search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீசாரிடம் SORRY கேட்ட சீமானின் மனைவி... வீட்டு காவலாளி, உதவியாளர் கைது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    போலீசாரிடம் SORRY கேட்ட சீமானின் மனைவி... வீட்டு காவலாளி, உதவியாளர் கைது

    • சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர்.
    • காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி தாக்கினார்.

    நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வன்கொடுமை புகார் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை 11 மணி அளவில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.

    விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை தெரிவித்து ஒட்டிய சம்மனை சில நொடிகளில் நாம் தமிழர் கட்சியினர் கிழித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சம்மன் கிழித்தது குறித்து விசாரணை மேற்கொள்ள வந்த காவல் ஆய்வாளரை சீமான் வீட்டில் வேலைபார்க்கும் காவலாளி தாக்கினார். இதனை அடுத்து அந்த காவலாளியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.

    அப்போது, காவலாளியிடம் இருந்த கைத்துப்பாக்கியை தருமாறு போலீசார் கூறியும் காவலாளி அமல்ராஜ் கொடுக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தது தொடர்பாக சீமான் வீட்டு உதவியாளரான சுதாகரனையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனை தொடர்ந்து, போலீசாரை காவலாளி தாக்கியதற்கு சீமானின் மனைவி கயல்விழி மன்னிப்பு கேட்டார்.

    அடுத்தடுத்து நடைபெற்று வரும் சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவிவருகிறது.

    Next Story
    ×