search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது!
    X

    குடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது!

    • மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.
    • குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

    உத்தரப் பிரதேசத்தில் நடந்த திருமணத்தில் குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் தோழிக்கு மாலை சூடுய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பரேலியில் நவ்க்வா பகவந்த்பூர் பகுதியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமேடையில் மணமகள் ராதா அமர்ந்திருக்க, மணமகன் ரவீந்திரகுமார் (26) தள்ளாடியபடி மேடைக்கு வந்தார். குடிபோதையில் இருந்த ரவீந்தனர்குமார் மணப்பெண் ராதாவுக்கு மாலை அணிவிப்பதற்கு பதிலாக, பக்கத்தில் இருந்த மணமகளின் தோழிக்கு மாலையை அணிவித்தார்.

    இதனால் திருமணத்துக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ரவீந்தரகுமாரின் செயலால் கோபமடைந்த ராதா, அவரை திருமணம் செய்யமாட்டேன் என்று கத்திக் கூச்சலிட்டார். சமதானப்படுத்த முயன்றும் குடிகாரனை திருமணம் செய்யமாட்டேன் என்று அவர் உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

    இதன் பின்னர் தகராறு அதிகரித்து இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை தொடங்கியது. இரு தரப்பினரும் ஒருவரையொருவரை நோக்கி நாற்காலிகளை வீசி எறிந்தனர். அதன் பிறகு போலீசார் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.

    மணமகன் மீது ராதா போலீசில் புகார் கொடுத்தார். மேலும் மணமகளின் தந்தை திருமணத்திற்கு முன்பு ரூ.2.5 லட்சமும், திருமண நாளில் ரூ.2 லட்சமும் வரதட்சணை கொடுத்துள்ளார். எனவே மணமகன் ரவீந்திரகுமார் உட்படகுடிபோதையில் மணப் பெண்ணுக்கு பதிலாக தோழிக்கு மாலை அணிவித்த மணமகன் கைது

    குடும்பத்தினர் 5 பேர் மீது வரதட்சணை துன்புறுத்தல், பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×