என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
- ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது.
- இதனால் வேறு தலைமை பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ விண்ணப்பம் வெளியிட்டுள்ளது.
இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பையுடன் முடிவடைகிறது. இதனால் ஜூலை மாதத்தில் இருந்து வேறு தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இந்த பதவிக்கு முன்னாள் வீரர்கள் பலர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பிசிசிஐ வெளிநாட்டு பயிற்சியாளரை விரும்புவதாக தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ரிக்கி பாண்டிங் அல்லது ஸ்டீபன் பிளமிங் ஆகியோரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் பெயரில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நரேந்திர மோடி, அமித்ஷா, சச்சின் டெண்டுல்கர், விரேந்தர சேவாக் என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்கள் குவிந்துள்ளதால் தேர்வுக்குழு குழப்பம் அடைந்துள்ளது.
மொத்தம் 3000 விண்ணப்பங்கள் குவிந்துள்ள நிலையில், இதில் எது உண்மையான விண்ணப்பம் என கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கூகுள் ஃபார்ம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் அதிகளவில் போலி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
- நானும், விராட்டும் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சியளிப்பார்.
- நான் அவருடம் பார்ட்னர்ஷிப்பில் இருந்த விதம் குறித்து நான் மிகவும் பெருமையாக இருந்தேன்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் இங்கிலாந்தை சேர்ந்த வில் ஜக்ஸ் இடம் பெற்றிருந்தார். தொடக்கத்தில் அவருக்கு 11 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியால் அவருக்கு பதிலாக வில் ஜக்ஸ் அணியில் இடம் பிடித்தார். ஆனால் அந்த நிலைமையில் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட முன்னேற நிலையில் இருந்தது.
அந்த நிலையில் களமிறங்கிய வில் ஜக்ஸ் அடுத்தடுத்த போட்டிகளில் ஆர்சிபி அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார். மேலும் அதில் ஒரு சதத்தையும் வில் ஜக்ஸ் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலியிடம் இருந்து விலைமதிப்பற்ற விஷயங்களைக் கற்றுக் கொண்டேன் என வில் ஜக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நானும், விராட்டும் இணைந்து பேட்டிங் செய்யும்போது அவர் எனக்கு பயிற்சியளிப்பார். சேஸிங்கில் எப்படி அதிரடியாக ரன்களை குவிப்பது குறித்த விலைமதிப்பற்ற விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் அவருடம் பார்ட்னர்ஷிப்பில் இருந்த விதம் குறித்து நான் மிகவும் பெருமையாக இருந்தேன்.
இவ்வாறு வில் ஜேக்ஸ் கூறினா.
- ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார்.
- அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை அவர் தேடியது அம்பலமானது.
சென்னை:
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 3-வது இடத்தை பிடித்தது. ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
அதேபோல் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக்கிற்கு சிறந்த சீசனாக அமைந்தது. 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் ரியான் பராக் நிறைவு செய்துள்ளார்.
இந்த நிலையில் இளம் வீரர் ரியான் பராக் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அவர் யூடியூபில் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்துள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். இதில் தான் ரியான் பராக் பிரச்சனையில் சிக்கினார்.
யூடியூப் தலத்தில், இலவச மியூசிக் தேட அவர் தொடங்கியபோது, அவர் ஏற்கனவே தேடியிருந்த சில விஷயங்கள் அப்பட்டமாக அந்த லைவ் ஸ்ட்ரீமில் தெரியவந்துள்ளது. அதில் அனன்யா பாண்டே ஹாட் மற்றும் சாரா அலி ஹான் ஹாட் போன்ற விஷயங்களை தேடியது அம்பலமானது.
ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்கிரீன்ஷாட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் ரியான் பராக் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளது. பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி ரியான் பராக் பார்த்துள்ளதால் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
- இங்கிலாந்து, பாகிஸ்தான் இடையிலான பயிற்சி போட்டி நடைபெறுகிறது.
- பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகல்.
டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்க உள்ளது. உலகக் கோப்பை தொடருக்கு முன் ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுவது வழக்கம். அந்த வகையில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான பயிற்சி போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணியை வழிநடத்த இருக்கும் கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் லூயிஸ் தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளது. இதையொட்டி, நாளை நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இருந்து கேப்டன் ஜாஸ் பட்லர் விலகியுள்ளார்.
ஜாஸ் பட்லர் பயிற்சி போட்டியில் இருந்து விலகியதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும், ஜாஸ் பட்லர் - லூயிஸ் தம்பதிக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வாழ்த்து செய்தியும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- 3-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
- வெஸ்ட் இண்டீஸ் 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வான் டெர் டுசன் அதிகபட்சமாக 31 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.
பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்ட களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 28 பந்தில் 44 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 26 பந்தில் 69 ரன்கள் விளாசினார். கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 36 ரன்கள் அடிக்க 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.
- ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா கோப்பை வென்றது.
- ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த காவ்யா மாறன் அவர்களை பாராட்டி பேசினார்.
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 114 ரன்கள் எடுத்து ஐபிஎல் கோப்பையை வென்றது.
அப்போட்டியை நேரில் கண்டு ரசித்த ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஹைதராபாத் அணியின் தோல்வியை கண்டு கண்ணீர் விட்டு அழுதார். அதை மறைத்து சிரித்தபடியும் அவரது அணியின் வீரர்களுக்கு கைதட்டி வரவேற்றார்.
அதன் பிறகு ஹைதராபாத் அணி வீரர்களை டிரஸ்ஸிங் ரூமில் சந்தித்த அவர் வீரர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.
அதில், "நீங்கள் அனைவரும் எங்களை மிகவும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். அதை உங்களிடம் கூறவே நான் இங்கு வந்தேன். டி20 கிரிக்கெட் விளையாடும் விதத்தை நீங்கள் மாற்றியுள்ளீர்கள். இன்று எல்லாரும் நம்மை பற்றி பேசுகிறார்கள். எல்லா நாளும் நமக்கு வெற்றி கிடைப்பதில்லை. ஆனாலும் நீங்கள் அருமையாக விளையாடினீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி, நீங்கள் எங்களை பெருமைப்படுத்தியுள்ளீர்கள்" என்று பேசியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆஸ்திரேலிய அணிக்காக பிரான்சிஸ் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.
- டி20 உலகக் கோப்பை தொடர் வருவதால், இந்த முறை முழுமையாக விளையாட முடிவு செய்தார்.
ஆஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். தனது துல்லியமான யார்க்கர் மற்றும் ஸ்விங் பந்துகளால் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவர். பிரான்சிஸ் உரிமையாளர்கள் (ஐபிஎல் அணி உரிமையாளர்கள்) கோடிக்கணக்கில் பணம் கொடுத்து இவரை ஏலத்தில் எடுக்க தயாராக இருந்தனர். இருந்தபோதிலும் நாட்டிற்காக விளையாடுவதே முக்கியம் எனக் கூறி ஐபிஎல் கிரிக்கெட்டை தவிர்த்து வந்தார்.
இவர் 2014 மற்றும் 2015-ல் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த வருடம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடப்பதையொட்டி ஐபிஎல் தொடரில் முழுவதுமான இடம் பெறுவேன் என அறிவித்தார். இதனால் கொல்கத்தா அணி 24.75 கோடி ரூபாய் கொடுத்து ஸ்டார்க்கை ஏலம் எடுத்தது. அப்போது இவருக்கு இவ்வளவு தொகையா? என விமர்சனம் எழுந்தது.
விமர்சனத்திற்கு பதில் கொடுக்கும் விதமான குவாலிபைய-1 மற்றும் இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி அசத்தினார். இரண்டு போட்டிகளிலும் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
இதனால் அடுத்த வருடமும் விளைாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பும்போது பிரான்சிஸ் போட்டிகளில் விளையாட வேண்டுமென்றால் அதற்காக ஒருநாள் கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படும் என சூசகமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மிட்செல் ஸ்டார்க் கூறியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளாக நான் ஆஸ்திரேலியா கிரிக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து வந்தேன். இதற்காக என்னுடைய உடலுக்கு ஓய்வு கொடுக்கவும், மனைவியுடன் நேரத்தை செலழிக்கவும் எனக்கு நானே வாய்ப்பு கொடுத்துக் கொண்டேன். இதனால் கடந்த 9 ஆண்டுகளாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் மட்டுமே கவனத்தில் இருந்தது. பிரான்சிஸ் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்த்து வந்தேன்.
