என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "A leopard killed a cow near Coonoor"
- தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது.
- வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம குன்னூர் அருகே உள்ளது கிளிஞ்சாடா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் வீடுகளில், ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது. வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது.
கிளிஞ்சடா கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் நேற்று தனது மாட்டினை மேய்ச்சலுக்காக அங்குள்ள புல்வெளியில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பசுமாட்டினை தாக்கி கொன்றது. மாடு கத்தும் சத்தம் கேட்டு, குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர்.
அப்போது சிறுத்தை ஒன்று மாட்டினை அடித்து கொன்று இழுத்து ெசன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே சிறுத்தை அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.
தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்