என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு ஆசை காட்டி தொழிலதிபரிடம் ரூ.34½ லட்சம் பறிப்பு
- ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர்.
- கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கோலாஸ் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 65) தொழிலதிபர்.
பிரைவேட் கன்சல்டன்சி நடத்தி வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் தற்போது கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நிறைய லாபம் வருகிறது.
எனவே கிரிப்டோ கரன்சியில் நீங்கள் முதலீடு செய்யுங்கள் என்று கூறியுள்ளனர். மேலும், அவருக்கு கிரிப்டோ கரன்சி எப்படி முதலீடு செய்வது என்ற விவரத்தை சில வீடியோக்கள் மற்றும் வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பியுள்ளனர். தங்களுக்கு எந்த கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற விவரம் தெரியும் என்றும் கூறியுள்ளனர்.
ஒரு சிறிய தொகையை ராமகிருஷ்ணன் பெயரிலேயே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து 5 சதவீதம் உடனடியாக லாபம் கிடைக்குமாறு செய்துள்ளனர். இதனால் அவர்கள் மீது ராமகிருஷ்ணனுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து கடந்த 15 நாட்களாக ரூ.34 லட்சத்து 50 ஆயிரத்தை பல தவணைகளாக அனுப்பியுள்ளார். ஆனால் அவர்கள் எந்த லாபத்தையும் ராமகிருஷ்ணனுக்கு அவர்கள் அனுப்பவில்லை.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் போலீஸ் சூப்பிண்டு பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்