நான் தற்போது எனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தை விட முடிவு கட்டத்தில் உள்ளேன். ஒரு விடிவிலான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம். அடுத்த ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக நீண்ட காலம் உள்ளது. இது எனக்கு தொடர்கிறதோ... இல்லையோ... இது அன்னும் அதிகப்படியான பிரான்சிஸ் கிரக்கெட்டிற்கு வழி வகுக்கும்.
அடுத்த வருடம் சரியான போட்டி அட்டவணை எனக்குத் தெரியாது. இருந்த போதிலும் அடுத்த வருடத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடமும் கொல்கத்தா அணிக்காக விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.
- எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன் என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
- கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
மூன்றாவது முறை கோப்பையை வென்ற கொல்கத்தா அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில், கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் ஐ.பி.எல். கோப்பையுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது தொடர்பான பதிவில், "எங்கு சென்றாலும் எடுத்து செல்வேன்," என தலைப்பிடப்பட்டு இருக்கிறது.
பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸி உலகக் கோப்பையை வென்றதும் கொண்டாடியதை போன்றே கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அந்த வரிசையில், தற்போது எங்கு சென்றாலும் கோப்பையுடன் செல்வேன் என்ற பாணியில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
- இந்தியா முதல் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடுகிறது.
- மூன்று போட்டிகள் நியூயார்க் நகரில் நடைபெறுகிறது.
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. இந்தியா வங்காளதேச அணிக்கெதிராக பயற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்ததால் இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் முன்னதாகவே அமெரிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறாத ஐபிஎல் அணிகளில் இடம் பிடித்த வீரர்கள் உள்ளிட்டோர் முதற்கட்டமாக அமெரிக்கா செல்ல பிசிசிஐ ஏற்பாடு செய்தது.
✈️ Touchdown New York! ???#TeamIndia ?? have arrived for the #T20WorldCup ? pic.twitter.com/3aBla48S6T
— BCCI (@BCCI) May 27, 2024
அதன்படி நேற்று முன்தினம் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்டோர் அமெரிக்கா புறப்பட்டனர். இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர் சென்றடைந்தனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
பயிற்சியாளர்கள் டிராவிட், விக்ரம் ரதோர், வீரர்கள் அக்சார் பட்டேல், முகமது சிராஜ், ஆர்ஷ்தீப் சிங், ரோகித் சர்மா, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் நியூயார்க் சென்றடைந்துள்ளனர்.
இந்திய அணி விளையாடும் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் அமெரிக்காவில்தான் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் நியூயார்க்கிலும், ஒரு போட்டி லாடர்ஹில்லிலும் நடைபெறுகிறது.
- ஹர்ஷித் ராணா 11 இன்னிங்சில் 19 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
- வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
கொல்கத்தா அணி இந்த முறை கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்தே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் பேட்டிங் யூனிட்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சுனில் நரைன் இணைந்தார். இது கொல்கத்தா அணியின் பேட்டிங்கிற்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.
மிகப்பெரிய அனுபவ வீரரான மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் இருந்த போதிலும், இவரது பந்து வீச்சு எடுபடாமல் போனது. இதனால் 24 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது வேஸ்ட் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஆனால் ஸ்டார்க் பலவீனம் ஹர்ஷித் ராணா, வைபஸ் ஆரோரோ ஆகியோரால் மறைக்கப்பட்டது. இரு இளம் வீரர்கள் சிறப்பாக பந்து வீச்சை வெளிப்படுத்தினர். ஸ்விங், ஸ்லோவர் ஒன், ஸ்லோ பவுன்சர் என அசத்தினர். பிளேஆஃப் சுற்று மற்றும் இறுதி போட்டியில் ஸ்டார்க் அசத்திய வேறுகதை.
