search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Changeable"

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
    • சில மணி நேரங்களிலேயே வானம் மீண்டும் இருண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலையாக மாறியது

    புதுச்சேரி:

    புதுவையில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டி எடுத்து வருகிறது

    இதனால் புதுவை மக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதனிடையே, இலங்கை மற்றும் அதையொட்டிய குமரிக் கடல் பகு திகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நில வுகிறது. இதன் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திரு ந்தது.

    அதன்படி, புதுவையில் நேற்றிரவு குளிர்ந்த காற்று வீசியது. இன்று அதிகாலை 4 மணியளவில் மழை பெய்தது. பின்னர் 8 மணிக்கு மேல் வானம் இருண்டு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் மழை நீடித்தது. இதனையடுத்து வெயில் சுட்டெரித்தது.

    அடுத்த சில மணி நேரங்களிலேயே வானம் மீண்டும் இருண்டு குளிர்ந்த சீதோஷ்ண நிலையாக மாறியது. இதனால் புதுவை க்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×