search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது.
    • விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    உலகக் கோப்பை டி20 தொடரில் லீக் சுற்றுகள் முடிவடைந்த நிலையில் நாளையுடன் சூப்பர் 8 சுற்றும் முடிவடைய உள்ளது. இதன் முடிவில் குரூப் 2-ல் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 2 அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் 1-ல் இடம் பெற்றுள்ள 4 அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது.

    இந்த குரூப்-ல் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது என ரஷித் கான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தாலிபன்களின் ஆட்சியை காரணம் காட்டி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இருதரப்பு போட்டிகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் இந்த கேள்வியை முன் வைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் கிரிக்கெட்டைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். விளையாட்டு தேசத்தை ஒன்றிணைக்கிறது, அனைவரையும் ஒன்றிணைக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.

    எனவே, என்னைப் பொறுத்தவரை, எந்த அணிக்கு எதிராகவும் விளையாடுவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகிறோம். சில விஷயங்கள், அரசாங்கம் மற்றும் அரசியல் விஷயங்கள், எனக்கு இந்த விஷயங்களைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்கு அது பிடிக்கவில்லை.

    ஆஸ்திரேலியாவால் உலக கோப்பையில் எங்களுடன் விளையாட முடியும்போது, இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் ஏன் விளையாட முடியாது. நான் எப்போதும் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாட விரும்புகிறேன். பிக்பாஷ் கிரிக்கெட் மூலம், அங்குள்ள ரசிகர்களிடமிருந்து எனக்கு அன்பும் ஆதரவும் கிடைத்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு ரஷித் கான் கூறினார்.

    நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி மற்றும் கேப்டன் மீது பல விமர்சனங்கள் எழுந்தது.

    இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியில் யாரிடமும் ஒற்றுமை இல்லையென கேரி கிர்ஸ்டன் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் இனிமேலும் பாகிஸ்தான் அணியிலிருந்து நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கேரி கிர்ஸ்டனுக்கு இந்திய முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் அறிவுரை வழங்கினார்.

    இதனையடுத்து, சமூக வலைத்தளங்களில் பலரும் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள ஹர்பஜன் சிங்கை ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

    மாநிலங்களவை எம்.பி ஹர்பஜன் சிங் எதற்காக கிரிக்கெட் கமெண்ட்ரி செய்து கொண்டிருக்கிறார். இதன்மூலம் மக்களின் வரிப்பணத்தை தான் அவர் வீணடித்து கொண்டிருக்கிறார் என்று எக்ஸ் வலைத்தளத்தில் ஒருவர் பதிவிட்டிருந்தார்.

    அந்த எக்ஸ் பதிவை ஹர்பஜன் சிங் பகிர்ந்து பதிலடி கொடுத்துள்ளார். அதில், "என்னுடைய எம்.பி சம்பளத்தை படிக்க முடியாமல் கஷ்டப்படும் குழந்தைகளின் கல்விச்செலவுக்கு உதவி செய்கிறேன். அதில் ஒரு ரூபாயை கூட நான் எனக்காக செலவு செய்தது கிடையாது. நானும் வரி செலுத்துபவன் தான். உங்களுக்கு தெரிந்தவர் யாருக்காவது படிப்பதற்கு உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள், நான் உதவி செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்திய அணி 2 போட்டிகளில் விளையாடி 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • இன்றைய போட்டியில் இந்தியா தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    செயின்ட் லூசியா:

    9-வது டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2-ல் இங்கிலாந்து- தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

    குரூப் 1-ல் நான்கு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்திய அணி மட்டுமே தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. மற்ற அணிகளான ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2-ல் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. வங்காளதேசம் 2 போட்டியிலும் தோல்வி அடைந்துள்ளது.

    இந்நிலையில் அரையிறுதிக்கு எந்த அணி தகுதி பெறும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த வகையில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் மிக முக்கியமான ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ரன்ரேட்டும் நன்றாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலே அரையிறுதிக்கு முன்னேறிவிடும். தோல்வியடைந்தாலும் ரன்ரேட் வலுவாக உள்ளதால் இந்தியாவுக்கு வாய்ப்பு அதிகம். அதனால் தோல்வியடைந்தாலும் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    மாறாக இந்த ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்திற்கு முன்னேறும். இந்தியா 2-வது இடத்திற்கு சரியும். அதே நேரம் ஏற்கனவே ஒரு வெற்றி பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் 83 ரன்களுக்கு மேல் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தினால் ரன்ரேட் அடிப்படையில் இந்தியாவை முந்தி அரையிறுதிக்கு முன்னேறும். இந்தியா அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேற நேரிடும்.

    இதனால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை பழி தீர்க்க கடுமையாக போராடும்.

    • இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.

    விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்றதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.

    ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.

    தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.


    கடந்த 2022ம் ஆண்டு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணியும் தனது டி20 உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டது. இதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.

    இதன்மூலம் போட்டிகளை நடத்தும் நாடுகள் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

    இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
    • இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறும்.

    இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் அணிகளை தீர்மானிக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நாளை முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

    குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 4 அணிகளுக்கு அரையிறுதி வாய்ப்பு உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

    இதனையடுத்து ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஜூலை 6-ந் தேதி நடைபெறும்.

    இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க தேர்வு குழு விருப்பம் தெரிவித்துள்ளது.

    ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷித் ராணா இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

    டி20 உலகக் கோப்பையின் இடம் பிடித்த சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் ஆகியோடும் இதில் அடங்குவர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார்.
    • ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர் கைல் மேயர்ஸ் 35 ரன்களை சேர்த்தார். இவருடன் களமிறங்கிய ஷாய் ஹோப் ரன் ஏதும் எடுக்காமலும், நிக்கோலஸ் பூரன் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களை விளாசினார்.

    இவரை தொடர்ந்து வந்தவர்களில் ஆண்ட்ரே ரசல் மட்டும் 9 பந்துகளில் 15 ரன்களை சேர்த்தார். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர். தென் ஆப்பிரிக்கா 2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 15 ரன் எடுத்த போது ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து மழை நின்றதால் போட்டி மீண்டும் துவங்கியது. ஆனால் மழை காரணமாக போட்டி தடைப்பட்டதால் ஆட்டம் 17 ஓவர்களாக குறைக்கப்பட்டு தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 17 ஓவர்களில் 123 ரன்கள் அடிக்க வேண்டும் என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

    இதை அடுத்து பேட்டிங் செய்த கேப்டன் மார்க்ரம் 18 ரன்களையும், ஸ்டப்ஸ் 29 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். அடுத்து வந்த கிளாசன் 22 ரன்களையும், மார்கோ யான்சென் 21 ரன்களையும் அடித்தனர்.

    இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி  டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்றைய போட்டியில் தோல்வியுற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

    • நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
    • க்ரிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் மற்றும் ஆண்ட்ரிஸ் கௌஸ் முறையே 12 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த நிதிஷ் குமார் 30 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 10 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஹர்மீத் சிங் 21 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்க அணி 18.5 ஓவர்களில் 114 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இங்கிலாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய க்ரிஸ் ஜோர்டான் 2.5 ஓவர்களில் 10 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் ஒரு ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். இவர் தவிர சாம் கர்ரன் மற்றும் ஆதில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளையும், ரீஸ் டோப்லெ மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றுள்ளது.

    எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 117 ரன்களை குவித்தது. அந்த அணியின் துவக்க வீரர் பில் சால்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 21 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். மறுபுறம் கேப்டன் ஜாஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 7 சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அமெரிக்கா 115 ரன்களில் சுருண்டது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் பார்படாசில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, அமெரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்த் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அமெரிக்கா 18.5 ஓவரில் 115 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிதிஷ் குமார் 30 ரன்னும், கோரி ஆண்டர்சன் 29 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி கட்டத்தில் கிறிஸ் ஜோர்டான் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

    இங்கிலாந்து சார்பில் கிறிஸ் ஜோர்டான் 4 விக்கெட்டும், சாம் கர்ரன், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 215 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இந்திய அணி 40.4 ஓவரில் 220 ரன்கள் எடுத்து வென்றது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது. லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷபாலி வர்மா 25 ரன், பிரியா புனியா 28 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஹர்மன் பிரீத் கவுர் 42 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில், இந்திய அணி 40.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
    • இன்று நடைபெறும் 3-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் 143 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்த நிலையில் லாரா வோல்வார்ட் 61 ரன்னில் அவுட் ஆனார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாஸ்மின் பிரிட்ஸ் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்தது.

    இந்தியா சார்பில் தீப்தி ஷர்மா, அருந்ததி ரெட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஷ்ரேயங்கா பட்டீல், பூஜா வஸ்த்ராகர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட்டானது.

    கிங்ஸ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 148 ரன்களை எடுத்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்ரேலியாவை ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்களில் ஆல் அவுட்டாக்கினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் குல்பதின் நைப் 4 விக்கெட்டும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர். குல்பதின் நைப் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின் ஆடும் லெவனை மாற்றாமல் விளையாடியதே இந்த வெற்றிக்கு காரணம் என கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷித் கான் கூறியதாவது:

    இன்று என்னால் நன்றாக தூங்கமுடியும் என நினைக்கிறேன். கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் மும்பையில் நான் தூங்கவில்லை. மேக்ஸ்வெல் தனி ஆளாக அப்படிப்பட்ட உணர்வை எனக்கு தந்துவிட்டார். ஆனால் இன்று நாங்கள் அதற்கு வெற்றி பெற்றுள்ளோம். இப்பொழுது என்னால் மகிழ்ச்சியால் தூங்கமுடியாது என நினைக்கிறேன்.

    இது உலகக் கோப்பை தொடர். 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணிக்கு எதிரான வெற்றி இது. இப்படிப்பட்ட அணியை நீங்கள் தோற்கடித்தால் அது உங்களுக்கு எப்போதும் பெரிய ஆற்றலை தருகிறது. மேலும் அது உங்களை தூங்க விடாது.

    எங்களுடைய நாட்டுக்கும், அணிக்கும் இது மிகப்பெரிய வெற்றி. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. எங்கள் வீரர்களால் பெருமைப்படுகிறேன். இது எங்களுடைய நாட்டில் இருக்கும் மக்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்கள் இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் என தெரிவித்தார்.

    • முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய வங்காளதேசம் 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.

    ஆன்டிகுவா:

    ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விராட் கோலி 37 ரன், ரிஷப் பண்ட் 36 ரன், ஷிவம் துபே 34 ரன், ரோகித் 23 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக வெற்றிகள் பெற்ற இலங்கையின் சாதனையை இந்தியா சமன்செய்துள்ளது.

    இலங்கை அணி 53 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 49 போட்டிகளில் 33-ல் வெற்றி பெற்றுள்ளது.

    அடுத்த இடங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகியவை தலா 30 போட்டிகளில் வென்றுள்ளன.

    ×