search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    • சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன்.
    • குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

    சப்பாத்தி, தோசை ஆகியவற்றிற்கு நல்ல காமினேசன் இந்த மலாய் கார்ன் க்ரேவி. ஸ்வீட்கார்ன் விரும்பி சாப்பிடுபவர்கள் இதை டிரை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    ஸ்வீட்கார்ன் - ஒரு கப்

    வெங்காயம் - 1

    தக்காளி - 2

    பூண்டு, இஞ்சி - 50 கிராம்

    ஏலக்காய், பட்டை, கிராம் - தலா 1

    சீரகம் - ஒரு டீ ஸ்பூன்,

    குடை மிளகாய் - 1

    பச்சை மிளகாய் - 2

    கருவேப்பிலை -சிறிதளவு

    கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்

    ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்

    மெத்தி இலைகள் - ஒரு டீ ஸ்பூன்

    செய்முறை

    ஸ்வீட்கார்னை வேக வைத்து எடுத்துகொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்க வேண்டும். குடை மிளகாயை நறுக்கவும்.

    ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதோடு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

    வெங்காயம் வதங்கியதும் குடை மிளகாய் சேர்த்து அது வேகும் வரை வதக்க வேண்டும். இதற்கிடையில், மிக்சியில், தக்காளி, பூண்டு, இஞ்சி, கிராம்பு எல்லாவற்றையும் நன்றாக அரைக்க வேண்டும். இதோடு, முந்திரி மற்றும் சிறதளவு ஸ்வீட்கார்ன் சேர்த்தும் அரைக்கவும். அரைத்த விழுதை கடாயில் கொட்டி, அதோடு மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், மிளகாய் தூள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

    மசாலா நன்றாக வதங்கியதும், அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்து, வேக வைத்த கார்னை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, கசூரி மேத்தி இலை, கொத்தமல்லி இழை தூவினால் க்ரீமி கார்ன் மசாலா தயார். இதை தோசை, சப்பாத்தி, சாதம் என உங்கள் விருப்பப்படி தொட்டுகொள்ள பயன்படுத்தலாம். நன்றாக இருக்கும்.

    • கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான்.
    • எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான்.

    கோடை காலம் என்றாலே மாம்பழ சீசன்தான். மாங்காய் என்ற பெயரைக் கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். அது மாங்காயின் குணம்."மாதா ஊட்டாத சோறு மாங்காய் ஊட்டும்" குணம்."மாதா பழமொழி. உணவில் பல விதமாக மாங்காயை பயன்படுத்தலாம்.

    மாங்காய் என்றாலே எல்லோருக்கும் உடனே நினைவில் வருவது ஊறுகாய் தான். அந்த வகையில் சுவையான வெங்காயம்-மாங்காய் தொக்கு எப்படி செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - அரை கிலோ

    மாங்காய் - பெரியது 1

    கடுகு - தேவையான அளவு

    வெந்தயம் - அரை ஸ்பூன்

    மிளகாய் தூள் - இரண்டு டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவையான அளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    அரை கிலோ பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி அதை காய் சீவலைக் கொண்டு துருவிக் கொள்ள வேண்டும். புளிப்பான ஒரு பெரிய சைஸ் மாங்காயின் தோலை நீக்கி, இதையும் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் சேர்த்து வறுத்து எடுத்து இதை இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இப்போது அதே கடாயில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் சேர்த்து கடுகு கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், இதனுடன் துருவிய வெங்காயை சேர்த்து அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் துருவிய மாங்காயையும் சேர்க்க வேண்டும்.

    இதை நன்றாக கிளறி விட்டு இரண்டு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும். இதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு மிளகாய் தூள், கடுகு வெந்தயப் பொடியை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்றாக கலந்து விட வேண்டும்.

    இதன் பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் அளவுக்கு இதை வேக வைக்க வேண்டும். மூடி போட்டு வேக வைத்தால் இரண்டு நிமிடத்தில் வெந்து விடும்.

    இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு நாட்டு சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும். இட்லி, தோசை, சப்பாத்தியுன் வைத்து சாப்பிட இந்த டிஷ் மிகவும் நன்றாக இருக்கும்.

    • வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது.
    • வயதாகும்போது, ​​குறைவான முட்டைகள் கிடைக்கின்றன.

    கருமுட்டை தரம் குறைதல்

    முட்டையின் தரத்தில் வயது தொடர்பான சரிவுகள் கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானது மற்றும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும். குறைவான முட்டைகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறக்கும் போது குறைந்த அளவு முட்டைகள் உள்ளன, மேலும் அவர்கள் வயதாகும்போது, குறைவான முட்டைகள் கிடைக்கின்றன, இது இயற்கையாக கர்ப்பம் தரிக்க கடினமாக இருக்கலாம்.

