search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smuggling"

    • கனிமவள கடத்தலை தடுக்க கோரி தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • திடீரென பெய்த மழையிலும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

     தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதிலும் இருந்து கேரளாவிற்கு கனரக லாரிகளில் கனிம வளங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருவதாகவும் இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள் அமைப்பு மற்றும் கட்சியை சேர்ந்தவர்களும் அவ்வப்போது கண்டன குரல்களையும், போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகே இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு கனிமவள கடத்தலை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அண்டை மாநிலத்திற்கு நம்முடைய கனிம வளங்களை கொண்டு சென்று தென் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் கனிமவள கடத்தலை கண்டிக்கிறோம் என கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது திடீரென பெய்த மழையிலும் கடத்தலுக்கு எதிராக தொடர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள், கட்சி பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    • கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    • வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் பட்டுவாடா செய்வதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் சேர்ந்து சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா எம்.சி.ஹள்ளி அருகில் போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக சிறிய கன்டெய்னர் வேன் வந்தது. இதை பார்த்த அதிகாரிகள் கன்டெய்னர் வேனை நிறுத்தும்படி கைஅசைத்தனர்.

    இதை பார்த்த டிரைவர், சிறிது தூரத்திலேயே கன்டெய்னர் வேனை நிறுத்தி விட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீசாரும், அதிகாரிகளும், கன்டெய்னர் வேனில் சோதனையிட்டனர்.

    இதில் 17 கிலோ 40 கிராம் எடையிலான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 44 லட்சம் ஆகும்.

    இதுதொடர்பாக தரிகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்டெய்னர் வேனை பறிமுதல் செய்து டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய கொண்டு வரப்பட்டதா எனவும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

    • 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தன மரத்தை அறுத்து கடத்த முயற்சி நடைபெற்று உள்ளது
    • புகாரின் பேரில் கடத்தல் முயற்சி நபர்களை போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்


    ஆலங்குடி,

    ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை மேலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் சுந்தர்ராஜ் (வயது 43). விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தில், சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக செம்மரம் மற்றும் சந்தன மரங்களை வளர்த்து வருகிறார்.இந்நிலையில், இவரது விவசாய நிலத்தில் இருந்த சுமார் 8 லட்சம் மதிப்பிலான, ஒரு சந்தன மரத்தை அறுத்து சாய்த்தும் மற்ற ஐந்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்களை அறுத்தும் மர்ம நபர்கள் சாய்த்தனர். மேலும் இந்த மரங்களின் மைக்ரோ சுமார் 8 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.இது குறித்து, சுந்தர்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் சந்தன மரங்களை பாதியில் மரத்தை அறுத்து சாய்த்து சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்

    • வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.
    • வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.

    பு.புளியம்படடி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் டாஸ்மாக் மதுபானம் கடத்தி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் ேபாலீசார் பு.புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பு.புளியம்பட்டி கோவை ேராட்டில் சந்தை ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு ெகாண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஒரு மினி சரக்கு டெம்போ வேன் வந்தது. அந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த சரக்கு வேனில் அட்டைப்பெட்டி களில் டாஸ்மாக் மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து வேனில் வந்தவர்களிடம் ேபாலீசார் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் வஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 45) மற்றும் வேனை ஓட்டி வந்த கோவை மாவட்டம் அன்னூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த நாராயணன் (36) என தெரிய வந்தது. இவர்கள் மது பானங்களை அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள் 1212 மது பாட்டில்கள் மற்றும் சரக்கு வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தடுத்த கணவரின் தந்தை, தாய் மீது தாக்குதல்
    • கரூரில் பரபரப்பு

    கரூர்,

    கரூர் மாவட்டம் பழைய ஜெயங்கொண்டம் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் மகன் கார்த்திக் (வயது 21). இவர் அதே பகுதியை சேர்ந்த சினேகா என்ற 21 வயது பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.இந்த விவகாரம் ெபண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே, தேவச்சி கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த தனது உறவுக்கார வாலிபர் சூரியா என்பவருடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் 27-ந் தேதி அந்த சினேகாவிற்கும் சூரியாவிற்கும் பழனியில் வைத்து பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்தது. பின்னர் புதுமண தம்பதியினர் தேவச்சி கவுண்டன் புதூரில் குடும்பம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் காதலிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட தகவல் அறிந்து கார்த்திக் அதிர்ச்சியடைந்தார்.பின்னர் தனது அண்ணன் சக்திவேல், மற்றும் குளத்துப்பட்டியை சேர்ந்த ஜீவானந்தம் ஆகியோரை அழைத்து கொண்டு தேவச்சி கவுண்டன் புதூரில் உள்ள காதலியின் கணவர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கு இருந்த தனது காதலியை காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இதனை சூரியாவின் தந்தை பழனிச்சாமி மற்றும் சினேகாவின் தாயார் புஷ்பா மற்றும் உறவினர்கள் தடுக்க முயன்றனர், அவர்களை கடத்தல் கும்பல் தாக்கினர். இதில் காயம் அடைந்த பழனிச்சாமி, புஷ்பா ஆகியோர் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை ெபற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேல் மற்றும் ஜீவானந்தத்தை கைது செய்தனர். மேலும் கடத்தப்பட்ட சினேகா மற்றும் கார்த்திக்கை வலை வீசி தேடிவருகின்றனர். திருமணமான பெண்ணை காதலன் கடத்தி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
    • ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.

