search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மகா சிவராத்திரி தினமான இன்றுடன் கும்பமேளா நிறைவு - சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு
    X

    மகா சிவராத்திரி தினமான இன்றுடன் கும்பமேளா நிறைவு - சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு

    • திரிவேணி சங்கமத்தில் கோடிக் கணக்கானோர் புனித நீராடியுள்ளனர்.
    • பிரயாக்ராஜில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா இன்றுடன் (பிப்ரவரி 26) நிறைவு பெறுகிறது. இதையடுத்து கும்ப மேளா நிறைவு விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க நகருக்குள் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஏராளமான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

    கடந்த ஜனவரி 13-ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கானோர் பங்கேற்று புனித நீராடினர். தினமும் லட்சக் கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் வருகை தந்த நிலையில், அவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். பொது மக்கள், பக்தர்களுடன் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, மத்திய அமைச்சர்கள், திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர்.

    இதுவரை 63 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளதாக உத்தரபிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. இதுதவிர உத்தரபிரதேச மாநில சிறைக்கைதிகளும் புனித நீராட வசதியாக, திரிவேணி சங்கம புனிதநீர் மத்திய சிறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த 44 நாட்களாக நடந்து வந்த மகா கும்பமேளா, 45-வது நாள் மகா சிவராத்திரி தினமான இன்றுடன் (புதன்கிழமை) நிறைவுபெறுகிறது. மகா கும்பமேளா நிறைவு பெறுவதையொட்டி, நிறை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    கங்கைக் கரையில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முதலே லட்சக் கணக்கானோர் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுக்க தொடங்கினர். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவுநாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரயாக்ராஜிக்கு வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×