search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மார்ச் 2-ஆம் தேதி இந்திய பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்
    X

    மார்ச் 2-ஆம் தேதி இந்திய பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்

    • வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும்.
    • மார்ச் 1-ந்தேதி மனுவை திரும்பப் பெற கடைசி நாளாகும்.

    இந்திய பார் கவுன்சில் தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் மார்ச் 2-ந்தேதி நடைபெறும் என, தலைவர் மனன் குமார் மிஷ்ரா தெரிவித்துள்ளார்.

    வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாளாகும். மார்ச் 1-ந்தேதி வரை வேட்பு மனுவை திரும்பப் பெறலாம். தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் மற்றும் துணைத் தலைவரின் பதவிக்காலம் இரண்டு வருடம் ஆகும்.

    சீனியர் வழக்கறிஞரான மிஷ்ரா, மாநிலங்களவை எம்.பி.யாகவும் உள்ளார். இவர் கடந்த ஆறுமுறை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக இருக்கும் மூத்த வழக்கறிஞர் எஸ். பிரபாகரன் கடந்த மூன்று வருடங்களாக அப்பதவியில் இருந்து வருகிறார்.

    Next Story
    ×