    ஹார்மோன் மாற்றம்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்கள் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    உடல்நலப் பிரச்சினைகள்

    நார்த்திசுக்கட்டிகள், பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிக்க மிகவும் சவாலான சில மருத்துவ பிரச்சனைகளாகும்.

    கர்ப்பத்தில் சிக்கல்

    முன்கூட்டிய பிரசவம், கர்ப்பகால நீரிழிவு மற்றும் ப்ரீக்ளாம்ப்சியா ஆகியவை 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்ப பிரச்சினைகளில் அடங்கும்.

    குரோமோசோம் அசாதாரணங்கள்

    40 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் போன்ற மரபணுக் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

    கருவுறுதல் சிகிச்சையின் செயல்திறன் குறைந்தது. ஐ.வி.எப் போன்ற கருவுறாமை சிகிச்சைகள் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வேலை செய்யாமல் போகலாம், இது கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    40 வயதிற்கு மேற்பட்ட கருத்தரிப்பதில் சிக்கல் உள்ள பெண்கள் தங்கள் மருத்துவர் மற்றும் இனப்பெருக்க நிபுணரிடம் தங்கள் விருப்பங்கள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சாத்தியமான சிரமங்கள் பற்றி பேசுவது மிகவும் முக்கியம்.

    • பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் குறையும்.
    • ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும்.

    40 வயதிற்குப் பிறகு கர்ப்பமாக இருக்க சிறந்த வழிகள்?.

    பல பெண்களுக்கு, 40 வயதிற்குப் பிறகு ஒரு குடும்பத்தைத் தொடங்கும் எண்ணம் அச்சுறுத்தலாகவும் சவாலாகவும் இருக்கும். 40 வயதிற்கு பிறகும் கருத்தரிக்க முடியும் என்றாலும், ஒரு பெண்ணின் வயதுக்கு ஏற்ப கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் இயற்கையாகவே குறையும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் பல்வேறு காரணம் மற்றும் கருத்தரிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி ஆராய்வோம். 40 வயதிற்குப் பிறகு கர்ப்பத்துடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் பரிசீலனைகளைப் பற்றியும், இதன்மூலம் நீங்கள் வாழ்க்கையில் ஒரு குடும்பத்தைத் தொடங்குவது பற்றி தகவலறிந்த முடிவை எடுக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையாகவே கருத்தரிக்க முடியும், ஆனால் ஒரு பெண் வயதாகும்போது, கருவுறுதல் மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைத் தாங்கும் வாய்ப்புகள் குறையும். 40 வயதிற்குப் பிறகு கருவுறுதலை பாதிக்கும் காரணிகள்.

    கருப்பை செயல்பாடு குறைதல்

    பெண்களின் முட்டைகளின் அளவு மற்றும் தரம் குறைவதால், வயதாகும்போது இயற்கையாக கருத்தரிப்பது மிகவும் சவாலானது.

    ஹார்மோன் மாற்றங்கள்

    வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்களால் அண்டவிடுப்பைக் குறைத்து, கர்ப்பம் தரிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

    மருத்துவ நிலைகள்

    எண்டோமெட்ரியோசிஸ், பிசிஓஎஸ் மற்றும் ஃபைப்ராய்டுகள் உள்ளிட்ட பல மருத்துவக் கோளாறுகளால் கருவுறுதல் பாதிக்கப்படலாம்.

    வாழ்க்கை முறை

    புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் மற்றும் உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆகியவை கருவுறுதலை பாதிக்கும் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.

    ஆண் துணையின் வயது

    சந்ததியினருக்கு சில மரபணு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்து, வயதான தந்தையின் கருவுறுதலில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    பல கருச்சிதைவுகள் அல்லது பிற கர்ப்ப கஷ்டங்கள் 40 வயதிற்குப் பிறகு பெண்கள் கர்ப்பமாக இருப்பதை மிகவும் கடினமாக்கலாம்.

    40 வயதிற்குப் பிறகும் இயற்கையான கருத்தரித்தல் சாத்தியம் என்றாலும், பெண்கள் தங்கள் கருவுறுதல் விருப்பங்களைப் பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசுவதும், தேவைப்பட்டால், செயற்கை கருத்தரித்தல் போன்ற உதவி இனப்பெருக்க தொழில்நுட்பங்களைப் பெறுவதும் முக்கியம்.

