search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன்.
    • ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும்.

    வெலிங்டன்:

    20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த வருடம் ரோகித் சர்மா தலைமையில் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கிய இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை பைனல்களில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா, சூர்யகுமார் யாதவ், ஜெய்ஸ்வால், ஷிவம் துபே போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே இம்முறை டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி முழு மூச்சுடன் போராட உள்ளது.

    இந்நிலையில் இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பந்து வீசுபவர்களாக இல்லை என்பது பெரிய பிரச்சினையாக இருப்பதாக முன்னாள் நியூசிலாந்து வீரர் சைமன் டவுல் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசியது பின்வருமாறு:-

    டி20 அணியில் டாப் 5 - 6 பேட்ஸ்மேன்களில் பவுலர்கள் இல்லாதது இந்தியா தவற விட்ட பெரிய விஷயம். வெஸ்ட் இண்டீசுக்கு செல்லும் தற்போதைய அணியில் உலகக்கோப்பை முடிந்ததும் நீங்கள் எதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டும். அது போன்ற சூழ்நிலையில் அபிஷேக் சர்மா, ருதுராஜ், ஜெய்ஸ்வால் அல்லது சுப்மன் கில் ஆகியோரை நீங்கள் விரும்புவீர்கள்.

    சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். மேலும் ஷிவம் துபே போன்ற பந்து வீசக்கூடிய சில வீரர்கள் டாப் 5 பேட்ஸ்மேன்களில் இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து 2 - 3 ஆல் ரவுண்டர்கள், கணிசமாக பேட்டிங் செய்யக்கூடிய பவுலர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு டவுல் கூறினார்.

    • ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
    • நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று (மே 26) இரவு 7.30 மணிக்கு துவங்க இருக்கிறது. சென்னை சேப்பாகத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதும் இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். 2024 இறுதிப் போட்டியை ஒட்டி கொல்கத்த கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ஐதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் இடம்பெற்றுள்ள சிறப்பு வீடியோ ஐ.பி.எல். அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

    வீடியோவில் பேசிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர், "அன்பார்ந்த பேட், இன்று. உனக்காக சிறு தகவலை தெரிவிப்பது மகிழ்வாக இருக்கும் என்று நினைக்கிறேன். முதலில், இந்த சீசனில் ஆரஞ்சு ஆர்மியை நீங்கள் சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளீர்கள் என்பதை நான் கூறிக் கொள்கிறேன். இந்த சீசனில் நாங்கள் உங்களுக்கு கடினமான நேரத்தை கொடுத்திருக்கிறோம்."

    "ஒரே எதிரணியை வேறொரு களத்தில் நீங்கள் எதிர்கொண்டீர்கள் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன். ஆனால், இன்று நீங்கள் எதிர்கொள்ள இருக்கும் நிறங்கள் உங்களுக்கு மிகவும் பரீட்சயமான பர்பில் மற்றும் கோல்டு ஆகும். பரபரப்பான இறுதிப்போட்டியில், சிறப்பான அணி வெல்லட்டும், இதன் மூலம் நான் நமது அணியை குறிப்பிடுகிறேன்," என்று தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்து பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "சிறிய தகவலுக்கு நன்றி. நீங்கள் அருமையாக இருந்துள்ளீர்கள். நீங்கள் இருவரும் swag-க்கு எடுத்துக்காட்டாக இருந்துள்ளீர்கள். ஆனால், இந்த மைதானத்தில் எங்களின் சிறப்பான வெற்றியை பெற போகிறோம். கே.கே.ஆர். வீரர்களுக்கு எதை எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியும்."

    "ஞாயிற்றுக் கிழமை வாருங்கள், இந்த சீசனில் நீங்கள் கடுமையான போட்டியை ஏற்படுத்தியதாக தெரிவித்தீர்கள், ஆனால் ஆரஞ்சு ஆர்மி தனது சிறப்பான ஆட்டத்தை இறுதிப்போட்டியில் வெளிப்படுத்த சேமித்து வைத்திருக்கிறது என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்," என்று தெரிவித்தார்.

    • தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
    • மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    மே 24 அன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இன்று 2-வது டி20 போட்டி ஜமைக்காவின் சபினா மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சாஸ் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாபிரிக்க அணி தரப்பில் நகாபா பீட்டர், லுங்கி இங்கிடி, பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பின்னர் களமிறங்கிய தென்னாப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததது. அதிகபட்சமாக டீகாக் 41 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியுள்ளது.

    • கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.
    • இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கவுதம் கம்பிர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

    இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

    விவிஎஸ் லக்ஷ்மண், கௌதம் கம்பீர், ரிக்கி பாண்டிங், ஜஸ்டின் லாங்கர், ஸ்டீபன் பிளெமிங் உள்ளிட்டோரின் பெயர்கள் பிசிசிஐ வட்டாரங்களில் முதலில் அடிபடத் தொடங்கின. இவர்களுள் கவுதம் கம்பீரை பயிற்சியாள்ராக தேர்ந்தெடுக்க பிசிசிஐ  மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

     

    இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடநதபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக ஐபி எல் போட்டிகளில் பிசியாக உள்ள கவுதம் கம்பிர் இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

     

    அதாவது இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு தான் நிச்சயம் தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற உத்தரவாதத்தை பிசிசிஐ அளித்தால் மட்டுமே அதற்கு விண்ணப்பிப்பேன் என்று கவுதம் நிபந்தனை விதித்துள்ளார். இந்த கண்டிஷனை பிசிசிஐ ஏற்றுக்கொள்ள அதிகம் வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. இதற்கிடையில் பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பிக்கும் தேதி நாளையுடன் (மே 27) முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.
    • சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஒருங்கிணைக்கும் டி- 20 உலகக் கோப்பை 2024 சீரிஸ் வரும் ஜூன் 2 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் வங்கதேசம் - அமெரிக்கா இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 சீரிஸ் போட்டிகள் அமெரிக்காவில் தற்போது நடந்துவருகிறது.

    ஏற்கனவே நடைபெற்ற 2 போட்டிகளில் அமெரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், 3 ஆவது போட்டி ப்ரேரி வியூ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் அடித்தது. வங்கதேச அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முஸ்தபிசுர் ரஹ்மான் 10 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். டி20 போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.

    பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 11.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 108 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. தன்சித் ஹசன் 58 ரன்களும் சவுமியா சர்க்கார் 43 ரன்களும் அடித்து அட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் அமெரிக்கா கைப்பற்றியது

    • விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை.
    • கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் அமெரிக்கா செல்லவில்லை.

    டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.

    கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், ஜடேஜா, சிவம் துபே, சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ் ஆகியோர் முதல் கட்டமாக அமெரிக்கா சென்றுள்ளனர்.

    விராட் கோலி இன்னும் அமெரிக்கா புறப்படவில்லை. அடுத்தக்கட்ட வீரர்களுடன் அவர் அமெரிக்கா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அதனால் கொல்கத்தா அணி வீரர் ரிங்கு சிங் இன்று அமெரிக்கா செல்லவில்லை.

    இந்திய அணி ஜூன் 5 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது மற்றும் ஜூன் 9 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

    • முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது.
    • அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர்.

    விரைவில் துவங்கவுள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

    இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று பர்மிங்காம் நகரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு183 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜாஸ் பட்லர் 84 ரன்களும் வில் ஜேக்ஸ் 37 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் சாஹின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் 0, ஆயுப் 2 ரன்களில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் ஆசாம் - பக்கர் ஜமான் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    நிதானமாக விளையாடுய ஆசாம் 32 ரன்களிலும் மறுபுறம் அதிரடி காட்டிய பக்கார் ஜமான் 45 (21) ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 19.2 ஓவரில் பாகிஸ்தான் அணி 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன்மூலம் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து தோற்கடித்தது. அதன் காரணமாக 1 – 0* (4) என்ற கணக்கில் டி20 தொடரில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது.

    • சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.
    • இந்தியாவில் தோனியின் வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி அவர் பேசினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் 18-ந் தேதி நடைபெற்றது.

    அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது.

    இதனையடுத்து சிஎஸ்கே அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம் எஸ் டோனி விடை பெற்றார். அவர் விமான நிலையத்தில் அதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான ராஞ்சிக்கு சென்றார். அங்கு அவர் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், பிபிசி ஸ்போர்ட் மீடியாவில் பேசிய லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஐபிஎல்-ல் ஒரு அணியை நிர்வகித்த தனது முதல் அனுபவத்தைபகிர்ந்தார்.

