என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாஜ்பாய்"

    • ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
    • 2014-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்தியாவில், பா.ஜ.க.வை சேர்ந்த வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதுதான் ஜி.எஸ்.டி.க்கான விதை தூவப்பட்டது. ஜி.எஸ்.டி.க்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான குழு, அப்போது மேற்கு வங்காள நிதி மந்திரியாக இருந்த அசிம் தாஸ்குப்தா தலைமையில் 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு விஜய் கேல்கர் கமிட்டி, வரி சீர்திருத்தத்தை பரிந்துரைத்ததோடு, ஜி.எஸ்.டி.யின் முக்கியத்துவம் பற்றியும் எடுத்துக்‌ கூறியது.

    மறைமுக வரிக்கு மாற்றாக ஜி.எஸ்.டி.யை கொண்டு வரவும் பரிந்துரை செய்தது. 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ப.சிதம்பரம் 2006-07 பட்ஜெட்டில், 2010-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக, 2008-ம் ஆண்டு ஜி.எஸ்.டி.யை செயல்படுத்த மாநில நிதி மந்திரிகளை உள்ளடக்கிய அதிகாரமளிக்கும் வகையிலான குழு அமைக்கப்பட்டது. இந்த குழு, அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

    2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்பதற்காக ஜி.எஸ்.டி. விவாத அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஜி.எஸ்.டி. வரியின் அடிப்படை கட்டமைப்புகளை அப்போதைய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்தது. ஜி.எஸ்.டி.க்கு அடித்தளம் இடும் வகையில் வணிக வரிகளை கணினி மயமாக்கும் திட்டம் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது.

    எனினும், ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கான தேதி 2011-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி என மாற்றியமைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதற்கு 115-வது சட்ட திருத்த மசோதாவை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த நிதி மந்திரி மற்றும் மாநில நிதி மந்திரிகள் கூட்டத்தில், 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் ஜி.எஸ்.டி. தொடர்பான விவகாரங்களை பேசி முடித்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    2013-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பாராளுமன்ற நிலைக்குழு ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போது குஜராத் முதல்-மந்திரியாக இருந்த, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார். கீழவையில் இருந்த ஜி.எஸ்.டி. மசோதாவும் காலாவதியானது.

    2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 122-வது சட்ட திருத்த மசோதாவாக பாராளுமன்றத்தின் கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதாவை மீண்டும் கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த காங்கிரஸ் கட்சி, பாராளுமன்ற நிலைக்குழு மீண்டும் அந்த மசோதாவை ஆய்வு செய்ய வலியுறுத்தியது. 2015-ம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற கீழவை ஒப்புதல் கொடுத்ததோடு, மேலவைக்கும் அனுப்பப்பட்டது.

    2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், மேலவையில் இந்த மசோதா பெரும்பான்மையை பெறவில்லை. இதையடுத்து கீழவை மற்றும் மேலவையின் உறுப்பினர்கள் அடங்கிய இணைக்குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மேலவையில் ஜி.எஸ்.டி. மசோதா பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்தது. அதே மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலும் அமைக்கப்பட்டது. அதன் முதல் கூட்டமும் நடந்தது.

    நவம்பர் மாதம் 4 வரி விகிதங்கள் அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என அமல்படுத்தப்படும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் தெரிவித்தது. மேலும் வரி செலுத்துபவர்கள் பதிவு செய்வதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டது. 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம், ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்படும் என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

    பிப்ரவரி மாதம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடுகளை ஈடுகட்டுவதற்கான வரைவினை ஜி.எஸ்.டி. கவுன்சில் இறுதி செய்தது. மார்ச் மாதம் மத்திய மந்திரி சபை ஜி.எஸ்.டி. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது. கீழவையில் ஜி.எஸ்.டி. மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. மே மாதம், சுமார் 1,200-க்கும் மேற்பட்ட சரக்கு மற்றும் சேவைகள் 5 முதல் 28 சதவீத வரி விகித வரம்புக்குள் கொண்டு வரப்பட்டன.

    ஜூன் மாதம், ஜம்மு-காஷ்மீரை தவிர்த்து அனைத்து மாநிலங்களும் மாநில ஜி.எஸ்.டி. சட்டத்தை இயற்றின. அதே மாதம் 30-ந்தேதி (ஜூன்) நள்ளிரவு முதல், ஜி.எஸ்.டி. வரி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை தவிர்த்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் ஜூலை 7-ந்தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்றியது.

    • பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
    • இப்படத்தில் வாஜ்பாய் கதாப்பாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி நடிக்கவுள்ளார்.

    பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த வாஜ்பாயின் வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் ரவி ஜாதவ் இயக்க, உத்கர்ஷ் நைதானி கதை எழுதுகிறார். இப்படத்தில் பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதி வாஜ்பாய் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை பானுஷாலி ஸ்டுடியோஸ் மற்றும் லெஜண்ட் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

    பங்கஜ் திரிபாதி

    பங்கஜ் திரிபாதி

     

    இந்தப் படம் குறித்து நடிகர் பங்கஜ் திரிபாதி கூறியதாவது, "இப்படிப்பட்ட மனிதாபிமான அரசியல்வாதியை திரையில் காட்டவுள்ளது எனக்கு பெருமை. அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல, அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் மற்றும் புகழ்பெற்ற கவிஞர். அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பது என்னைப் போன்ற ஒரு நடிகருக்குக் கிடைத்த பாக்கியம்" என்று கூறியுள்ளார்.

    இப்படம் அடுத்த ஆண்டு வாஜ்பாயின் பிறந்தநாளான டிசம்பர் 25 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார்.
    • இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார்.

    புதுடெல்லி:

    பா.ஜனதாவை நிறுவிய தலைவர்களில் ஒருவரான வாஜ்பாய், திருமணமே செய்து கொள்ளவில்லை. 3 தடவை பிரதமர் பதவி வகித்துள்ளார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு காலமானார்.

    அனைத்து கட்சி தலைவர்களாலும் மதிக்கப்பட்ட வாஜ்பாயின் புதிய வாழ்க்கை வரலாற்று நூலை அபிஷேக் சவுத்ரி என்பவர் 2 தொகுதிகளாக எழுதி உள்ளார். 'வாஜ்பாய்-அசென்ட் ஆப் ஹிண்டு ரைட்' என்ற அந்த புத்தகத்தில் புதிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    நூலின் சில பகுதிகள் வருமாறு:-

    கடந்த 1960-ம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜான் கென்னடியும், ரிச்சர்டு நிக்சனும் போட்டியிட்டனர். அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில், அந்த தேர்தல் பிரசாரத்தின் பார்வையாளராக வாஜ்பாய் அமெரிக்கா சென்றார்.

    அவரது முதலாவது வெளிநாட்டு பயணம் அதுவே ஆகும். 1960-ம் ஆண்டு செப்டம்பர் 25-ந் தேதி அவர் அமெரிக்காவுக்கு விமானம் ஏறினார். ரெயில்வே தொழிலாளர்கள் நலனில் வாஜ்பாய்க்கு இருந்த அக்கறை காரணமாக அவர் அழைக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். பத்திரிகை எழுதியது.

    ஐ.நா. பொதுச்சபை கூட்டத்துக்கு சென்ற பிரதிநிதிகள் குழுவில் வாஜ்பாய் பெயரை அப்போதைய பிரதமர் நேரு சேர்த்ததும் இந்த பயணத்துக்கு ஒரு காரணம்.

    ஐ.நா.வுக்கான நிரந்தர இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இளம் ஐ.எப்.எஸ். அதிகாரி மகாராஜாகிருஷ்ணா ரஸ்கோத்ராவுடன் வாஜ்பாய் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார். நியூயார்க்கில் இருந்த பெரும்பாலான நேரங்களில் ரஸ்கோத்ராவுடன் இருந்தார்.

    அப்போது இருவரும் 30 வயது முதல் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தனர். ஐ.நா. தலைமையகத்தில் இல்லாத நேரங்களில், ஆர்.எஸ்.எஸ். பத்திரிகைக்கு எழுதி அனுப்புவதும், நியூயார்க்கை சுற்றி பார்ப்பதுமாக வாஜ்பாய் நேரத்தை பிரித்துக்கொண்டார்.

