search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • வங்காளதேச அணியில் லிட்டன் தாஸ் அரை சதம் விளாசினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது.

    வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது.

    இந்த நிலையில் களமிறங்கிய வங்காளதேச அணி தொடக்க முதலே விக்கெட்டுகளை இழந்தனர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால் அந்த அணியால் 12 ஓவரில் இலக்கை அடைய முடியவில்லை. இதனால் அந்த அணி வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறாது என்ற நிலை ஏற்பட்டது.

    ஆனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஒரு முனையில் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த வீரர்கள் விக்கெட்டுகளை இழந்ததால் லிட்டன் தாஸ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல முடியவில்லை. கடைசி வரை போராடிய லிட்டன் தாஸ் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதனால் வங்காளதேச அணி 17.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதோடு அரையிறுதிக்கு முன்னேறியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் அரையிறுதி கனவு கலைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், நவீன் உல் ஹக் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அரையிறுதி ஆப்கானிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு நடைபெறும்.

    • வங்காளதேசம் அணியால் வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு தகுதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
    • மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்துள்ளது. இதனால் வங்காளதேசம் வெற்றி பெற 116 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் 12.4 ஓவரில் இலக்கை அடைய வேண்டும். அப்படி இல்லையென்றால் வெற்றி பெற்றால் கூட அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். ஆனால் கைவசம் வங்காளதேசம் அணி 3 விக்கெட்டுகள் உள்ளது.

    இந்த மழை காரணமாக அடிக்கடி நிறுத்தப்பட்டு நிறுத்தப்பட்டு விளையாடி வருகிறது. மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர் வரை 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறியது.
    • இதனால் 20 ஓவர் முடிவில் 115 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    புதுடில்லி:

    ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் அவர் குளிர்ச்சியை இழந்து பேட்டிங் பார்ட்னர் மீது தனது மட்டையை வீசினார் கரீம் ஜனத் இரண்டாவது ஓட்டத்தில் தவறான தொடர்புக்குப் பிறகு. பதட்டமான ஐசிசி ஆண்கள் போட்டியின் போது இந்த சம்பவம் நடந்துள்ளது

    டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க வீரர்களின் மந்தமான ஆட்டத்தில் 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணி 18 ஓவர் வரை 100 ரன்களை கூட எடுக்க முடியாமல் திணறியது.

    இதனால் இறுதிகட்டத்தில் பேட்டிங் செய்த ரஷித் கான் அதிரடி ஆட்டத்தை ஆட முயற்சித்தார். அந்த வகையில் ஒரு பந்தை சிக்சர் அடிக்க முயல்வார். அது பேட்டின் விளிம்பிள் பட்டு வானத்தை நோக்கி பறந்தது. உடனே ரஷித்கான் 2 ரன்களை எடுக்க ஓடினார். ஆனால் எதிர் முனையில் இருந்த கரீம் ஜனத் ஓட மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரஷித் கான் பேட்டை தூக்கி எறிந்தார்.

    இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
    • ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியது. ஏற்கனவே இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா என மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி விட்டன. அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் அடுத்த அணி எது என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

    இந்த நிலையில், இன்று காலை நடைபெறும் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறப் போகும் நான்காவது அணி எது என்ற முடிவு தெரிந்துவிடும். எனினும், இந்த போட்டியின் முடிவில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் அந்த அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.

    ஆப்கானிஸ்தான் வெற்றியால் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறுவதோடு, ஆஸ்திரேலியா அணி தொடரில் இருந்து வெளியேறிவிடும். இதேபோன்று வங்காளதேசம் அணி 13 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை துரத்தி ஆப்கானிஸ்தானை வீழ்த்தினால், வங்காளதேசம் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

    ஒருவேளை வங்காளதேசம் அணி 13 ஓவர்களை கடந்து வெற்றி பெறும் பட்சத்தில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு முன்னேறும். 

    • மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்தில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
    • வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    செயின்ட் லூசியா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடக்கும் கடைசி லீக்கில் வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி ஆப்கானிஸ்தான் இப்ராஹிம் சத்ரான்- குர்பாஸ் களமிறங்கினர். இருவரும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். பவர் பிளேயில் இந்த ஜோடி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த ஜோடி பவுண்டரி அடிக்க முயற்சிக்கவில்லை.

