search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் 53 ரன்களை குவித்தார்.
    • வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆடம் ஜாம்பா 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாயினிஸ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. அந்த அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இதனிடையே 11.2 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது.

    தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆஸ்திரேலியா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா சார்பில் டேவிட் வார்னர் 53 ரன்களுடனும், கிளென் மேக்ஸ்வெல் 14 ரன்களுடன் களத்தில் இருந்தனர். வங்காளதேசம் சார்பில் ரிஷத் ஹொசைன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • கேப்டன் நஜ்முல் 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்கா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய வங்காளதேசம் அணிக்கு துவக்க வீரர் டன்சித் ஹாசன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய லிட்டன் தாஸ் 16 ரன்களில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷண்டோ 36 பந்துகளில் 41 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் ஆடிய தவ்ஹித் ரிடோய் 40 ரன்களை எடுத்தார். இவரைத் தொடர்ந்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இதன் மூலம் வங்காளதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளுக்கு 140 ரன்களை சேர்த்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது.

    இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதன் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்று இருக்கிறார்.

    • சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.
    • பசல்ஹாக் பரூக்கி, ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே 8 மற்றும் 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 20 ரன்களை அடித்த நிலையில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 53 ரன்களை குவித்தார்.

    அடுத்து வந்த ஷிவம் துபே 10 ரன்களையும், ஹர்திக் பாண்ட்யா 32 ரன்களை அடித்தனர். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சேர்த்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் பசல்ஹாக் பரூக்கி மற்றும் ரஷித் கான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நவீன் உல் ஹக் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    182 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு சரியான துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் ஹசரதுல்லா சசாய் மற்றும் இப்ராகிம் சத்ரான் 2 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த குல்பதின் நயிப் 17 ரன்களை சேர்த்தார்.

    அசமதுல்லா ஒமர்சாய் 26 ரன்களை சேர்த்தார். நஜிபுல்லா சத்ரான் 19 ரன்களை சேர்க்க அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 47 ரன்களில் வெற்றி பெற்றது.

    இந்திய சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் அரை சதம் விளாசினார்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    பிரிஜ்டவுன்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கள் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே தடுமாறினர். இதனால் ரோகித் வழக்கம் போல இடதுகை வேகப்பந்து வீச்சாளரான பரூக்கி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பண்ட் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

    11 பந்தில் 20 ரன்கள் விளாசிய பண்ட், ரஷித் கான் ஓவரில் எல்பிடபிள்யூ ஆனார். உடனே எதிர்முனையில் இருந்த விராட் கோலி அவுட் என கூற அதற்கு பண்ட் பேட்டில் பட்டது என கூறிய ரிவ்யூ கேட்டார். ஆனால் பேட்டில் படாமல் சென்றது. இதனால் இந்தியாவுக்கு ஒரு ரிவ்யூ வீணானது.

    அதனை தொடர்ந்து மிகவும் மந்தமாக விளையாடிய விராட் கோலி 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த துபே 10 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து சூர்யகுமார் மற்றும் பாண்ட்யா ஜோடி ஆப்கானிஸ்தான் பந்து சிறப்பாக எதிர் கொண்டு ரன்களை குவித்தனர்.

    குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் அரை சதம் விளாசினார். அடுத்த பந்தே அவரும் வெளியேறினார். 32 ரன்னில் இருந்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து 7 ரன்னில் ஜடேஜாவும் நடையை கட்டினார்.

    இறுதி ஓவரில் அக்சர் படேல் ஏதாவது செய்து அணியின் ஸ்கோரை உயர்த்துவாரா என எதிர்பார்த்த நிலையில் 2 பவுண்டரி விளாசி ரசிகர்களின் கனவை நிறைவேற்றினார். கடைசி ஓவரில் மட்டும் 14 ரன்கள் எடுக்கப்பட்டது.

    இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பருக்கி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    • 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன.
    • இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    பிரிஜ்டவுன்:

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    இந்த குரூப் இன்று ஆப்கானிஸ்தான்- இந்தியா மோதுகிறது. இந்த போட்டி பிரிட்ஜ்டவுனில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சிராஜ்-க்கு பதிலாக குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார்.

    20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகள் 8 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 7-ல் இந்தியா வெற்றி கண்டது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா:

    ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், பும்ரா, குல்தீப் யாதவ்.

    ஆப்கானிஸ்தான்:

    ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், நஜிபுல்லா ஜட்ரன், ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய், குல்படின் நைப், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான் (கேப்டன்), நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.

    • இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கோலி, பாபர் அசாம், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் திகழ்கிறார்கள்.
    • அம்ப்ரோஸ் 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் கர்ட்லி அம்ப்ரோஸ். 6 அடி 7 அங்குலம் உயரம் கொண்ட அம்ப்ரோஸ் பந்து வீசுவதற்கு ஓடி வந்தால் பேட்ஸ்மேன்கள் தானாகவே நடுங்குவார்கள். இவர் சச்சின், ஸ்டீவ் வாக் போன்ற தலைசிறந்த பேட்ஸ்மேன்களை கூட திணற வைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரு ஸ்பெல்லில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஏழு விக்கெட் சாய்த்ததை யாராலும் மறக்க முடியாது. 1990-களில் கொடிகட்டி பறந்தார். தற்போது டி20, லீக் போட்டிகள் கிரிக்கெட் விரிவடைந்துள்ளது. மாடர்ன் கிரிக்கெட்டாகி விட்டது.

    இந்த காலக்கட்டத்தில் விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோருக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அம்ப்ரோஸ் கூறுகையில் "நான் விளையாடும்போது சவால்களை எதிர்கொண்டேன். ஒவ்வொரு அணியிலும் சில சிறந்த பேட்ஸ்மேன்கள் இருந்தனர். புகழ் பெற்றவர்கள் என்பது உங்களுக்கு தெரியும். என்னை பொறுத்தவரையில், நான் விளையாடும்போது என்னிடம் இருந்து சிறந்த பந்து வீச்சை வெளியில் கொண்டு வர உதவினார்கள்.

    கடைநிலை பேட்ஸ்மேன்களை விட அவர்களை அவுட்டாக்குவது எனக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்தது.

    தற்போதைய வீரர்கள் பற்றி பேசும்போது, விராட் கோலி, ரூட், பாபர் அசாம், கேன் வில்லியம்சன் சிறந்த வீரர்கள். அவர்களுக்கு எதிராக விளையாடுவது சிறப்பானதாக இருக்கும். ஆனால், என்னுடைய காலத்தில் சில சிறந்த வீரர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன்" என்றார்.

    அம்ப்ரோஸ் 1988 முதல் 2000 வரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 405 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்து ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டதால் சிக்க
    • ஸ்காட்லாந்திடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தால் இங்கிலாந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைக்கான தொடக்க சுற்று ஆட்டம் நடைபெற்றது. "பி" பிரிவில் ஆஸ்திரேலியா- ஸ்காட்லாந்து இடையிலான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் மட்டுமே இங்கிலாந்து அணியால் சூப்பர் 8 சுற்று முன்னேறும் என்ற நிலை இருந்தது.

    இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆஸ்திரேலியா 19.4 ஓவரில்தான் இலக்கை எட்டியது. கடைசி ஓவர் வரை போட்டி சென்றது. இதனால் பரப்பான நிலை ஏற்பட்டது.

    இதனால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் நாட்டிற்கு செல்ல விமானங்களில் டிக்கெட் புக் செய்வதும், கேன்சல் செய்வதுமாக இருந்தனர். அவர்களிடம் பீதி தொற்றியிருந்தது.

