என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
- டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.
- டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில், அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மோதின. முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா அணி 19.5 ஓவரில் 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10.5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஷாய் ஹோப் 82 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இப்போட்டியில் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 27 ரன்கள் குவித்தார் நிகோலஸ் பூரன். இதன் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரின் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் விளாசியவர் என்ற கெய்லின் சாதனையை பூரன் முறியடித்துள்ளார்.
2012 ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் விளையாடிய கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார்.
2024 டி20 உலகக்கோப்பையில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள பூரன் 17 சிக்ஸர்களை விளாசி இந்த புதிய சாதனையை படைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர் அடித்தவர்கள்
1. 2024 - நிக்கோலஸ் பூரன் (வெஸ்ட் இண்டீஸ்) - 227 ரன்கள் - 17 சிக்ஸர்
2. 2012 - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) - 222 ரன்கள் - 16 சிக்ஸர்
3. 2012 - ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா) - 249 ரன்கள் - 15 சிக்ஸர்
4. 2012 - மார்லன் சாமுவேல்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 230 ரன்கள் - 15 சிக்ஸர்
5. 2016 - தமீம் இக்பால் (வங்காளதேசம்) - 295 ரன்கள் - 14 சிக்ஸர்
6. 2021 - பட்லர் (இங்கிலாந்து) - 269ரன்கள் - ௧௩ சிக்ஸர்
- எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
- அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.
ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், ஏ .ஆர்.ரகுமான் இசையில் ஸ்ரேயா கோஷல் பாடிய நன்னாரே பாடலுக்கு எம்.எஸ்.டோனி, விராட் கோலி, ரோகித் நடனமாடுவது போன்ற ஏஐ வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
அந்த வீடியோவை ஸ்க்ரீன் ரெக்கார்டு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
அதில், "அருமையான வெற்றி. என்னை மன்னித்து விடுங்கள் சகோதரர்களே. ஒரு அற்புதமான வீடியோவை நான் பதிவிட்டுள்ளேன். எனது முதல் ஸ்க்ரீன் ரெக்கார்டாக இதை உருவாக்கியவருக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
- நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின.
- இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.
ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித்தின் விக்கெட்டை ஷகிப் அல் ஹசன் வீழ்த்தினார்.
இதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற சாதனையை ஷகிப் அல் ஹசன் படைத்தார்.
டி20 உலகக்கோப்பையில் 40 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19.50 பவுலிங் சராசரியுடனும் 6.89 எக்கனாமியுடன் சிறப்பாக பந்துவீசி 50 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- ஆப்கானிஸ்தான் சார்பில் குர்பாஸ் மற்றும் இப்ராகிம் அரைசதம் அடித்தனர்.
- பேட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்தார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு துவக்க வீரர்களான ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் அரைசதம் அடித்து சிறப்பான துவக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 60 மற்றும் 51 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டமிழந்தனர்.
அடுத்து வவந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் இந்த போட்டியிலும் ஹாட் ட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
அந்த வகையில், உலகக் கோப்பை தொடரில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார். இவர் தவிர ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டாயினிஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
149 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 3 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரை தொடர்ந்து களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். இவர் 59 ரன்களில் நடையை கட்ட ஆஸ்திரேலியா அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆப்கானிஸ்தான் சார்பில் குலாப்தீன் நயிப் 4 விக்கெட்டுகளையும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அஸ்மதுல்லா ஓமர்சாய், முகமது நபி மற்றும் ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் விக்கெட்டை வீழ்த்தினார் பேட் கம்மின்ஸ்.
- டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின.
அப்போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.
இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
அப்போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், கரீம் ஜனத் மற்றும் குல்பாதின் நைப் ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்றி இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்
ஆப்கானிஸ்தான் அணி வீரர் நங்கெயாலியா கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறிவிட்டார். இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை நூலிழையில் பேட் கம்மின்ஸ் இழந்தார்.
