என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
மீன் அங்காடி கட்ட எதிர்ப்பு போலீசாருடன் தள்ளு முள்ளு-60 பேர் கைது
- இதனடிப்படையில் துறைமுகத்தை ஒட்டி தேங்காய்திட்டு செல்லும் பாதையில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.
- பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் நேதாஜி நகர் அம்பேத்கர் சாலையின் இருபுறத்திலும் மீன் விற்கின்றனர்.
இதனால் காலையில் பள்ளி, அரசு அலுவலகங்கள் தொடங்கும் நேரத்தில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் அங்கு மீன் விற்ப னையை வேறு இடத்தில் மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் துறைமுகத்தை ஒட்டி தேங்காய்திட்டு செல்லும் பாதையில் அரசுக்கு சொந்த மான இடம் உள்ளது. அந்த இடத்தில் மீன்மார்க்கெட் கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்கான பூமி பூஜையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அங்கு மீன் மார்க்கெட் கட்ட நேதாஜி நகர் பகுதி மக்களும், சில சமூக அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மார்க்கெட் கட்டுவதை எதிர்த்து மறியல் நடத்தப்படும் என அவர்கள் அறிவித்தனர்.
இதற்காக இன்று காலை உப்பளம் கல்லறை அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். அம்பேத்கர் சிலை அருகே அவர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அவர்கள் பேச்சு வார்த்தையை ஏற்க மறுத்து போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாருடன் தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டம் நடத்திய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்