search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coonoor"

    • தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது.
    • வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம குன்னூர் அருகே உள்ளது கிளிஞ்சாடா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேலும் வீடுகளில், ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் நிறைந்து காணப்படுகிறது. வனத்தையொட்டி இருப்பதால் வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து வருகிறது.

    கிளிஞ்சடா கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் நேற்று தனது மாட்டினை மேய்ச்சலுக்காக அங்குள்ள புல்வெளியில் விட்டு விட்டு வீட்டிற்கு சென்றார்.

    இந்த நிலையில் அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பசுமாட்டினை தாக்கி கொன்றது. மாடு கத்தும் சத்தம் கேட்டு, குமார் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு சென்றனர்.

    அப்போது சிறுத்தை ஒன்று மாட்டினை அடித்து கொன்று இழுத்து ெசன்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறை யினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள்ளாகவே சிறுத்தை அங்கிருந்து வனத்திற்குள் சென்று விட்டது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த பகுதி முழுவதும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சப்-கலெக்டர் தகவல்
    • அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் .

    ஊட்டி

    குன்னூரில் பேரிடர் மேலாண்மை பொதுமக்கள் மீட்பு குழு பயிற்சிக் கூட்டம் தனியார் கல்லூரியில் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் பேரிடர் காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு முன் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்றும், உடனடியாக மின்சாரத் துறை, மற்றும் வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் குழுக்கள் அமைத்து ஏதாவது சம்பவங்கள் நடந்ததால் எவ்வாறு தெரிவிப்பது என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இது குறித்து சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறியதாவது:-

    குன்னூரில் 15 இடங்கள் மற்றும் கோத்தகிரியில் 25 இடங்களில் அபாயகரமான இடங்களாக கண்டு அறியப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக குன்னூர் எம்.ஜி.ஆர்.நகர், கன்னிமாரியம்மன் கோவில், பர்லியார் மற்றும் கோத்தகிரி பகுதியில் உள்ள கட்டபெட்டு பாரதிநகர், இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகள் அபாயகரமானது.

    மேலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடக்கிழக்கு பருவ மழை சமயத்தில் ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அதனை கண்காணிக்க குன்னுார் பகுதியில் 750 நபர்களையும், கோத்தகிரி பகுதியில் 713 நபர்களையும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே இந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக பொதுமக்கள் 1077 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் குன்னூர் வட்டாச்சியர் சிவக்குமார், கோத்தகிரி வட்டாச்சியர் காயத்திரி, அரசு அதிகாரிகள், பொது நல அமைப்புகள், பொது மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
    • பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அரவேணு:

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. சிறு, குறு விவசாயிகள் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பச்சை தேயிலைக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

    தேயிலை விலை வீழ்ச்சிக்கு தீர்வு காணவும், குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.30 நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுப்பதற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விவசாயிகளிடம் கேட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி மாவட்டம் முழுவதும் இருந்து 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஊர்த்தலைவர்கள், விவசாயிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நீலகிரி மாவட்ட சிறுவிவசாயிகள் சங்கம் சார்பில் கோத்தகிரி அருகே கேர்கம்பை கிராமத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு சங்க தலைவர் போஜன் தலைமை தாங்கினார். கேர்கம்பை ஊர்த்தலைவர் நஞ்சாகவுடர் அனைவரையும் வரவேற்றார்.தொடர்ந்து விவசாயிகளிடம் இருந்து ஆலோசனைகள் கேட்கப்பட்டது.

    கூட்டத்தில் ஊட்டியில் அணிக்கொரை கிராமத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் சிலரால் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக ரூ.30 நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகளை ஒன்று திரட்டி குன்னூர் தேயிலை வாரிய அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் உண்ணாவிரதம் நடத்தும் தேதியை தீர்மானிப்பது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் நீலகிரியில் உள்ள சிறு குறு விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

    • குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது.
    • இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருகிறது.

    குன்னூர்

    நீலகிரி மாவட்டம், குன்னூா் சிம்ஸ் பூங்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். அவர்கள் பூங்காவில் உள்ள மலர்கள் மற்றும் மூலிகை செடிகளை கண்டு ரசிப்பர்.

    பின்னர் பூங்காவில் உள்ள புல்தரை சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாறியும், குழந்தை களுடன் விளையாடி மகிழ்ந்தும் உற்சாகமாக பொழுதை கழிப்பா்.