    டெஸ்ட் போட்டி விளையாடி இப்ராஹிம் சத்ரான் 29 பந்தில் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஓமர்சாய் 12 பந்தில் 10 ரன்களுடன் வெளியேறினார். தொடர்ந்து மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 55 பந்தில் 43 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 16 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 88 ரன்களே மட்டுமே எடுத்தது. இதற்கு குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    இதனால் அடுத்து வரும் வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாட கூடிய கட்டாயத்தில் இருந்தனர். எனவே வந்த வேகத்தில் அனைவரும் பெவிலியன் திரும்பினர். கடைசியில் ரஷித்கான் 3 சிக்சர்களை பறக்கவிட்டதால் ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலிய தரப்பில் திராவிஸ் ஹெட் 76 ரன்கள் குவித்தார்.
    • இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    செயின்ட் லூசியா:

    9-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்8 சுற்றில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் செயின்ட் லூசியாவில் மல்லுக்கட்டியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் களம் புகுந்தனர். தொடர்ந்து சொதப்பும் கோலி இந்த போட்டியிலும் டக்-அவுட் (5 பந்து) ஆனார்.

    இதன் பின்னர் விசுவரூபம் எடுத்த ரோகித் சர்மா, இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் ஒரே ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி தெறிக்கவிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அத்துடன் அந்த ஓவரில் வைடு வகையில் ஒரு ரன் என மொத்தம் 29 ரன் வந்தது. சர்வதேச 20 ஓவர் போட்டியில் மிட்செல் ஸ்டார்க் ஒரு ஓவரில் வாரி வழங்கிய அதிகபட்ச ரன் இது தான். அடுத்த ஓவரில் கம்மின்சின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரிகளை ஓட விட்ட ரோகித் சர்மா 19 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். நடப்பு உலகக் கோப்பையில் ஒரு வீரரின் மின்னல் வேக அரைசதம் இது தான்.

    ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஸ்டோனிசின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். மறுமுனையில் சதத்தை நோக்கி முன்னேறிய ரோகித் சர்மா துரதிர்ஷ்டவசமாக 92 ரன்களில் (41 பந்து, 7 பவுண்டரி, 8 சிக்சர்) மிட்செல் ஸ்டார்க் வீசிய யார்க்கர் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

    இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேவும் கைகோர்த்து ஸ்கோரை அதிகரிக்க செய்வதில் கவனம் செலுத்தினர். சூர்யகுமார் தனது பங்குக்கு 31 ரன்களும் (16 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), ஷிவம் துபே 28 ரன்களும் (22 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தனர். ஆனாலும் கடைசி 6 ஓவர்களில் ஆஸ்திரேலிய பவுலர்கள் ஓரளவு கட்டுப்படுத்தினர். எப்படியோ ஹர்திக் பாண்ட்யாவும், ஜடேஜாவும் ஸ்கோர் 200-ஐ கடக்க வைத்தனர்.

    இதனால் 20 ஓவர் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க், ஸ்டோனிஸ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 6 ரன்னில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் மட்டையை சரமாரியாக சுழற்றியதால் ஸ்கோர் எகிறியது. கேப்டன் மிட்செல் மார்ஷ் 37 ரன்களும், மேக்ஸ்வெல் 27 ரன்களும் விளாசினர். மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் நிலைத்து நின்று அரைசதம் அடித்தார். அவர் நின்றது வரை ஆஸ்திரேலியாவுக்கு நம்பிக்கை காணப்பட்டது. 17-வது ஓவரில் ஹெட்டின் (76 ரன், 43 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) சவாலுக்கு பும்ரா முடிவு கட்டினார். அத்துடன் ஆட்டம் இந்தியா பக்கம் முழுமையாக திரும்பியது.

    இதனால் 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியால் 7 விக்கெட்டுக்கு 181 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் இந்தியா 24 ரன் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. இதன் மூலம் தனது பிரிவில் இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அரைஇறுதிக்குள் கால் பதித்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

    கடந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் பறிகொடுத்த இந்திய அணிக்கு, இந்த வெற்றி அதற்கு பழிதீர்க்கும் வகையில் அமைந்ததாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டுவது இது 5-வது முறையாகும். அரைஇறுதியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.

    • அதிரடியாக விளையாடிய ரோகித் 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர். தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பேட்டிங் சொதப்பலாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்த நிலையில் ரோகித் ருத்ரதாண்டவம் ஆடினார்.

