என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் Once More
    • ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

    மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.

    இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா? புதிரா? பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

    • ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

    இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.

    படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    • மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் பிரபலமானவை.
    • இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டாஸ் ஆகியோர் உருவாக்கினார்.

    எக்ஸ், இன்ஸ்ட்டாகிராம் உள்ளிட்ட பிரபல இணைய தளங்களை திறந்தால் சமீப நாட்களாக ஒரே மாதிரியான அனிமேஷன் வகை புகைப்படங்கள் டிரண்டிங்கில் இருப்பதை காணலாம்.

    கிரிக்கெட், கால்பந்து வீரர்கள் தொங்கி திரைபிரபலலங்கள், அரசியல்வாதிகள் வரை இந்த டிரெண்டில் இணந்துள்ளனர். அவர்களின் அனிமேஷன் படங்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

    அனிமே என்று அழைக்கப்படும் இவ்வகை அனிமேஷன் படங்கள் ஜப்பானை சேர்ந்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ஜிப்லி ஸ்டூடியோ பாணியை சேர்ந்தவை. தற்போது ஓபன் ஏஐ மற்றும் சாட்ஜிபிடியை பயன்படுத்தி இவ்வகை அனிமேஷன் புகைப்படங்களை பலர் உருவாக்கி வெளியிட்டு வருகின்றனர்.

    1985 ஆம் ஆண்டு இயக்குநர்கள் ஹயாவோ மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா, தயாரிப்பாளர் தோஷியோ சுசுகி ஆகியோரால் ஜிப்லி ஸ்டூடியோ நிறுவப்பட்டது.

    ஸ்பிரிட்டட் அவே (SPIRITED AWAY), மின்மினிப் பூச்சிகளின் கல்லறை (Grave of the Fireflies) உள்ளிட்ட பல்வேறு அனிமே படங்கள் ஜிப்லி ஸ்டுடியோவால் உருவாக்கி வெளியிடப்பட்டன.

    இந்த படங்களில் ஜிப்லி ஸ்டூடியோவுக்கென தனி பாணி அனிமேஷன் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஜப்பான் அனிமே ரசிகர்களுக்கு பரீட்சயமான பாணி இது.

    இயக்குநர் ஹயாவோ மியாசாகி 

     

    இந்நிலையில் இந்த பாணி தற்போது உலகளவில் டிரண்ட் ஆக தொடங்கியுள்ளது. பிரபலங்கள், அவர்களின் முகிக்யமான தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஜிப்லி பாணி அனிமேஷனாக மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பிரபலங்களே தங்கள் அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்து டிரண்ட்டில் இணைந்து வருகின்றனர். 

    • அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்தி பிரபல நடிகரான அஜய் தேவ்கன் தற்பொழுது ரெய்டு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டீசரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. டீசரின் தொடக்கத்தில் அஜய் 74 ரெய்டு மற்றும்  அவரது நேர்மையினால் 74 முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வில்லனாக நடித்து இருக்கும் ரிதீஷ் தேஷ்முக்கிடம் 75 வது ரெய்டை  நடத்தவுள்ளார் போன்ற காட்சிகள் டீசரில் இடம் பெற்றுள்ளது. 

    மேலும் இப்படத்தில் ரிதீஷ் தேஷ்முக், வானி கபூர், ராஜத் கபூர், சௌரப் ஷுக்லா, சுப்ரியா பதக் , அமித் சியால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை ராஜ் குமார் குப்தா இயக்க பானரோமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    2018 ஆம் ஆண்டு வெளியான ரெய்ட் படத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் கதையாக அமைந்துள்ளது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்பாகமும் வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • க்ரிஷ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது.
    • க்ரிஷ் 3 திரைப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்துள்ளது

    க்ரிஷ் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தையான ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மாபெரும் வெற்றிப்பெற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்படத்தை ரசித்தனர். ஹாலிவுட் திரைப்படங்களில் பல சூப்பர் ஹீரோக்கள் படங்களுக்கு அதற்கென ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

    இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படமாக கிருஷ் அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களான க்ரிஷ் 2, க்ரிஷ் 3 வெளியாகி வெற்றி திரைப்படங்களாக அமைந்தது.

    இந்நிலையில் க்ரிஷ் 3 வெளியாகி 10 வருடங்கள் கடந்த நிலையில் ரசிகர்கள் கிருஷ் 4 பாகம் எப்போது உருவாகும் என கேள்விகள் எழுப்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் க்ரிஷ் 4 பாகத்தை ஹ்ரித்திக் ரோஷன் நடித்து இயக்க திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

     

    இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கவுள்ளார் ஹ்ரித்திக் ரோஷன். திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதை பணிகள் முடிவடைந்துள்ளது எனவும். படப்பிடிப்பு பணிகள் அடுத்தாண்டு தொடங்கபடும் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஆதித்யா சோப்ரா படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக செயல்படவுள்ளனர். இப்படம் இந்திய சினிமாவை உலக தரத்திற்கு எடுத்துச் செல்லும் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.

    திரைப்படத்தின் கதைக்களம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் உருவாகியுள்ளது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

    படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் தற்பொழுது  வெளியாகியுள்ளது. திரைப்படம் நேற்று மாலை காட்சியில் இருந்து தொடங்கினாலும் படம் நேற்று மட்டும் 3.25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. தற்பொழுது திரைப்படத்தின் மீது உள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளதால் படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. இந்த வார இறுதியில் திரைப்படம் பல கோடிகளை வசூலிப்பது உறுதி.

    • பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
    • கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் எம்புரான் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

    'எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

     

    இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.மலையால சினிமாவில் முதல் நாள் அதிகம் வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை எம்புரான் பிடித்துள்ளது.

    இந்நிலையில் படத்தை குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதை பற்றி பகிர்ந்துள்ளார் மோகன்லால். அதில் அவர் " கமல்ஹாசன் என்னை அழைத்து படத்தின் டிரெய்லரை பார்த்தேன் மிக அற்புதமாக இருக்கிறது. படத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் படம் கண்டிப்பாக வெற்றியடையும். அடிக்கடி நாங்கள் பேசிக்கொள்வது வழக்கம்" என கூறியுள்ளார்.

    • நடிகர் ஜெயச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
    • கைது செய்யப்பட்டால் ஜாமீனில் விடுவிக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் கூட்டிக்கல் ஜெயச்சந்திரன். பிரபல மலையாள நடிகரான இவர், ஒரு சிறுமியை பாலியல் ரீதியான துன்புறுத்தியதாக கடந்த ஆண்டு புகார் கூறப்பட்டது. அதன்பேரில் நடிகர் ஜெயச்சந்திரன் மீது கோழிக்கோடு போலீசார், போக்சோ வழக்கு பதிந்தனர்.

    இந்த வழக்கில் இருந்து முன்ஜாமீன் வழங்குமாறு நடிகர் ஜெயச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, நடிகர் ஜெயச்சந்திரனுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. நடிகர் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் விடுவிக்கவும் சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.


    மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும், விசாரணை அதிகாரிகள் அழைக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகருக்கு உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட்டு, ஜாமீன் நிபந்தனைகளை பின்பற்றப் படாவிட்டால் நடிகரின் ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை தலையிடலாம் என்றும் கூறியிருக்கிறது.

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார்

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடல் நேற்று வெளியாக இருந்தது. பாரதிராஜாவின் மகன் மனோஜ் இறந்ததால் பாடலின் வெளியீட்டை இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

    • அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
    • படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படத்தை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.

    வேகமாகவும், விறுவிறுப்பாகவும் கதைக்களத்தை அமைத்துள்ளார் இயக்குனர் எஸ்.யு அருண்குமார். நடிகர்களின் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காண முடிகிறது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.

    இந்நிலையில் படத்தை நேற்று மாலை ரசிகர்களுடன் சத்யம் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தார் சீயான் விக்ரம். அதே சமயத்தில் இவருடன் நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.

    திரைப்படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது ரசிகர்களின் அன்பு கடலால் சூழப்பட்டார் நடிகர் விக்ரம்.  அதனால்  திரையரங்கை விட்டு வெளியே செல்ல அவருக்கு தாமதம் ஏற்பட்டது. இதனால் மேலும் கூட்டம் சேராமல்  இருக்க உடனே பக்கத்தில் இருக்கும் ஆட்டோவில் ஏறி சென்றார் சீயான் விக்ரம். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் பலரும் காலை முதல் எதிர்ப்பார்த்து காத்து இருந்து படங்களை திரையரங்குகளில் பார்த்து கொண்டாடினர்.திரைப்படம் மிகவும் வேகமாக, விறுவிறுப்பாகவும் நடிகர்களின் மாறுபட்ட நடிப்பை இப்படத்தில் காண முடிகிறது. சீயான் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. படத்தின் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.இந்நிலையில் படத்தை நேற்று மாலை ரசிகர்களுடன் சத்யம் திரையரங்கில் பார்த்து மகிழ்ந்தார் சீயான் விக்ரம். அதே சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்தார்.திரைப்படம் பார்த்துவிட்டு வெளிவரும் போது ரசிகர்களின் அன்பு கடலாம் சுழப்பட்டார் நடிகர் விக்ரம் அதனால் அவரால் திரையரங்கை விட்டு வெளியே செல்ல தாமதம் ஏற்பட்டது. இதனால் மேலும் கூட்டம் சேராமல் இருக்காமல் இருக்க உடனே பக்கத்தில் இருக்கும் ஆட்டோவில் ஏறி சென்றார் சீயான் விக்ரம். இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.
    • மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
    • கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியாகினது 'எம்புரான். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் இதுவாகும்.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளார். மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர்.

    'எம்புரான்' படம் வெளியாவதற்கு முன்பே இயக்குனரும், நடிகருமான பிருத்வி ராஜ், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் 'எம்புரான்' நேற்று வெளியானது. கேரளாவில் இந்தப் படம் 746 தியேட்டர்களில் வெளியானது.

    இந்த நிலையில், 'எம்புரான்' வெளியான முதல் நாளான நேற்று 22 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    மலையாள சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமாக பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான 'ஆடு ஜீவிதம்' இருந்தது. இந்தப் படம் முதல் நாளில் மட்டும் அதிகபட்சமாக 8.95 கோடி ரூபாய் இந்தியா முழுவதும் வசூல் செய்தது. 'லூசிஃபர்' முதல் நாளில் 6.10 கோடி ரூபாய் வசூலை கடந்து 2019ம் ஆண்டு முதல் நாள் வசூலாக இருந்தது. இந்த வசூலையெல்லாம் கடந்து 'எம்புரான்' முதல் நாளில் வசூலில் சாதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×