search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று முடிவில் 8 அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு முன்னேறின. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    அதன்படி, இன்று வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


    இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார்.

    பின்னர் களமிறங்கிய பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்து தங்களது பங்களிப்பை அளித்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் ரூதர்போர்டு சில பவுண்டரிகள் விளாச, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

    • அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது.
    • தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களாக டெய்லர் - ஆண்ட்ரிஸ் கௌஸ் களமிறங்கினர். அதிரடியாக விளையாடி டெய்லர் 24 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஸ் குமார் 8, ஜோன்ஸ் 0, ஆண்டர்சன் 12, ஷயான் ஜஹாங்கீர் 3 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

    இந்நிலையில் ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஹர்மீத் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் அரை சதம் விளாசினார்.

    அதிரடியாக விளையாடி ஹர்மீத் சிங் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய ஆண்ட்ரிஸ் கெளஸ் 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் அமெரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 194 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் டி காக் 74 ரன்கள் எடுத்தார்.

    ஆன்டிகுவா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் அதிரடியில் மிரட்டினார். ஹென்ரிக்ஸ் 11 ரன்னில் வெளியேறினார்.

    2-வது விக்கெட்டுக்கு டி காக்குடன் மார்கிரம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன்ரேட்டை உயர்த்தியது. 2வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 40 பந்தில் 74 ரன்கள் குவித்து அவுட்டானார். மார்கிரம் 32 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 36 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    அமெரிக்கா சார்பில் நேத்ரவால்கர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அமெரிக்க அணி களமிறங்குகிறது.

    • முதலில் ஆடிய இந்திய அணி 325 ரன்களைக் குவித்தது.
    • அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 312 ரன்களை மட்டுமே எடுத்தது.

    பெங்களூரு:

    இந்தியா, தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 3 விக்கெட் இழந்து 325 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா அதிரடியாக ஆடி சதமடித்தார். மந்தனா 136 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஹர்மன்பிரித் கவுர் 103 ரன்னிலும், ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. மரிஜான் காப் அதிரடியாக விளையாடி 114 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடக்க வீராங்கனையான லாரா வோல்வார்ட் பொறுப்புடன் ஆடி சதமடித்து 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். அணியை வெற்றிக்கு மிக அருகில் அழைத்துச் சென்றார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன், ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியது.

    இந்திய அணி சார்பில் பூஜா வஸ்த்ராகர், தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    • இரண்டு அணிகளும் கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை அணியில் சேர்த்துள்ளது.
    • வேகப்பந்து வீச்சு மூலம் முதலில் நெருக்கடி கொடுப்போம் என அமெரிக்கா கேப்டன் நம்பிக்கை.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஸ்டேஜ் போட்டிகள் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இன்று முதல் சூப்பர் 8 போட்டிகள் நடைபெறுகின்றன.

    இன்றைய முதல் போட்டியில் அமெரிக்கா- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் அமெரிக்கா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் "ஆடுகளம் சிறப்பானதாக இருக்கிறது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் மூலம் முதலில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த விரும்புகிறோம். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சை அணியில் இணைத்துள்ளோம்" என்றார்.

    அமெரிக்கா அணி:-

    1. ஷயன் ஜஹாங்கீர், 2. ஸ்டீவன் டெய்லர், 3. ஆண்ட்ரிஸ் கவுஸ், 4. ஆரோன் ஜோன்ஸ், 5. நிதிஷ் குமார், 6. கோரி ஆண்டர்சன், 7. ஹர்மீத் சிங், 8. ஜாஸ்தீப் சிங், 9. நோஸ்துஸ் கெஞ்சிகே, 10. அலி கான், 11. சவுரப் நெட்ராவால்கர்.

    தென்ஆப்பிரிக்கா அணி:-

    1. டி காக், 2. ரீசா ஹென்ரிட்க்ஸ், 3. மார்கிராம், 4. ஹென்ரிச் கிளாசன், 5, டேவிட் மில்லர், 6. ஸ்டப்ஸ், 7. மார்கோ யான்சன், 8. கேஷவ் மகாராஜ், 9. ரபாடா, 10. நோர்ஜே, 11. ஷம்சி.

    • முதலில் ஆடிய இந்திய அணியில் அதிக பட்சமாக மந்தனா 136 ரன்கள் குவித்தார்.
    • தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை மந்தனா வீழ்த்தினார்.

    பெங்களூரு:

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 136 ரன்கள் குவித்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி விளையாடி வருகிறது.

    இந்நிலையில் இந்த போட்டியில் பந்து வீசிய மந்தனா, தென் ஆப்பிரிக்கா வீராங்கனையான சுனே லூஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்துள்ளார்.

    தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. அந்த அணிக்கு 84 பந்துகளில் 141 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகிறது.

    • மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ராணா Flying kiss கொடுத்து கொண்டாடுவார்.
    • இதனால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன்மூலம் 3-வது முறையாக கொல்கத்தா அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் இந்த அணியில் இடம் பெற்றிருந்த ஹர்ஷித் ராணா இந்த தொடரின் போது சர்ச்சையில் சிக்கினார். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் அவரது முகத்துக்கு முன்னாள் Flying kiss கொடுப்பார். அது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்காக அவருக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதனை வைத்து ரோகித் சர்மா, மயங்க் அகர்வாலை கிண்டலடிப்பார். இது தொடர்பான வீடியோ கூட டிரெண்டானது. இப்படி இந்த ஐபிஎல் தொடரில் பேசுபொருளான Flying kiss குறித்து ஹர்ஷித் ராணா வெளிப்படையாக பேசியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. அப்போதைய நேரத்திற்கு Flying kiss கொடுத்து அந்த தருணத்தை கொண்டாட வேண்டும் என தோன்றியது. எந்த போட்டிகளிலும், வீரருக்கு எதிராகவும் இப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என நான் திட்டமிடவில்லை. கோலியின் மீதுள்ள மரியாதை காரணமாகவே அவரின் விக்கெட்டை வீழ்த்தியபோதும் கொண்டாட்டத்தை தவிர்த்தேன்.

    இவ்வாறு ராணா கூறினார்.

    • மந்தனா 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
    • கவுர் 103 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    பெங்களூரு:

    இந்தியா - தென்ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

    அதன்படி இந்திய அணி தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ஷபாலி வர்மா களமிறங்கினர். இதில் ஷபாலி வர்மா 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேமலதா 24 ரன்னில் வெளியேறினார்.

    இதனையத்து கேப்டன் கவுர்- மந்தனா ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா சதம் விளாசி அசத்தினர்.

    தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மந்தனா 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அதிரடி காட்டிய கவுர் கடைசி ஓவரில் சதம் அடித்தார்.

    இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்தது. கவூர் 103 ரன்னிலும் ரிச்சா கோஷ் 25 ரன்னிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் நோன்குலுலேகோ ம்லபா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • ரஞ்சி போட்டியில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.
    • காயம் காரணமாக விளையாட முடியாது என ஷ்ரேயாஸ் அய்யர் ஒதுங்கி கொண்டார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் அய்யர். 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்குப்பின் இவர் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை. தனது உடல்திறனை நிரூபிக்கும் வகையில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்தியது.

    ஆனால், முதுகு வலி காரணமாக ரஞ்சி போட்டிகளில் இருந்து விலகினார். இதனால் பிசிசிஐ-க்கும் அவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இறுதியாக அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

    அதன்பிறகு ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக விளையாடினார். அவரது தலைமையில் கொல்கத்தா அணி கோப்பையை வென்றது.

    தற்போது இந்திய அணி டி20 உலகக் கோப்பையில் விளையாடி வருகிறது. அதன்பின் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜூலை 5-ந்தேதி தொடங்குகிறது.

    அதன்பின் ஜூலை 2-வது வாரத்திற்குப் பிறகு இலங்கைக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இடம் பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    முன்னணி வீரர்கள் ஓய்வு எடுக்கும் நிலை ஏற்பட்டால் ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இணைய வாய்ப்புள்ளது. டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு கவுதம கம்பீர் தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளது. இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்தவர். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

    • 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்த போது இவர் தான் நடுவராக இருந்தார்.
    • இவர் நடுவராக செயல்பட்ட 2016 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் லீக் போட்டிகள் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்று வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா அணிகள் மோத உள்ளன.

    இந்நிலையில் இதற்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்திய அணிக்கு எமனாக கருதபடும் ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளார். இடம் பிடித்தது மட்டுமல்லாமல் இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் போட்டிக்கு இவர் நடுவராக செயல்பட உள்ளார். இது இந்திய ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    ஏனென்றால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி தோல்வியடைந்த அத்தனை போட்டிகளிலும் ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக செயல்பட்டுள்ளார். இவர் நடுவராக இருந்த 2014-ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அதேபோல் 2015 உலக்கோப்பை அரையிறுதியில் இந்தியா அடைந்த தோல்வி, 2016 டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்தது.

    அதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. அப்போது ரிச்சர்ட் கெட்டில்பரோ தான் நடுவராக பணியாற்றியுள்ளார். அதேபோல் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணியின் டோனி ரன் அவுட்டான போது, நடுவராக இருந்து கெட்டிபரோ கொடுத்த ரியாக்ஷன் இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத ஒன்றாகும். அதேபோல் 2023-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சுப்மன் கில்லுக்கு அவுட் கொடுத்து சர்ச்சையில் சிக்கினார் கெட்டில்பரோ.