    அருங்காட்சியகங்கள், கலைக்கூடங்கள் ஆகியவற்றுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றார். ஆனால் அவையெல்லாம் வாஜ்பாய்க்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

    சில நேரங்களில், இரவுநேர கேளிக்கை விடுதிகளுக்கு வாஜ்பாயை ரஸ்கோத்ரா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, இரவு விடுதி எப்படிப்பட்டது என்று அறியாதவராக வாஜ்பாய் இருந்தார். ''அங்கு ஆடை அவிழ்ப்பு நடக்காது, நவீன இசையின் பரிணாம வளர்ச்சியை பார்க்கலாம்'' என்று ரஸ்கோத்ரா உறுதி அளித்தார்.

    அதன்பிறகு, வாஜ்பாய் ஆர்வமாக இரவு விடுதிகளுக்கு சென்றார்.

    இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

    • பிரதமரான 3 முறையும் நிறைவு காலத்திற்கு முன்பே பதவியை இழந்தார்
    • கார்கில் ஊடுருவலை எதிர்த்ததால் பதவியை இழந்தேன் என்றார் நவாஸ்

    இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில், வரும் 2024 பிப்ரவரி 8 அன்று அந்நாட்டு பாராளுமன்றத்தின் 336 இடங்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக பதவி வகித்தவர் முகமது நவாஸ் ஷரீப் (73). மூன்று முறையும், இவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் முன்பே பல்வேறு காரணங்களால் ஆட்சியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ள நவாஸ் ஷரீப், அடுத்த வருட தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக தீவிரமாக களமிறங்கி உள்ளார்.

    இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்து அவர் தெரிவித்ததாவது:

    1999ல் இந்தியாவிற்கு எதிராக ஜெனரல் முஷாரப் கார்கில் பகுதியில் ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நான் எதிர்த்தேன். அதனால் நான் பதவி விலகும் நிலை ஏற்பட்டது.

    இந்தியாவுடன் நேர்மறையான உறவு வேண்டும் என விரும்புபவன் நான். 3 முறை பிரதமராக இருந்த போதும், நியாயமற்ற காரணங்களுக்காக பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டேன்.

    எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய் அவர்களும் (1999), மோடி அவர்களும் (2015) பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர். அதற்கு முன்னர் இந்தியாவிலிருந்து எந்த அதிபரும் பாகிஸ்தானுக்கு வருகை தந்ததில்லை.

    தனது அண்டை நாடுகளுடன் ஒப்பிடும் போது பாகிஸ்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது வருத்தம் அளிக்கிறது. அண்டை நாடுகள் எங்களுடன் வருத்தத்தில் இருந்தால் உலக அளவில் மதிப்புமிக்க நாடாக நாங்கள் எப்படி மாற முடியும்? நாங்கள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடன் சுமூக உறவு நிலவுவதையே விரும்புகிறோம்.

    இவ்வாறு ஷரீப் கூறினார்.

    நவாஸ் ஷரீப்பின் இந்த கருத்து இந்தியா-பாகிஸ்தான் உறவை வலுப்படுத்தும் நல்ல நோக்கமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

    • பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர்.
    • பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர்.

    சென்னை :

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முன்னாள் பாரதப் பிரதமரும், பாஜக நிறுவனர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பேச்சாளரும், கவிஞருமான, பாரத ரத்னா அமரர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்த தினம் இன்று.

    சுதந்திரப் போராட்டத்தின்போது, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற வாஜ்பாய், சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்கு வகித்தவர். ஒன்பது முறை மக்களவைக்கும் இரண்டு முறை மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர், பாராளுமன்ற நிலைக் குழுக்களின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் என பல பதவிகளிலும் திறம்படப் பணியாற்றியவர்.

    பாரதப் பிரதமராக, அணு ஆயுத நாடுகளில் ஒன்றாக உருவாக்கி, நமது பாரதத்தை வல்லரசுகளின் வரிசையில் இடம்பெறச் செய்தவர். கார்கில் போரில் நம் தேசத்தின் எதிரிகளைத் தோற்கடித்தவர். நம் நாடு மிகவும் வலுவானது, வளமானது என்பதிலும் பெரும் நம்பிக்கை உடையவர்.

    பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், சமூக நீதி ஆகியவற்றிற்காக அயராது உழைத்தவர். தேசத்திற்கான அவரது பங்களிப்பு என்றும் மறக்க முடியாதது. அவரது தலைமையும், தொலைநோக்கு பார்வையும் கோடிக்கணக்கான நம் நாட்டு மக்களை இன்றும் வழி நடத்துகிறது.