    இடது கை வேகபந்து வீச்சாளர் ஓவரில் தடுமாடுவார் என்ற நிலை மாறி ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 29 ரன்களை ரோகித் குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். நடப்பு டி20 தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 92 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து துபே- சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்தில் நடையைகட்டினார். அதனை தொடர்ந்து துபே மந்தமாக விளையாடி 22 பந்தில் 28 ரன்களுடன் வெளியேறினார். இறுதியில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 200 ரன்களை எடுக்க உதவினார்.

    இதனால் இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • விராட் கோலி 5 பந்தில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது

    டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.

    கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரை சிக்சர் பவுண்டரியுமாக பறக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். இதை தவிர நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 19 பந்தில் அரை சதம் விளாசி அசத்தி உள்ளார்.

    இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா (4165) பிடித்துள்ளார். அடுத்த இரு இடங்கள் முறையே பாபர் அசாம் 4145 ரன்களும் விராட் கோலி 4103 ரன்களும் எடுத்துள்ளனர். 

    • 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2 போட்டிகளில் மட்டும் 2 இலக்க ரன்களை அடித்துள்ளார்.
    • அதிகபட்சமாக ஒரு போட்டியில் 37 மற்றொரு போட்டியில் 24 ரன்கள் எடுத்துள்ளார்.

    டி20 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.

    விராட் கோலி முதல் பந்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடினார். 4 பந்துகள் 1 ரன் எடுக்க திணறிய அவர் 5-வது பந்தில் புல் ஷாட்டை அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன்மூலம் இந்த தொடரில் 2-வது முறையாக விராட் கோலி டக் அவுட் ஆகி உள்ளார்.

    மேலும் இந்த தொடரில் விராட் கோலியின் தடுமாற்றம் தொடர்கிறது. 6 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 2 போட்டிகளில் மட்டும் 2 இலக்க ரன்களை அடித்துள்ளார். ஒரு போட்டியில் 24 மற்றொரு போட்டியில் 37 ரன்கள் இதை தவிர மற்ற போட்டிகள் முறையே 1,4,0,0 என ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறி இந்திய ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்.

    இவரது ஆட்டம் குறித்து நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவரை 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் எனவும் ஒரு சிலர் அவர் பொறுமையாக நின்றால் அதிக ரன்களை விளாசுவார் என்றும் தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் களமிறக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    • இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும்.

    செயின்ட்லூசியா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் 'குரூப் 1' பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும். இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெறவே முழு மூச்சுடன் போராட உள்ளது.

    • இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கோலி, ரோகித், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

    இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக் இந்திய அணிக்கு அறிமுகமாகி உள்ளனர்.

    இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    ஜிம்பாப்வேக்கு எதிரான டி20-ஐ தொடருக்கான இந்திய அணி:-

    சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரல்), நிதிஷ் ரெட்டி, ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், துஷார் தேஷ்பாண்டே, ரவி பிஷ்னோய்.

    • கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம்.
    • கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

    ஆண்டிகுவா:

    டி20 உலகக்கோப்பை தொடரில், கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியுள்ளது.

    இதன் மூலமாக சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறியுள்ளது.

    இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதிக்குள் நாங்கள் நுழையாவிட்டாலும் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட் போட்டிகளை ஆடினோம் என வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோமன் பவல் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கடைசி வரை வெற்றிக்காக போராடிய எங்கள் வீரர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஒரு பேட்டிங் குழுவாக இன்றைய ஆட்டத்தை மறக்க நினைக்கிறோம். பவுலர்கள் கொஞ்சம் கூட மனம் தளராமல் கட்டுப்படுத்தலாம் என்று போராடினார்கள். அது பாராட்டுக்குரியது. நாங்கள் இந்த டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.

    ஆனால் கடந்த 12 மாதங்களாக சிறந்த கிரிக்கெட்டை தொடர்ச்சியாக விளையாடி வந்திருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மீதான நம்பிக்கை எங்கள் ரசிகர்களுக்கு மீண்டும் வந்துள்ளதை பார்க்க முடிகிறது. தோல்வியின்போது, பாசிட்டிவான விஷயமாக அதனை பார்க்கிறேன். வெவ்வேறு மைதானங்களில் விளையாடியபோது ரசிகர்கள் நேரடியாக ஆதரவு அளித்ததோடு, சோசியல் மீடியாவில் கொண்டாடினார்கள் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி.

    இவ்வாறு ரோமன் பவல் கூறினார்.

    ×