search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hindu social organizations"

    • இந்து சமூக அமைப்புகள் ஆலோசனை கூட்டம்.
    • சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை செல்ல திட்டம்.

    சென்னை:

    திருப்பதி லட்டு தயாரிக்கும் நெய்யில் கலப்படம் செய்து இருப்பதாக வெளியான தகவல்கள் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் வலுத்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளும் களம் இறங்கி உள்ளன.

    இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிசத் மற்றும் இந்து சமூக அமைப்புகள் உள்பட 16 அமைப்புகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது.

    அப்போது இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படவும் கோவிலின் புனித தன்மையும், நம்பிக்கையும் காக்கப்படவும் பெருமாளிடமே பிரார்த்தனை செய்யவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்தனர்.

    அதன்படி நாளை (சனிக்கிழமை) அனைத்து பெருமாள் கோவில்கள், ஆஞ்சநேயர் கோவில்கள், கருடாழ்வார் சன்னதிகளில் சிதறு தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    அதேபோல் அடுத்த வாரம் சென்னையில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளார்கள்.

    புரட்டாசி கடைசி சனிக்கிழமைக்கு முன்னதாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரை சென்று சனிக்கிழமை திருமலையில் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

    ×