இறுதிப் போட்டியில் வைபவ் ஆரோரா பந்தில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தது சிறந்த அவுட் ஸ்விங் பந்தாகும் (இடது கை பேட்ஸ்மேனுக்கு). மேலும் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானாக திகழ்ந்தார்கள்.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சு சிறப்பாக அமைய, அந்த அணியின் பந்து வீச்சாளர் பரத் அருண் முக்கிய பங்காற்றினார் என்றால் அது மிகையாகாது.
இவர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இவரது காலத்தில்தான் இந்தியா வேகபந்து வீச்சில் முக்கியத்துவம் பிடித்தது. வெளிநாட்டு ஆடுகளங்களில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கி சாதனைகள் படைத்தது. பும்ரா, முகமது சிராஜ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் ஜொலித்தனர். ஜொலித்து வருகின்றனர்.
அதேபோல் கொல்கத்தா அணியிலும் இளம் வீரர்களிடம் இருக்கும் திறமையை கண்டறிந்து வெளிப்படுத்த முக்கிய காரணமக இருந்துள்ளார். இதனால் கொல்கத்தா அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த மறைமக கதாநாயகன் என்று இவரை அழைக்கலாம்.
ஹர்ஷித் ராணா 13 போட்டிகளில் 11 போட்டிகளில் பந்து வீசி 19 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். வைபவ் ஆரோரா 10 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஸ்டார்க் 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
சுனில் நரைன் 17 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி 21 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார். பஞ்பாப் வீரர் ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை கைப்பற்றினார்.
- சுனில் நரைன் இந்த தொடரில் ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 488 ரன்கள் விளாசினார்.
- 17 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இதனால் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஐபிஎல் 2024 சீசன் நேற்றோடு முடிவுக்கு வந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்திய போட்டியில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரைன் 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழத்தினார். பேட்டிங்கில் 2 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சாளரான சுனில் நரைன் இந்த தொடரில் பேட்டிங்கில் யாரும் எதிர்பாராத வகையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
15 போட்டிகளில் 14 இன்னிங்சில் பேட்டிங் செய்து மொத்தம் 488 ரன்கள் குவித்தார். அதிகபட்சமாக 109 ரன்கள் அடித்தார். இதில் ஒரு சதம் 3 அரைசதங்கள் அடங்கும். அதேபோல் பந்து வீச்சில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இறுதி போட்டி நடைபெற்ற சென்னை சேப்பாக்கம் மைதானம் சிஎஸ்கே மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் வெளியில் இருந்து வந்த இரண்டு அணிகளான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது. நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் அமோக ஆதரவு அளித்தனர்.
இந்த நிலையில் தொடர் நாயகன் விருது வென்ற சுனில் நரைன் சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுனில் நரைன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் "உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக கொல்கத்தா மற்றும் ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி.
அதேபோல் நேற்றிரவு ஆதரவை வெளிப்படுத்திய சிஎஸ்கே மற்றும் டோனி ரசிகர்களுக்கு சிறப்பு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
- 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.
- இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் கோப்பை கைப்பற்றியது. இதன்மூலம் கொல்கத்தா அணி 3-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் 2019 முதல் 2024 வரை இறுதி போட்டியில் இடது பக்கத்தில் நின்ற அணியே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தகவலுடன் ஒரு புகைப்படமும் டிரெண்டாகி வருகிறது.
அந்த வகையில் 2019-ம் ஆண்டு சென்னை - மும்பை அணிகள் மோதின. இதில் ரோகித் சர்மா இடது புறமும் டோனி வலது புறமும் இருந்தார். இறுதியில் ரோகித் கோப்பையை தட்டி சென்றார்.
அதேபோல 2020-ம் ஆண்டு மும்பை - டெல்லி மோதின. இதிலும் ரோகித் இடது புறம் நின்றார் கோப்பையை வென்றார். 2021-ல் சென்னை- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் இடது புறம் டோனி நின்றார் கோப்பையை வென்றார்.
இப்படி 2024 வரை இடது புறம் நின்ற அணியே கோப்பை வென்ற அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. மேலும் 2019 முதல் குவாலிபையர் முதல் சுற்றில் வெற்றி பெற்ற அணியே கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்