    கடைசி ஓவரின் 3-வது பந்தில் டிம் டேவிட் கேட்ச் தவற விட்டபோது இங்கிலாந்து வீரர்கள் அறையில் ஒருவிதமான பதட்டம் இருந்துள்ளது. கேட்ச் விட்டபின்னர் 2 பந்து மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றோம். அதை பார்க்க வேடிக்கயைாக இருந்திருக்கும் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர்களிடம் இருந்து எனக்க சில தகவல் கிடைத்தது. அப்போது போட்டியில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?. உண்மையிலேயே இங்கிலாந்து லீக் சுற்றோடு திருப்பி அனுப்பப் போகிறீர்களா? இது மிகவும் சுவாரஸ்யமான போட்டியாக இருக்கும் எனத் தெரிவித்தனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    • கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
    • ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன் தனது 52வது வயதில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டேவிட் ஜான்சன், இன்று பெங்களூருவில் உள்ள அவரது அபார்ட்மெண்டிற்கு வெளியே இறந்து கிடந்துள்ளார்.

    டேவிட் ஜூட் ஜான்சன், கொத்தனூரில் உள்ள கனக ஸ்ரீ லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

    கிரிக்கெட் வீரர் சிறிது காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மேலும், டேவிட் ஜூன் ஜான்சனின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னாள் கர்நாடக வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன். 1996- 97 சீசனில் இந்தியாவுக்காக விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டேவிட் ஜான்சன். ரஞ்சி டிராபியில் கேரளாவுக்கு எதிராக பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி புகழ் பெற்றார்.

    இதேபோல், உள்நாட்டு சுற்றுகளில் கர்நாடகாவுக்காக 70 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ளார். 1996-ல் அக்டோபரில் டெல்லியில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். காயம்பட்ட ஜவகல் ஸ்ரீநாத்திற்கு பதிலாக அவர் அணியில் இடம்பிடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் டேவிட் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து 16 ஓவர்கள் வீசினார் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் மைக்கேல் ஸ்லேட்டரை டக் அவுட் செய்தார்.

    அவர் அதே ஆண்டில் அடுத்த சுற்றுப்பயணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மற்றொரு டெஸ்டில் விளையாடினார். ஆனால் டர்பனில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே பெற முடிந்தது.

    அவரது சர்வதேச வாழ்க்கை இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே நீடித்தது. ஆனால் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கர்நாடகாவுக்காக தொடர்ந்து விளையாடினார்.

    • வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
    • முதல் தொடரில் வங்காளதேசம் அணியை இந்தியா எதிர் கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜுன் 29-ந் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி விளையாடும் சர்வதேச ஹோம் சீசனுக்கான (2024-25) போட்டிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அந்த வகையில் வங்காளதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

    செப்டம்பரில் வங்காளதேசம் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் டெஸ்ட் தொடருடன் தொடங்கும். அதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் செப்டம்பர் 19-ம் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி கான்பூரில் செப்டம்பர் 27-ம் தேதியும் தொடங்குகிறது. 3 டி20 போட்டிகள் தரம்ஷாலா, டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

    இதைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 16-ம் தேதி பெங்களூருவில் தொடங்குகிறது. 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிகள் முறையா புனே மற்றும் மும்பையில் நடைபெறவுள்ளது.

    அதை தொடர்ந்து 2025-ம் ஆண்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


    • நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம்.
    • முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    பிரிஜ்டவுன்:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி குரூப்1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், குரூப்2-ல் வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த நிலையில் இந்திய அணி சூப்பர்8 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று பிரிட்ஜ்டவுனில் எதிர்கொள்கிறது.