டி20 போட்டிகளில் இரண்டு ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்
1. லசித் மலிங்கா (SL)
2. டிம் சவுதி (NZ)
3. மார்க் பாவ்லோவிக் (SER)
4. வசீம் அப்பாஸ் (MALTA)
5. பேட் கம்மின்ஸ் (AUS)
ஆண்கள் T20 உலகக் கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தவர்கள்
1. பிரட் லீ (AUS) vs BAN, கேப் டவுன், 2007
2. கர்டிஸ் கேம்பர் (IRE) vs NED, அபுதாபி, 2021
3. வனிந்து ஹசரங்கா (SL) vs SA, ஷார்ஜா, 2021
4. காகிசோ ரபாடா (SA) எதிராக ENG, ஷார்ஜா, 2021
5. கார்த்திக் மெய்யப்பன் (UAE) vs SL, கீலோங், 2022
6. ஜோசுவா லிட்டில் (IRE) vs NZ, அடிலெய்டு, 2022
7. பேட் கம்மின்ஸ் (AUS) vs BAN, ஆன்டிகுவா, 2024
8. பேட் கம்மின்ஸ் (AUS) vs AFG, கிங்ஸ்டவுன், 2024
- டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 1,207 ரன்கள் குவித்துள்ளார்.
- 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.
நேற்று இரவு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் விராட் கோலி 37 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் 3000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் விராட் கோலி படைத்துள்ளார். இதில் 20 ஓவர் மற்றும் ஒருநாள் உலக்கோப்பைகளும் அடங்கும்.
டி20 உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற சாதனையையும் விராட் கோலி தன்வசம் வைத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பையில் 32 போட்டிகளில் விளையாடி 129.78 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 63.52 என்ற பிரமிக்க வைக்கும் சராசரியுடன் 1,207 ரன்கள் குவித்துள்ளார் விராட் கோலி. இதில் 14 அரைசதங்களும் அடங்கும்.
2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதை விராட் கோலி வென்றுள்ளார்.
50 ஓவர் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்தவர் பட்டியலில் விராட் கோலி 2-ம் இடத்தில் உள்ளார். 37 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1795 ரன்கள் அடித்துள்ளார்.
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது.
- அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
ஆன்டிகுவா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.
ஆன்டிகுவாவில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சினால் தொடக்கத்தில் இருந்தே தடுமாறிய வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ 40 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் அர்ஷிதீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசி ஒரு விக்கெட்டும் வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- முதலில் ஆடிய இந்திய அணி 196 ரன்களைக் குவித்தது.
- இந்திய அணியின் பாண்ட்யா 50 ரன்கள் எடுத்தார்.
ஆன்டிகுவா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று நடந்து வருகிறது.
ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. ரோகித் சர்மா, விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.
ரோகித் 23 ரன்னிலும், விராட் கோலி 37 ரன்னிலும், ரிஷப் பண்ட் 36 ரன்னிலும் அவுட்டாகினர். சூர்யகுமார் யாதவ் 6 ரன்னும், ஷிவம் துபே 34 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய பாண்ட்யா 27 பந்தில் அரை சதம் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
ஆன்டிகுவா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.
குரூப் 1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இன்று இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஆன்டிகுவாவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.
வங்காளதேசம்:
தன்ஜித் ஹசன், லிட்டன் தாஸ், நஹ்முல் ஹொசைன் ஷான்டோ, தவுஹித் ஹ்ருடோய், ஷகிப் அல் ஹசன், மகமதுல்லா, ஜாகர் அலி, ரிஷத் ஹொசைன், மெஹிதி ஹசன், தன்ஜிம் ஹசன் சாகிப், முஸ்தபிசுர் ரஹ்மான்
- கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
- டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் தற்போது நடந்துவரும் உலகக்கோப்பை போட்டிகளுடன் முடிவடைய உள்ள நிலையில் அவருக்கு மாற்றாக கவுதம் காம்பீர் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் தன்னை சிறந்த பயிற்சியாளராக நிரூபித்துள்ளார் காம்பீர். கடந்த 2018 இல் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்ற காம்பீர் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களிலின் ஆட்டம் குறித்து வெளிப்படையான விமர்சனங்களை முன்வைப்பவராக உள்ளார்.
