைய வக்கீல் மனு தாக்கல் செய்தார். ஆனால், நேற்று அம்மனுவை ஏற்காத மாஜிஸ்திரேட்டு அபிலாஷ் மல்கோத்ரா, கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வலியுறுத்தினார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார். அவரை ரூ.10 ஆயிரத்துக்கான தனிநபர் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சில மாதங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் நிதி முறைகேடுகளும், பாலியல் குற்றங்களும் நடந்திருப்பதாக குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக அவர் மீது டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் டெல்லி கிரிக்கெட் சங்கமும், கிரிக்கெட் வீரர் சேதன் சவுகானும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக விலக்கு அளிக்குமாறு அவருடைய வக்கீல் மனு தாக்கல் செய்தார். ஆனால், நேற்று அம்மனுவை ஏற்காத மாஜிஸ்திரேட்டு அபிலாஷ் மல்கோத்ரா, கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வலியுறுத்தினார்.
இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் கோர்ட்டில் ஆஜரானார். அவரை ரூ.10 ஆயிரத்துக்கான தனிநபர் ஜாமீனில் விடுவிக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X