    இதை தவிர ஒருநாள் உலகக் கோப்பை இறுதி போட்டியிலும் இவர் தான் நடுவராக செயல்பட்டார். இதிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் என்ன நடக்கும் என ரசிகர்கள் பீதியுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

    சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரங்களையும் எந்தெந்த போட்டிக்கு யார் நடுவர் என்பதையும் ஐ.சி.சி அறிவித்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் மொத்தம் 12 ஆட்டங்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சூப்பர் 8 சுற்றுக்கான நடுவர்கள் விவரம்:-

    1.) அமெரிக்கா - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)

    நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

    கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ரிச்சர்ட் கெட்டில்பரோ

    டிவி நடுவர்: ஜோயல் வில்சன்

    நான்காவது நடுவர்: லாங்டன் ருசரே

    2.) இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் (செயிண்ட் லூசியா)

    நடுவர்: ஜெப் குரோவ்

    கள நடுவர்கள்: நிதின் மேனன் மற்றும் அஹ்சன் ராசா

    டிவி நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்

    நான்காவது நடுவர்: கிறிஸ் பிரவுன்

    3.) ஆப்கானிஸ்தான் - இந்தியா (பார்படாஸ்)

    நடுவர்: டேவிட் பூன்

    கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் பால் ரீபெல்

    டிவி நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்

    நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்

    4.) ஆஸ்திரேலியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)

    நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

    கள நடுவர்கள்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் மற்றும் மைக்கேல் கோப்

    டிவி நடுவர்: குமார் தர்மசேன

    நான்காவது நடுவர்: அட்ரியன் ஹோல்ஸ்டாக்

    5.) இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா (செயிண்ட் லூசியா)

    நடுவர்: ஜெப் குரோவ்

    கள நடுவர்கள்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித் மற்றும் கிறிஸ் பிரவுன்

    டிவி நடுவர்: ஜோயல் வில்சன்

    நான்காவது நடுவர்: கிறிஸ் கேப்னி

    6.) அமெரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் (பார்படாஸ்)

    நடுவர்: டேவிட் பூன்

    கள நடுவர்கள்: பால் ரீபெல் மற்றும் அல்லாஹுதீன் பலேக்கர்

    டிவி நடுவர்: ரோட்னி டக்கர்

    நான்காவது நடுவர்: அலெக்ஸ் வார்ப்

    7.) இந்தியா - வங்காளதேசம் (ஆண்டிகுவா)

    நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

    கள நடுவர்கள்: மைக்கேல் கோப் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    டிவி நடுவர்: லாங்டன் ருசரே

    நான்காவது நடுவர்: ரிச்சர்ட் கெட்டில்பரோ

    8.) ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (செயிண்ட் வின்செண்ட்)

    நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

    கள நடுவர்கள்: குமார் தர்மசேனா மற்றும் அஹ்சன் ராசா

    டிவி நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    நான்காவது நடுவர்: நிதின் மேனன்

    9.) அமெரிக்கா - இங்கிலாந்து (பார்படாஸ்)

    நடுவர்: டேவிட் பூன்

    கள நடுவர்கள்: கிறிஸ் கேப்னி மற்றும் ஜோயல் வில்சன்

    டிவி நடுவர்: பால் ரீபெல்

    நான்காவது நடுவர்: அல்லாஹுதீன் பலேக்கர்

    10.) வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா (ஆண்டிகுவா)

    நடுவர்: ரஞ்சன் மதுகல்லே

    கள நடுவர்கள்: ரோட்னி டக்கர் மற்றும் அலெக்ஸ் வார்ப்

    டிவி நடுவர்: கிறிஸ் பிரவுன்

    நான்காவது நடுவர்: ஷர்புத்தூலா இப்னே ஷாஹித்

    11.) இந்தியா - ஆஸ்திரேலியா (செயிண்ட் லூசியா)

    நடுவர்: ஜெப் குரோவ்

    கள நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்பரோ மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த்

    டிவி நடுவர்: மைக்கேல் கோப்

    நான்காவது நடுவர்: குமார் தர்மசேனா

    12.) ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் (செயிண்ட் வின்செண்ட்)

    நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன்

    கள நடுவர்கள்: லாங்டன் ருசேரே மற்றும் நிதின் மேனன்

    டிவி நடுவர்: அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக்

    நான்காவது நடுவர்: அஹ்சன் ராசா.

    • சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.
    • இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சிட்ரோயன் இந்தியா நிறுவனத்தின் ப்ராண்ட் அம்பாசிட்டராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார்.

    இந்நிலையில் எம்.எஸ்.டோனியை கவுரவிக்கும் விதமாக தோனி எடிஷன் சி3 ஏர்கிராஸ் என்ற புதிய காரை சிட்ரோயன் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

    இந்த காரின் ஷோ ரூம் விலை ரூ.11.82 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் சாதாரண சி3 ஏர்கிராஸ் காரின் விலை ரூ.8.99 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு எடிஷனாக 100 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த காரை வாங்க டோனியின் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சிறப்பு காரில் டோனி கிளவ்ஸ் பெட்டி ஒன்று இருக்கும் என்றும், 100 கார்களில் ஏதேனும் ஒரு காரில் டோனி ஆடோகிராப் போட்ட அவரின் கிளவ்ஸ் ஒன்றும் இருக்கும் என்றும், இது இந்த காரை வாங்கும் டோனி ரசிகரை ஆச்சரியப்படுத்தும் என்று கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசினார்.
    • மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார். இது அவரின் 6-வது ஒருநாள் சதம் ஆகும்.

    இந்த நிலையில் இன்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார்.

    மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா 27 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×