இந்நிலையில்தான் அணியின் வீரராக இருந்த காலத்தில் எம்.எஸ்.டோனி, அணில் கும்ப்ளே ஆகியோரின் கேப்டன்சியில் விளையாடியுள்ள்ள கவுதம் காம்பீரிடம் யாருடைய கேப்டன்சி சிறந்தது என்று சமீபத்தில் நடந்த பேட்டியொன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த காம்பீர், இது மிகவும் சர்ச்சைக்குரிய கேள்வி, இதற்கு பதிலளித்து நான் தலைப்புச் செய்தியில் வர விரும்பவில்லை. ஒவ்வொருவரிடமும் அவரவருக்கேயான பலங்களும் பலவீனங்களும் இருக்கும். நான் முதல் முதலாக டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டன்சியில் விளையாடினேன்.
எனது முதல் ஓடிஐ போட்டி சவுரவ் கங்குலி கேப்டன்சியின்கீழ் அமைந்தது. அணில் கும்ப்ளே கேப்ரான்சியின்கீழ் நான் எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். டோனியின் கேப்டன்சியின்கீழ் அதிக காலம் நான் விளையாடியிருக்கிறேன். அவருடன் விளையாடுவதை நான் விரும்பினேன். அவர் அணியை வழிநடத்தும் பக்குவம் எனக்கு பிடிக்கும் என்று பொத்தாம் பொதுவாக பதிலளித்துவிட்டு நழுவியுள்ளார்.
- சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
- நடப்பு தொடரில் இந்திய அணியின் விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் வங்காளதேச அணியை இன்று எதிர்கொள்கிறது.
நடப்பு தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி லீக் சுற்றில் சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் 24 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
எனவே அவரை மீண்டும் 3-வது இடத்தில் களமிறக்க வேண்டும் என ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய ரசிகர்களும் வல்லுனர்களும் விராட் கோலியின் பார்ம் குறித்து கவலைப்படுவதை நிறுத்தவேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் பேசியதாவது:
விராட் கோலி பார்மில் இருக்கிறாரா, இல்லையா என்பதை பற்றி யோசிப்பதை நிறுத்துங்கள்.
இந்திய கிரிக்கெட்டை பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.
ஐ.பி.எல். தொடரில் சுனில் நரைன் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் அசத்துவதை போல், பும்ரா அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 2 விதமான சூழ்நிலைகளிலும் செயல்பட்டு வருகிறார். அதாவது அமெரிக்காவை விட அவர் இங்கே இன்னும் சிறப்பாக செயல்படுகிறார்.
உலகின் இதர தலைசிறந்த பவுலர்களுக்கும் பும்ராவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதை நீங்கள் பார்க்க முடியும்.
இந்தியா தங்களுடைய பிளேயிங் லெவனில் பும்ராவை வைத்திருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
- டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
- நாளை அதிகாலை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
பார்படாஸ்:
டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின்போது பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் ஓட்டலில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹலால் மாட்டிறைச்சி கிடைக்கவில்லை. இதனால் மாட்டிறைச்சியை ஓட்டலுக்கு தருவித்து அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.
ஆப்கானிஸ்தான் அணி உணவுப் பட்டியலில் ஹலால் இறைச்சியும் இடம்பிடித்திருந்தது. எனவே ஹலால் மாட்டிறைச்சி ஒரு பிரச்சனையாக மாறியது.
இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வீரர் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. சில சமயம் நாங்களே சமைப்போம். அல்லது சில சமயங்களில் வெளியே செல்வோம். இந்தியாவில் கடந்த உலகக் கோப்பையில் எல்லாம் சரியாக இருந்தது. ஹலால் மாட்டிறைச்சி இங்கு ஒரு பிரச்சனையாக மாறியது. ஒரு நண்பர் ஹலால் மாட்டிறைச்சியை எங்களுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் சொந்தமாக சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்