    இந்நிலையில் எனது இலக்கு பும்ரா மட்டும் அல்ல, இந்திய பந்து வீச்சாளர்கள் அனைவருமே என ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரர் குர்பாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உண்மையாக, எனது இலக்கு ஜஸ்பிரித் பும்ரா மட்டும் அல்ல. நான் அனைத்து இந்திய பந்துவீச்சாளர்களையும் அடிக்க பார்க்கிறேன். பொதுவாக ஐந்து பந்துவீச்சாளர்கள் பந்து வீசுவார்கள். அவர்களை நான் சமாளிக்க வேண்டும். இது பும்ராவுக்கு எதிரான ஒரு போர். ஒருவேளை மற்றொரு பந்துவீச்சாளர் என்னை வெளியேற்றலாம். ஆனால், எனக்கு அவரை (பும்ரா) அடிக்க வாய்ப்பு கிடைத்தால் அடிப்பேன். அது பும்ராவாகவோ, அர்ஷ்தீப்பாகவோ அல்லது சிராஜாகவோ இருக்கலாம். எனது ஏரியாவில் பந்து வீசினால் நான் அவர்களை அடிப்பேன் அல்லது நான் ஆட்டமிழந்து வெளியேறுவேன்.

    நாங்கள் இதற்கு முன்பு உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறோம். ஆனால் இந்த முறை ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு, உலகக் கோப்பையில் எப்படியாவது பங்கேற்பதாக எங்கள் மனநிலை இருந்தது. ஆனால் இப்போது எங்கள் மனநிலை சாம்பியன் ஆக வேண்டும் என்பது மட்டுமே. கோப்பையை வெல்வதில் எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை.

    நாங்கள் எங்கள் இலக்குகளை அடைவோம். முதலில் அரையிறுதிக்கும் பின்னர் இறுதிப் போட்டிக்கும் தகுதி பெறுவோம் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு குர்பாஸ் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சால்ட் 87 ரன்கள் குவித்தார்.
    • இதன்மூலம் இன்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை சால்ட் தட்டிச் சென்றார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை குவித்தது.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் பில் சால்ட்டின் அதிரடியால் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக சால்ட் 47 பந்துகளில் 87 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இதன் மூலம் பில் சால்ட் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பல சாதனைகளை படைத்துள்ளார். அதன்படி டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பில் சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    அந்த பட்டியல்:-

    இங்கிலாந்து எதிராக வெஸ்ட் இண்டீஸ் டி20 போட்டிகளில் அதிக ரன்கள்:-

    478 - பில் சால்ட் (9 இன்னிங்ஸ்)

    423 - அலெக்ஸ் ஹேல்ஸ் (13 இன்னிங்ஸ்)

    422 - கிறிஸ் கெய்ல் (14 இன்னிங்ஸ்)

    420 - நிக்கோலஸ் பூரன் (15 இன்னிங்ஸ்)

    390 - ஜோஸ் பட்லர் (16 இன்னிங்ஸ்)

    இதை தவிர ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர் விளாசிய இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். இந்த பட்டியலில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் இருந்தார். அவரை பின்னுக்கு தள்ளி சால்ட் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    எதிரணிக்கு எதிராக இங்கிலாந்து அடித்த அதிக சிக்ஸர்கள் (டி20)

    32 - பில் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ்

    26 - இயன் மார்கன் எதிராக நியூசிலாந்து

    25 - ஜோஸ் பட்லர் எதிராக ஆஸ்திரேலியா

    24 - ஜோஸ் பட்லர் எதிராக தென் ஆப்பிரிக்கா

    இதேபோல் டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலிலும் சால்ட் இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் அவர் 4-வது இடத்தில் உள்ளார்.

    டி20 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்காக அதிக தனிநபர் ஸ்கோர்கள்:-

    116* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இலங்கை, சட்டோகிராம், 2014

    101* - ஜோஸ் பட்லர் எதிராக இலங்கை, ஷார்ஜா, 2021

    99* - லூக் ரைட் எதிராக ஆப்கானிஸ்தான், கொழும்பு 2012

    87* - பிலிப் சால்ட் எதிராக வெஸ்ட் இண்டீஸ், க்ரோஸ் ஐலெட், 2024

    86* - அலெக்ஸ் ஹேல்ஸ் எதிராக இந்தியா, அடிலெய்டு, 2022

    • நிக்கோலஸ் பூரன் 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
    • பில் சால்ட் 87 ரன்களை விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

    இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.

    பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

    ×