    குன்னூரில் அண்மையில் பெய்த மழையாலும் பாா்வையாளா்கள் நடந்து சென்றதாலும் புல்தரை சேதமாகியுள்ளது. இதையடுத்து புல்தரையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து பூங்காவில் உள்ள புல்தரை தற்காலிகமாக மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் நடைபெறும் இரண்டாவது சீசனுக்கு முன்பாக பூங்கா மீண்டும் புதுப்பொலிவு பெறுவதற்கு ஏதுவாக, புல்தரை பராமரிக்கப்பட்டு வருவதாக தோட்டக்கலைத் துறையினா் தெரிவித்து ள்ளனா்.

    • பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.
    • தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்

     ஊட்டி:

    குன்னூரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தமிழ்நாடு கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சிவில்சப்ளை குடோனில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    கூட்டுறவு பண்டகசாலையில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் அரிசி எவ்வாறு வழங்கப்படுகிறது. அரிசி நல்ல அரிசியாக வழங்கப்படுகிறதா, பொதுமக்களுக்கு எத்தனை கிலோ அரிசி வழங்கப்படுகிறது,

    எத்தனை கிலோ சர்க்கரை வழங்கப்படுகிறது, கோதுமை மற்றும் பருப்பு எத்தனை கிலோ வழங்கப்படுகிறது, எத்தனை கிலோ கடைகளில் இருப்பு உள்ளது, மண்எண்ணை எத்தனை லிட்டர் ஒரு குடும்ப அட்டைக்கு வழங்கப்படுகிறது, எந்த நாளில் மண்எண்ணை வழங்கப்படுகிறது என்று பொருட்களை வாங்க வந்த பொதுமக்களிடம் வனத்துறை அமைச்சர் நேரில் கேட்டறிந்தார்.

    கடைகளில் வைக்கப்பட்டிருந்த அரிசியை எடுத்துபார்த்து ஆய்வு செய்தும் பருப்பு மற்றும் கோதுமையையும் ஆய்வுமேற்கொண்டார். சில கடைகளில் தரைகள் மிகவும் மோசமாக இருந்ததை பார்த்து ஊழியர்களை அமைச்சர் எச்சரிக்கை செய்தார்

    தமிழக முதல்-அமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்து வரும் நிலையில ்பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றை எலிகள் வீணாக்குவதை கூட்டுறவு கடை நடத்தும் கடைக்காரர்கள் அதனை தடுக்காமல் வீண் செய்து வருவதை கண்டித்து எச்சரிக்கை செய்தார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்

    நீலகிரி மாவட்ட கலெக்டர்அம்ரித், குன்னூர் சப்-கலெக்டர் தீப விக்னேஷ்வரி, குன்னூர் நகரசபை தலைவர் சீலா கேத்தரின் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.  

    • இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது.
    • சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது.

    குன்னூர்:

    தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கு

    ன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவ மழை தான் அதிக அளவு பெய்யும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழையும் தீவிரமாக பெய்து வருகிறது. படகு சவாரி நிறுத்தம் கடந்த 2 நாட்களாக காற்றுடன் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர் பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. குன்னூரில் முக்கிய சுற்றுலா தளமாக தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்கா உள்ளது.

    இந்த பூங்காவில் ஏரி உள்ளது. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஏரியில் படகு சவாரி நடைபெற்று வருகிறது. ஏரியில் 14 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன் காரணமாக பூங்கா ஏரியில் படகு சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. சவாரி இல்லாததால் படகு இல்லத்தில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    • ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • நவ பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன.

    ஊட்டி:

    குன்னூர் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. காட்டெருமைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அவைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நடமாடி வருகின்றன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு குன்னூர் அருகேயுள்ள ஜெகதளா குடியிருப்பு பகுதியில் புகுந்த கரடி வீடுகளின் கதவை தட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையின் இருப்புறமும் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளன. இங்கு தற்போது இயற்கையாக விளையும் சோலைப் பழமான நவப்பழ சீசன் தொடங்கியுள்ளது.

    இந்த பழத்தை ருசிக்க கரடிகள் அடிக்கடி குன்னூர்- மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் உலா வருகின்றன. மரப்பாலம் அருகே குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையும் ரெயில் பாதையும் சந்திக்கும் இடத்தில் கரடி ஒன்று ரெயில் பாதையின் ஓரத்தில் அமர்ந்திருந்தது. இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது.
    • விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    அரவேணு :

    கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கான இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் பயிற்சி குன்னூர் காட்டேரி பூங்காவில் நடைபெற்றது. விவசாயிகளுக்கு இயற்கை உரம் தயாரித்தல், உயிர் உரங்களின் பயன்பாடு பற்றி விஞ்ஞானிகள் விளக்கி கூறினர்.