    பாரதத்தின் மீது கொண்டுள்ள அன்பால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக, நாட்டிற்காக அவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளைக் கருத்தில் கொண்டு, நாட்டு மக்கள் அனைவரும் அரசால் சமமாக நடத்தப்படுவதையும், அனைவருக்கும் அரசின் சேவைகள் கிடைப்பதையும் உறுதிசெய்யும் வகையில், அமரர் வாஜ்பாய் பிறந்த தினம், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தேசிய நல்லாட்சி தினமாக அறிவிக்கப்பட்டது. வாஜ்பாய் அவர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது புகழைப் போற்றி வணங்குகிறோம்.

    இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

    • நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம் என்றார் பரூக் அப்துல்லா.
    • ராகுலின் பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம் என தெரிவித்தார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் பாரத் ஜோடோ யாத்ராவில் ஒரு பகுதியாக இருந்தோம். பாரத் நியாய யாத்ராவிலும் பங்கேற்போம்.

    இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தைக்கு செல்லாவிட்டால் காஷ்மீரில் (காசாவில் இருப்பதுபோல) மோசமான சூழ்நிலை ஏற்படலாம்.

    ஒரு பக்கம் பாகிஸ்தானும், மறுபுறம் சீனாவும் உள்ளன. போர் மூண்டால் காஷ்மீர் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    நம் நண்பர்களை மாற்றலாம், ஆனால் நம் அண்டை வீட்டாரை மாற்ற முடியாது என அடல் பிகாரி வாஜ்பாய் கூறியதை நினைத்துப் பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
    • மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    புதுடெல்லி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி. நட்டா, சபாநாயகர் ஓம்பிர்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

    • அரசியல் தலைவர்கள் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தினர்.
    • மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார்.

    மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் இன்று நாடு முழுக்க கொண்டாடப்பட்டது. 100வது நாளை ஒட்டி, அரசியல் தலைவர்கள் வாஜ்பாயிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாஜ்பாயி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், "முன்னாள் பிரதமர் திரு. அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் நூறாவது பிறந்தநாளில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பினையும், நமது தலைவர் கலைஞர் அவர்களுடன் அவர் கொண்டிருந்த நட்புறவினையும் நினைவுகூர்கிறோம்."

    "வலதுசாரிக் கருத்தியல் கொண்டவராக இருந்தாலும், பிரதமர் பொறுப்பில் இருந்தபோது நாட்டின் மதச்சார்பின்மைப் பண்பை அவர் பேணிக்காத்தார். அவரது வாழ்வும் பணியும் நிலைத்து நிற்கும்!," என்று குறிப்பிட்டுள்ளார். 

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க் கிழமை) சென்னை கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. #AtalBihariVajpayee
    சென்னை:

    முன்னாள் பிரதமரும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வாஜ்பாய் கடந்த 17-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லியில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தியை நாடு முழுவதும் உள்ள முக்கிய நதிகள் மற்றும் கடல்களில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.



    அந்த வகையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில், அவரது அஸ்தியும் வைக்கப்பட இருக்கிறது. நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒவ்வொரு மாநில பா.ஜ.க. தலைவர்களிடம் வாஜ்பாயின் அஸ்தி வழங்கப்பட இருக்கிறது. அவர்கள் அதை பெற்றுவந்து, தங்களது மாநிலங்களில் உள்ள முக்கிய நதிகளில் அஸ்தியை கரைக்க இருக்கின்றனர்.

    வாஜ்பாயின் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழகத்தில் இருந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளனர்.

    வாஜ்பாயின் அஸ்தி நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை கொண்டுவரப்பட இருக்கிறது. தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன்பிறகு, தமிழகத்தில் 6 இடங்களில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது. சென்னையில் அடையாறு கடலில் கலக்கும் இடம், ராமேசுவரம் கடல், கன்னியாகுமரி கடல், மதுரையில் வைகை ஆறு, ஈரோட்டில் பவானி ஆறு, திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆறு ஆகிய இடங்களில் வாஜ்பாயின் அஸ்தி கரைக்கப்பட இருக்கிறது.  #AtalBihariVajpayee #tamilnews
    ×