என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "adulterated ghee problem"
- இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம்.
- சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை செல்ல திட்டம்.
சென்னை:
திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்து இருப்பதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன.
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் மற்றும் இந்து சமூக அமைப்புகள் உள்பட 16 அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் கோவிலின் புனித தன்மையும், நம்பிக்கையும் காக்கப்படவும் பெருமாளிடமே பிரார்த்தனை செய்யவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்தனர்.
அதன்படி நாளை (சனிக்கிழமை) அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், கருடாழ்வார் சன்னதிகளில் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
அதேபோல் அடுத்த வாரம் சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சனிக்கிழமை திருமலையில் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்