    கடலூார்:

    சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.

    இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர். 

    • போதை பொருட்களை இலங்கைக்கு கடத்த முயன்ற குற்றவாளிகளை இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா கைது செய்தார்.
    • திருச்சியில் நடைபெற்ற விழாவில் விஜய அனிதாவுக்கு விருது வழங்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கடல் பிராந்திய பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடத்த முயற்சித்த பல கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், குற்றவாளிகளை கைது செய்து கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

    திருச்சி சுங்க இலாகா தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வதேச சுங்க தின விழாவில் தூத்துக்குடி மாவட்ட குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய் அனிதாவுக்கு திருச்சி சுங்க ஆணையர் அணில் விருது வழங்கி கவுரவித்து பாராட்டினார்.

    • மதுரையில் காரில் புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் சிக்கினர்.
    • புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் அடிப்படையில் போலீ சார் சுப்பிரமணியபுரம் ரவுண்டானா பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அங்கு டாட்டா சுமோ வாகனம் வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

    அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில், அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, 240 கிராம் மதிப்புடைய 70 புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    போலீசார் 2 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர்கள் மதுரையை சேர்ந்த ராஜேஷ் (32), காசி விஸ்வநாதன் (31) என்பது தெரியவந்தது. காசிநாதன் மீது புகையிலை பொருட்கள் கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளது. இதனைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்களை வாக னத்தில் கடத்தி வந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • திருச்சியில் இருந்து துபாய்க்கு
    • விமானத்தில் கடத்த முயன்ற ரூ.46 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன

    திருச்சி :

    திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.இந்த நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக அளவில் முறையான அனுமதியின்றி வெளிநாட்டு பணத்தை கடத்தி செல்வதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தற்போது அதிகரித்துள்ளது.அந்த வகையில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சியில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் நோக்கி புறப்பட தயார் நிலையில் இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது திருச்சியைச் சேர்ந்த சதாம் உசேன் (வயது 46) என்பவர் தனது உடமையில் வெளிநாட்டு பணமான யூரோ 53,133 கடத்த இருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.46 லட்சம் என தெரியவந்துள்ளது.

    • அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார்.
    • சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மா.புடையூர் மயிலாடும்பாறை பகுதியில் வசித்து வருபவர் நாராயணசாமி (வயது 72). இவர் அந்த பகுதியில் தோட்டத்து வீட்டில் 22 ஆண்டுகளாக குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். எனவே அந்த பகுதியில் அரசு அனுமதியுடன் சந்தன மரங்கள் வளர்த்து வருகிறார். இதனை வெட்டுவதற்கு நாராயணசாமி அனுமதி பெற்று இருந்தார். 

    நேற்று இரவு மர்மநபர்கள் அங்கு சென்றனர். அவர்கள் சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்று உள்ளனர். இன்று காலை நாராயணசாமி ேதாட்டத்துக்கு சென்றார். அப்போது சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமநத்தம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்று மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • தாம்பரத்தில் உள்ள கேசவன் என்பவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தி கஞ்சா பொட்டலங்களை வாங்கி விற்று வந்ததாக தெரிவித்தனர்
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    சேதராப்பட்டு:

    கோட்டக்குப்பம் பகுதியில் கஞ்சா நடமாட்டம் அதிகம் இருப்பதும் அதனை போலீசார் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டகுப்பம் ஜமீத் நகரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து கஞ்சா விற்ற புதுவை ஆட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் என்ற பாண்டியன் (வயது 22) என்பவரை கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    அவர் பாக்கெட்டுகளில் வைத்திருந்த 9 கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் சோலை நகரைச் சேர்ந்த அருண் (22) மற்றும் லாஸ்பேட்டையைச் சேர்ந்த அஜித்குமார் (24) ஆகியோர் தனக்கு கஞ்சா சப்ளை செய்ததாக தெரிவித்தார்.

    அதன் அடிப்படையில் அருணையும் அஜித்குமாரையும் கோட்டக்குப்பம் போலீசார் மடக்கி பிடித்தனர். இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் சேர்ந்து சென்னை தாம்பரத்தில் கேசவன் என்பவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தி அங்கிருந்து அவர் மூலம் புதுவை பஸ் நிலையத்திற்கு ஒருவர் கஞ்சாவை கிலோ கணக்கில் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் என்றும் இந்த கஞ்சா பொட்டலங்களை புதுவையிலும் கோட்டக் குப்பம் பகுதியிலும் விற்று வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களி டமிருந்து 400 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார்.
    • பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 7-ஆம் தேதி அன்று வழக்கம் போல் ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

    அன்று இரவு பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றவர் மீண்டும் ஜவுளி கடைக்கு வரவில்லை. இது குறித்து ஜவுளி கடைக்காரர்கள் அவர்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெற்றோர் உறவினர்கள் வீடுகளிலும் நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதி களுக்கும் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்

    குமார் வழக்கு பதிவு செய்து அந்த இளம்பெண் எங்காவது சென்று விட்டாரா? அல்லது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×