search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் கம்பீர் உரையாடினார்.
    • அப்போது அவரிடம் இந்திய அணி பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார்.

    அபுதாபி:

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் அபுதாபியில் உள்ள மெடோர் மருத்துவமனையில் இளம் விளையாட்டு ஆர்வலர்களுடன் உரையாடினார். அப்போது கம்பீரிடம் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என ஒரு மாணவர் கேட்டார். அப்போது கம்பீர் சிரித்தபடி பதில் கூறியதாவது:

    நான் இந்திய அணிக்கு பயிற்சியாளராக விரும்புகிறேன். தேசிய அணிக்கு பயிற்சி அளிப்பதை விட பெரிய மரியாதை எதுவும் இல்லை.

    உலகெங்கிலும் உள்ள 140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவதைவிட பெரியதாக எப்படி இருக்க முடியும்?

    இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவது நான் அல்ல, 140 கோடி இந்தியர்கள்தான். அவர்கள் இந்தியா உலகக் கோப்பையை வெல்ல உதவுவார்கள்.

    எல்லோரும் நமக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தால், நாங்கள் விளையாடி அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தினால், இந்தியா உலகக் கோப்பையை வெல்லும். மிக முக்கியமான விஷயம் அச்சமின்றி இருக்கவேண்டும் என தெரிவித்தார்.

    • குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்த பாகிஸ்தான், அமெரிக்காவை ஜூன் 6-ம் தேதி சந்திக்கிறது.
    • கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிவரை முன்னேறியது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணி முதல் லீக் ஆட்டத்தில் ஜூன் 6-ம் தேதி அமெரிக்க அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் ஆட்டம் ஜூன் 9-ம் தேதி நியூயார்க்கில் நடைபெறுகிறது.

    இந்நிலையில், டி 20 உலகக் கோப்பை தொடருக்காக பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்கா வந்திறங்கியது. அப்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் சிறிது நேரம் உரையாடினர். இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தது.

    கடந்த தொடரில் இறுதிப்போட்டிவரை முன்னேறிய பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக வெங்கடேஷ் ஐயர் விளையாடி வருகிறார்.
    • ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2021-ம் ஆண்டில் இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வானார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தவர்களில் வெங்கடேஷ் ஐயரும் ஒருவர் ஆவார். இவர் ஐ.பி.எல். மூலம் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஐ.பி.எல். தொடரில் 50 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 7 அரை சதங்களுடன் 1,326 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2021-ம் ஆண்டு அறிமுக தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அந்த ஆண்டே இந்திய டி20-க்கு அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். 9 போட்டிகளில் விளையாடிய இவர் 75 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதன்பின் 2022-ம் ஆண்டு ஒருநாள் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம் வெங்கடேஷ் ஐயருக்கு, சுருதி ரகுநாதனுக்கும் நிச்சயதார்த்தம் முடிவடைந்தது.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரரான தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ஐயர், தனது நீண்ட நாள் காதலியான சுருதி ரகுநாதனை இன்று கரம் பிடித்தார். பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இருவருக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ஜோடிக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    • கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.
    • விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார்.

    நியூயார்க்:

    ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது.

    விராட் கோலி கடந்த ஆண்டில் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,377 ரன்கள் குவித்தார். இதில் 6 சதம், 8 அரை சதம் அடங்கும்.

    கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டார்.

    ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடிய 11 போட்டிகளில் மொத்தம் 765 ரன்கள் எடுத்தார்.

    இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 2023-ம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் சிறந்த வீரருக்கான விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. விருதுக்கான கோப்பை மற்றும் தொப்பியை அவர் பெற்றுக் கொண்டார்.

    விராட் கோலி 4-வது முறையாக சிறந்த வீரருக்கான ஐசிசி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
    • நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    கயானா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று காலை தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை (ஏ பிரிவு) தோற்கடித்தது.

    2-வது போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று நடக்கி றது. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத் தில் 'சி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

    2 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்க இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நிதி நெருக்கடியை குறைத்து பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி கேப்டன் போவெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நல்லதாக இருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும். கோப்பையை வென்றால் எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளிடம் நினைவு கூர்வோம்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். உலக கோப்பையை வெல்வது நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    மேலும் கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.

    இவ்வாறு போவெல் கூறியுள்ளார்.

    • இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
    • நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    டல்லாஸ்:

    9-வது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மகாணத்தில் இருக்கும் டல்லாசில் இன்று தொடங்கியது. வருகிற 29-ந் தேதி வரை இந்த கிரிக்கெட் திருவிழா நடக்கிறது. அமெரிக்காவில் முதன் முறையாகவும், வெஸ்ட் இண்டீசில் 2-வது தடவையாகவும் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுகிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 2-வது ரவுண்டான சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் உள்ள போட்டியை நடத்தும் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. டாஸ் வென்ற அமெரிக்க கேப்டன் மோனக் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    முதலில் விளையாடிய கனடா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன் குவித்தது. தொடக்க வீரரான நவநீத் தல்வால் 44 பந்தில் 61 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்) நிக்கோலஸ் கிர்டன் 31 பந்தில் 51 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்), ஸ்ரேயாஸ் மோவா 16 பந்தில் 32 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அலிகான், ஹர்மித் சிங், கோரி ஆண்டர்சன் தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    195 ரன் என்ற கடினமான இலக்குடன் அமெரிக்கா களம் இறங்கியது. தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி அளித்தது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஸ்டீவன் டெய்லர் ரன் எதுவும் எடுக்காமல் கலீம்சானா பந்துவீச்சில் வெளியேறினார்.

    7-வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான மோனக் படேல் 16 ரன்னில் தில்லான் ஹெய்லிகர் பந்தில் ஆட்டம் இழந்தார்.

    அமெரிக்க அணி 6.3 ஓவர்களில் 42 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்து திணறியது. 3-வது விக்கெட்டான ஆண்ட்ரிஸ் கூஸ்-ஆரோன் ஜோன்ஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடி அமெரிக்க அணியை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு சென்றது.

    வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்த போது தான் இந்த ஜோடி பிரிந்தது. ஆந்த்ரே கூஸ் 65 ரன்னில் நிகில் தத்தா பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 46 பந்தில் 7 புவுண்டரி, 3 சிக்சர்களுடன் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 173 ஆக இருந்தது. 3-வது விக்கெட் ஜோடி 131 ரன் எடுத்தது. அடுத்து கோரி ஆண்டர்சன் களம் வந்தார்.

    அமெரிக்கா 17.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 197 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 14 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 195 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. ஆரோன் ஜோன்ஸ் 40 பந்தில் 94 ரன் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 10 சிக்சர்கள் அடங்கும்.

    அமெரிக்க அணி அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 6-ந் தேதி மோதுகிறது. இதே டல்லாஸ் மைதானத்தில் தான் அந்த போட்டியும் நடக்கிறது. கனடா அணி 2-வது போட்டியில் அயர்லாந்தை வருகிற 7-ந் தேதி சந்திக்கிறது.

    • 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
    • தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்தது .

    தொடக்கம் முதல் கனடா அணி வீரர்கள் அதிரடி காட்டினர். அந்த அணியின் நவ்நீத் தலிவால்,நிக்கோலஸ் கிர்டன் ஆகியோர் அமெரிக்கா அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டனர்.சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதமடித்தனர்.

    தொடர்ந்து நவ்நீத் தலிவால் 61 ரன்களுக்கும் , நிக்கோலஸ் கிர்டன் 51 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.கடைசியில் ஷ்ரேயாஸ் மொவ்வா அதிரடி காட்டி 16 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் கனடா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. தொடர்ந்து 195 ரன்கள் இலக்குடன் அமெரிக்கா விளையாடுகிறது.

    • ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • கூகுள் தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் தொடங்கியது.

    வருகிற 29-ந்தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து, கனடா அணியும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமிபியா, ஸ்காட்லாந்து, ஓமன் அணியும், 'சி' பிரிவில் வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, உகாண்டா, ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா அணியும், 'டி' பிரிவில் தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், நெதர்லாந்து, நேபாளம் அணியும் இடம் பெற்றுள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர்-8 சுற்றுக்குள் நுழையும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை சிறப்பிக்கும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இணைய தேடு பொறியில் முதன்மை நிறுவனமான கூகுள் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்கள், பிரபலங்களின் பிறந்த நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் அதன் தேடு பொறியில் புதிய டூடுலை மாற்றியமைக்கும். தனது டுடூல் அமைப்பை அந்த நாளின் சிறப்புக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது.
    • இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது.

    அதிரடிக்கு பெயர் போன 20 ஓவர் வடிவிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. தென்ஆப்பிரிக்காவில் நடந்த முதலாவது உலகக் கோப்பையில் டோனி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தானை தோற்கடித்து வரலாறு படைத்தது.

    இதன்படி 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன.

    நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று தொடங்கியது. தொடக்க போட்டியில் அமெரிக்கா கனடா அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனக் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , கனடா முதலில் பேட்டிங் செய்து வருகிறது . கனடா பேட்ஸ்மேனான ஆரோன் ஜான்சன் முதல் பாலை எக்ஸ்ட்ரா கவரில் அடித்து அதிரடியாக் ஆட்டத்தை தொடங்கினார்.

    17 ஓவர்கள் கடந்த நிலையில் கனடா அணி 156 ரன்கள் 3 விக்கெட் இழப்பில் ஸ்கோர் செய்துள்ளது. 

    • ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார்.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தியா இன்று பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொண்டது.

    டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சஞ்சு சாம்சன் 6 பந்தில் ஒரு ரன் எடுத்த நிலையில் எம்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

    அடுத்து ரோகித் சர்மா உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்தில் 53 ரன்கள் (தலா நான்கு பவுண்டரி, சிக்ஸ்) எடுத்து ரிட்டையர்டு அவுட் மூலம் வெளியேறினார்.

    அடுத்து சூர்யகுமார் யாதவ் களம் இறங்கினார். ரோகித் சர்மா 19 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் தனது பங்கிற்கு 18 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். ஷிவம் டுபே 16 பந்தில் 14 ரன்கள் எடுத்தார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 40 ரன்கள் (2 பவுண்டரி, 4 சிக்ஸ்) அடிக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது.

    • தினேஷ் கார்த்திக் இன்றளவும் சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தி வருகிறார்.
    • சமீபத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக அவர் அறிவித்தார்.

    புதுடெல்லி:

    தமிழக கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக் கடந்த 2004-ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள், 94 ஒருநாள் போட்டிகள் மற்றும் 60 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இன்றளவும் மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியுடன் ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவித்தார். ஐ.பி.எல் தொடரில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4,842 ரன்களை குவித்துள்ளார்.

    இந்நிலையில், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக தினேஷ் கார்த்திக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.

    இதுதொடர்பாக, தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    இந்த நீண்ட பயணத்தை இனிமையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றிய எனது பயிற்சியாளர்கள், கேப்டன்கள், தேர்வாளர்கள், அணியினர் மற்றும் துணைப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

    மில்லியன் கணக்கானோர் விளையாடும் இந்த நாட்டில், நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். பல ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் நன்மதிப்பை பெற்றிருப்பது எனக்கு கிடைத்த கூடுதல் பாக்கியம்.

    இத்தனை ஆண்டுகள் எனக்குத் துணையாகவும், தூணாகவும் இருந்தவர்கள் என்னுடைய பெற்றோர். அவர்களின் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் நான் இன்று இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. என்னுடைய இந்தப் பயணத்துக்காக தன்னுடைய தொழில்முறை விளையாட்டிலிருந்து வெளியேறி, எனக்காக துணைநின்ற தீபிகாவுக்கு நான் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.

    விளையாட்டைப் பின்பற்றும் ரசிகர்களுக்கும், பாலோயர்ஸ்களுக்கும் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


    • நாட்டுக்காக விளையாட வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என்றார் வாகன்.
    • பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என்றார் கம்ரான் அக்மல்.

    கராச்சி:

    டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக நடப்பு ஐ.பி.எல். தொடரிலிருந்து ஜாஸ் பட்லர், மொயீன் அலி, ரீஸ் டாப்லி, வில் ஜாக்ஸ் போன்ற இங்கிலாந்து வீரர்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்பே வெளியேறினர்.

    இதனால், முழுமையாக விளையாடுங்கள். இல்லையெனில் ஐ.பி.எல். தொடரில் விளையாட இந்தியாவுக்கு வராதீர்கள் என இர்பான் பதான் விமர்சித்தார். அதேபோல, பாதியில் வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம் விதிக்கவேண்டும் என சுனில் கவாஸ்கர் விமர்சித்தார்.

    இதற்கிடையே, நாட்டுக்காக விளையாடுவதற்காக வெளியேறிய இந்த முடிவு மிகவும் நியாயமானது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், சுமாரான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதைவிட தரமான ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதே சிறந்தது என தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சில முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், சமீப காலங்களில் அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் பற்றி மைக்கேல் வாகன் கூறியது உண்மைதான் என கம்ரான் அக்மல் ஒப்புக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக கம்ரான் அக்மல் கூறியதாவது:

    அது மிகவும் வலியைக் கொடுக்கும் கருத்தாகும். ஆனால் அவருடைய கருத்து சரியானது என நினைக்கிறேன்.

    அனைவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் லெவல் தெரியும். இப்போதெல்லாம் நாம் அயர்லாந்து போன்ற சிறிய அணிக்கு எதிராக தோற்கிறோம்.

    எனவேதான் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர் கடினமானது அல்ல என மைக்கேல் வாகன் தெரிவித்தார். அதனால் தவறு நம்முடையது.

    ஒருவேளை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடியிருந்தால் அவர் அப்படி சொல்லியிருக்க மாட்டார்.

    ஐ.பி.எல். தொடரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அங்கே 40,000 முதல் 50,000 ரசிகர்களுக்கு முன் சிறந்த பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் பங்கேற்கின்றனர். எனவே அது கடினமான மற்றும் தரமான கிரிக்கெட்டாகும் என தெரிவித்தார்.

    ×