    அப்போது இந்தியாவில் டோனியின் வெறித்தனமான ரசிகர்களைப் பற்றி அவர் பேசினார். அதில், "சிஎஸ்கே அணி லக்னோவுக்கு வந்தபோது 50,000 இருக்கைகள் கொண்ட மைதானத்தில் கிட்டத்தட்ட 48,000 பேர் டோனியின் '7' ஜெர்சி அணிந்திருந்தனர். லக்னோ அணிசென்னைக்குச் சென்றபோது 100% டோனி ஜெர்சியை அணிந்திருந்தனர். இந்தியாவில் ஒரு மனிதர் இந்த அளவுக்கு ஹீரோ போல கொண்டாடப்படுவதை என்னால் நம்பவே முடியவில்லை.

    இந்தியாவில் இதற்கு முன் விளையாடிய போது சச்சின் டெண்டுல்கரை அவ்வாறு பார்த்துள்ளேன். பின்னர் ஆஸ்திரேலியாவின் பயிற்சியாளராக இருந்த போது விராட் கோலி, டோனி கொண்டாடப்பட்டனர். ஆனால் இங்கே அதை விட அதிகமாக டோனியை கொண்டாடுகின்றனர்" என்று அவர் கூறினார்.

    • முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.
    • இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் குவாலிபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது.

    176 ரன்களை துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்து பைனல் செல்லும் வாய்ப்பை இழந்தது.

    இந்த போட்டியில் சாஹல் பந்துவீச்சில் கிளாசன் 3 சிக்ஸர்களை விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக் கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை ராஜஸ்தான் வீரர் சாஹல் படைத்துள்ளார். அவர் மொத்தமாக இதுவரை 224 சிக்ஸர்களை விட்டு கொடுத்துள்ளார்.

    இவருக்கு அடுத்த இடத்தில் பியூஷ் சாவ்லா - 222, ஜடேஜா - 206, அஷ்வின் - 203, அமித் மிஷ்ரா - 183 ஆகியோர் உள்ளனர்.

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விட்டுக்கொடுத்த முதல் 5 பந்துவீச்சாளர்களும் சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார்.
    • பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    ஐபிஎல் 2024 தொடரிலிருந்து சிஎஸ்கே வெளியேறிய நிலையில் டோனி தற்போது தனது சொந்த ஊரான ராஞ்சியில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் பெங்களூரில் இருந்து ராஞ்சிக்கு விமானத்தின் எகானமி கிளாஸில் டோனி பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், தோனி தனது பெட்டியை மேல் உள்ள ரேக்கில் வைத்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்திருப்பது பதிவாகியுள்ளது. சக பயணிகள் டோனியை தங்கள் போன் கேமராக்களில் படம்பிடித்து அவரின் எளிமையை கைதட்டி வரவேற்றனர்.

    தொடர்ந்து இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் டோனியின் எளிமையை மெச்சி தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆர்சிபி உடனான ஆட்டத்தில் தோல்விக்கு பின்னர் ஆர்சிபி அணியினருக்கு டோனி கை கொடுக்காமல் மைத்தனத்தில் இருந்து சென்றது சர்ச்சையான நிலையில் அந்த களங்கத்தைப் போக்கும் வகையில் இந்த வீடியோவைப் பகிர்ந்து டோனியின் நற்பண்புகளை ரசிகர்கள் உச்சி முகர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் 6 ஆம் கட்ட தேர்தலான இன்று ( மே 250 பீகார் மாநிலம் ராஞ்சியில் டோனி வாக்களித்து குறிப்பிடத்தக்கது.

     

    • 17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.
    • 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

    17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2012, 2014 ஆகிய ஆண்டுகளில் கொல்கத்தா அணி ஏற்கனவே ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. அதே போல் 2016 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணி கோப்பையை வென்றுள்ளது.

    இந்நிலையில், ஹைதராபாத் அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஆகியோரும் இணைந்து கேப்டன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளனர்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் 2 கேப்டன்களும் கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளனர்.

    இது தொடர்பான புகைப்படங்களை ஐபிஎல் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • 9-வது டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.
    • இந்தத் தொடருக்கான வர்ணனையாளர்கள் குழுவில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. அதில் ஐ.பி.எல். தொடரில் இருந்து சமீபத்தில் ஓய்வுபெற்ற பெங்களூரு அணி வீரரான தினேஷ் கார்த்திக் இடம்பெற்றுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பல டி20 உலகக் கோப்பை தொடர்களில் வீரராக களமிறங்கிய அவர், தற்போது வர்ணைனையாளர் என்ற புதிய அவதாரத்துடன் நடப்பு தொடரில் பங்கேற்க உள்ளார்.

    தினேஷ் கார்த்திக் டி20 உலகக் கோப்பை தொடரில் வர்ணனை செய்யப்போவது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×