திருப்பத்தூர் அருகே நெக்னாமலை கிராமம் உள்ளது. இங்கு சாலை வசதி இல்லாததால் மக்கள் அன்றாட தேவைக்கும், மருத்துவ தேவைக்கும் 7 கிமீ நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.
கர்ப்பிணிகள் பிரசவ வலி ஏற்பட்டாலும், டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்ட செய்தி சமூகவலைதளங்களில் வெளியானது
இந்நிலையில் சின்னத்திரை நடிகர் பாலா நெக்னாமலை கிராமத்திற்கு நேரில் சென்று கிராம மக்களுக்கு பயன்படும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கினார்.
அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்து, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பாலா இதற்கு முன்பும் பல்வேறு உதவிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.