    கோத்தகிரி தோட்டகலைதுறை மூலம் நடைபெற்ற இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, பிரவீணா ஆகியோர் செய்திருந்தனர். இதில் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதி இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். நீலகிரி தோட்டகலை இயற்கை விவசாய சங்க செயலாளர் ராம்தாஸ் நீலகிரி மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்து விளக்கி கூறினார்.

    • நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.
    • நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு வருகை தந்தாா்.

    போரில் உயிா் தியாகம் செய்த ராணுவ வீரா்களின் நினைவுத் தூணில் அவர் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். பின்னா் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தைப் பாா்வையிட்டாா்.

    இதைத் தொடா்ந்து, முப்படை பாதுகாப்பு அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி தலைவா் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் முன்னிலையில் நடைபெற்ற 'இந்தியா ஐந்து டிரில்லியன் டாலா் பொருளாதார நிலையை அடைய மாநிலங்களின் வளா்ச்சி, சவால்கள் மற்றும் வாய்ப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினாா்.

    மாறிவரும் நவீன போா் சூழலில் முப்படைகள் ஒருங்கிணைந்து பல்முனை நடவடிக்கைகள் மூலம் போரை முழுமையாக எதிா்கொள்வது அவசியம் எனவும், சிறப்பான செயல்பாடுகள் மூலம் நாட்டின் புகழைத் தாங்கி நிற்கும் இக்கல்லூரின் செயல்பாடுகள் தொடர வேண்டும் எனவும் அமைச்சா் கூறினார். 

    • குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் ஜமாபந்தி முகாம் நடந்தது.
    • பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டு, இதில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 28-ந் தேதி முதல் நேற்று வரை என 3 நாட்கள் நடந்த ஜமாபந்தி முகாமில் குன்னூர் தாலுக்காவில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மக்கள் பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டையில் பெயர் திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்திருந்தனர்.

    அதன்படி, நேற்று வரையில் பொதுமக்களிடமிருந்து 401 மனுக்கள் பெறப்பட்டன. இதில், மனுக்களில் 49 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட வருவாய்துறை அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, வட்டாச்சியர் சிவக்குமார் உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    ஊட்டி:

    குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் தூய்மை பணியாளர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை, என் பொறுப்பு என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, நகர்நல அலுவலர் கோபாலகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் மணி மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மேலும் உணவு கழிவுகள், இறைச்சி கழிவுகளை தனியாக வழங்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் தரம் பிரித்து சரியாக வழங்குபவர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முன்னதாக தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் தூய்மை குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    ஊட்டி நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டு பகுதியில் தூய்மை பணிகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

    நகரமன்ற உறுப்பினர் விசாலாட்சி தலைமையில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் மற்றும் நகர மன்ற தலைவர் வாணிஸ்வரி முன்னிலையில் தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பலர் மற்றும் மாணவ -மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்தனர்.  

    • குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.
    • 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

     ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் வெலிங்டனில் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி உள்ளது.

    சா்வதேச அளவில் புகழ்பெற்ற இக்கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன், பாகிஸ்தான் உள்பட பல வெளிநாட்டு முப்படை அதிகாரிகள் பயிற்சி பெறுகின்றனா்.

    கடந்த ஏப்ரல் மாதம் 77 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 479 அதிகாரிகள் பட்டங்கள் பெற்றனர். இந்தநிலையில் 78 -வது பயிற்சி வகுப்புகள் நேற்று தொடங்கின. பயிற்சி வகுப்புகளை கல்லூரி முதல்வா் கமாண்டென்ட் லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.மோகன் தொடங்கிவைத்தாா்.

    இதில் இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையைச் சோ்ந்த 439 அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமை ச்சகத்தின் தொடா்புடைய சேவைகளைச் சோ்ந்த அதிகாரிகள் சோ்ந்துள்ளனா். 11 மாதங்கள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்ததும் சென்னை பல்கலைக்கழகத்தின் சாா்பில் எம்எஸ்சி டிபன்ஸ் பட்டம் வழங்கப்படும்.

    பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள அதிகாரிகளுக்கு பாடத் திட்டம் மட்டுமல்லாமல், குதிரையேற்றம், மலையேற்றம், படகு சவாரி, சைக்கிள் சவாரி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும்.

    ×