    • முக்கனிகளில் பிரபலமான கனி வாழை.
    • அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கும்.

    முக்கனிகளில் பிரபலமான கனி வாழையாக கருதப்படுகிறது. அனைத்து காலநிலைகளிலும் கடைகளில் எளிதில் கிடைக்கக் கூடியதாக உள்ளது. வாழைப்பழத்தின் நன்மைகள் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

    இரும்புச்சத்து வாழைப்பழத்தில் அதிகம் இருப்பதால், இதனை உட்கொள்வதால், ரத்த சோகை நீங்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

    வாழைப்பழத்தில் உள்ள ஃபுருக்டோஸ், குளுக்கோஸ், மற்றும் சுக்ரோஸ், உடலுக்கு ஆற்றலையும் சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும். இதனால் தான் விளையாட்டு வீரர்கள் அடிக்கடி வாழைப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.

    வருடம் முழுவதும் கிடைக்கக்கூடியது, வாழைப்பழம். 100 கிராம் பழத்தில் 90 கலோரியை இது தருகிறது. தவிர, வைட்டமின்கள், தாது உப்புக்கள் இதில் நிறைவாக உள்ளன.

    உடல் எடை குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தினசரி வாழைப்பழம் கொடுப்பது நல்லது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் பி-6, ரத்தசோகை போன்ற

    குறைபாடுகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ளும். இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கும்.

    தாது உப்புக்களைப் பொறுத்த வரையில், தாமிரம், மெக்னீசியம், மாங்கனீஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளன. மெக்னீசியம் நம் எலும்புகளின் உறுதிக்கும், இதய பாதுகாப்புக்கும் அவசியமான தாது உப்பு.

    100 கிராம் வாழைப்பழத்தில் 358 கிராம் பொட்டாசியம் உள்ளது. இது, இதயத்துடிப்பை கட்டுக்குள் வைத்திருப்பது, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவற்றை செய்கிறது.

     மசித்த வாழைப்பழத்தில் சிறிது உப்பு சேர்த்து பிசைந்து சாப்பிட்டால், வயிற்றுக்கடுப்பிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். மது அருந்தியதால் ஏற்படும், தலைபாரத்தை போக்குவதற்கு வாழைப்பழ மில்க் ஷேக் சாப்பிட வேண்டும். இதனால் வாழைப்பழம் மற்றும் பாலானது உடலை அமைதிப்படுத்தி, உடலை சீராக இயங்க வைக்கும்.

    ஒவ்வாமையால் கஷ்டப்படுபவர்கள் வாழைப்பழத்தை உட்கொள்வது மிகவும் நல்லது. இதில் அமினோ ஆசிட்டுகள் நிறைந்திருப்பதால், இது ஒவ்வாமை ஏற்படுவதைத் தடுக்க உதவும்.

    தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், குடல் கோளாறான அல்சர் பிரச்சினை எளிதில் நீங்கிவிடும். அதிலும் நன்கு கனிந்த பழத்தை சாப்பிட்டால், புண்ணுடன் கூடிய குடல் அலற்சியையும் குணமாக்கும்.

    வாழைப்பழத்தில் உள்ள ட்ரிப்டோஃபேன் என்னும் அமினோ ஆசிட், மூளையில் உற்பத்தியாகும் செரோடோனின் அளவை அதிகரித்து, மன அழுத்தத்தைப் போக்கி, உள்ளத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

    • குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.
    • பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் அவர்களின் தனித்திறனை வளர்க்க உதவும்.

    குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பெற்றோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெற்றோரின் சரியான வழிகாட்டுதல்தான் குழந்தைகளின் தனித்திறனை வளர்க்க உதவும். வேலை, குடும்ப பொறுப்புகள் என எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியில் இருந்தாலும் குழந்தைகளுடன் செலவிடுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

    ஒவ்வொரு காலகட்டத்திலும் குழந்தைகளை உடன் இருந்து வழிநடத்தி செல்வது அவர்களை சரியான வளர்ச்சி பாதையில் பயணிக்க வழிவகை செய்யும். அவர்களின் சிந்தனைகள், செயல்திறன்களை மேம்படுத்த உதவும். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்:

    அறிவாற்றல் வளர்ச்சி

    குழந்தைகள் வளரும்போது அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி அடையும். பெற்றோர்களின் நடவடிக்கைகளை பார்த்தே பிள்ளைகள் வளர்வார்கள் என்பதால் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டியது முக்கியமானது. பெற்றோரின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால் அதனை பின்பற்றி பிள்ளைகளும் சிறந்த மனிதர்களாக உருவாகுவார்கள்.

    எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களை தீர்க்கும் திறன்களை மேம்படுத்திக்கொள்வார்கள். எல்லா சூழ்நிலைகளையும் சிறப்பாக கையாளுதல், ஒழுக்கம், நேர மேலாண்மை போன்ற நடைமுறைகள் மூலம் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்வார்கள்.

    உடல் வளர்ச்சி

    ஆரோக்கியமாக இருப்பது, உடற்பயிற்சி செய்வது, சரியான உணவுகளை உட்கொள்வது என பெற்றோரிடமிருந்து கிடைக்கும் சரியான வழிகாட்டுதல்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும். இந்த விஷயத்தில் பெற்றோரைதான் பிள்ளைகள் ரோல்மாடலாக கருதுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

     மன வளர்ச்சி

    குழந்தைகள் புதுமையாக கற்றுக்கொள்ள பெற்றோர்களின் செயல்பாடுகள் உதவுகின்றன. தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், ஒழுக்கநெறிகளை தவறாமல் பின்பற்றவது, பிறருடைய கருத்துக்களுக்கு செவி சாய்ப்பது, ஆட்சேபனை இருப்பின் மனம் நோகாதபடி விளக்கி புரியவைக்கும் விதம் போன்ற விஷயங்களை பெற்றோரை பார்த்துத்தான் கற்றுக்கொள்கிறார்கள். அதற்கேற்ற மனப்பக்குவம் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள்.

    ஒப்பீடு

    குழந்தை வளர்ச்சியில் தந்தையின் பங்கு மிக முக்கியமானது. எந்தவொரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் தந்தையின் செயல்பாட்டுடன் அதனை ஒப்பிட்டு பார்ப்பார்கள். குழந்தைகள் மனதில் எளிதில் எதிர்மறை சிந்தனைகள் குடிகொண்டு விடும்.

    தாங்கள் ஆசைப்படும் விஷயங்கள் தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் சட்டென்று மனதொடிந்து போய்விடுவார்கள்.

    பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டால் அவற்றை எப்படி கையாள்வது என்பதை பக்குவமாக குழந்தைகளுக்கு சொல்லி புரியவைக்க வேண்டும். நேர்மறையான அணுகுமுறையுடன் சிக்கல்களை எப்படி தீர்க்கலாம் என்பதை கற்றுக்கொடுக்க வேண்டும்.

    சின்ன சின்ன வீட்டு வேலைகளை செய்ய வைத்து குடும்ப பொறுப்புடன் செயல்படுவதற்கு அடித்தளமிட வேண்டும். குழந்தைகளின் தேவைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவற்றைப் புரிந்துகொள்வதும், நிறைவேற்றுவதும் மிக முக்கியமானது.

    எல்லா நேரங்களிலும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் பெற்றோர் தங்களை நேசிக்கிறார்கள், அவர்களுக்கு நாம் நம்பிக்கைக்குரியவராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் வளரும். பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.

    • கருத்தரிப்பு நிகழவில்லை எனில் மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.
    • இருவருக்கும் மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    மலட்டுத்தன்மை என்பது கணவன் மனைவி இருவரும் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொண்டாலும் தொடர்ந்து ஒரு வருடங்கள் வரை கருத்தரிப்பு நிகழவில்லை எனில் அது கருவுறாமை அல்லது மலட்டுத்தன்மை என்று சொல்லப்படுகிறது.

    இந்த கருவுறாமை என்பது பெண்ணின் பிரச்சனை மட்டுமல்ல. ஆண்களும் மலட்டுத்தன்மையை கொண்டிருக்கலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் என இருவருக்குமே கருவுறுதல் அல்லது மலட்டுத்தன்மை பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    ஒழுங்கற்ற மாதவிடாய்

    மாதவிடாய் இல்லாமல் போவது

    ஹார்மோன் பிரச்சனைகள்

    ஃப்லோபியன் குழாய் அடைப்பு

    செலியாக் நோய்

    சிறுநீரக நோய்

    எக்டோபிக் கர்ப்ப்பம்

    இடுப்பு அழற்சி நோய்

    பிட்யூட்டரி சுரப்பி கோளாறுகள்

    பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம்

    சிக்கிள் செல் இரத்த சோகை

    எண்டோமெட்ரியோசிஸ் (கருப்பை நார்த்திசுக்கட்டிகள் மற்றும் பாலிப்கள்)

    தைராய்டு நோய்

    அதிக வயதை கொண்டிருத்தல்

    உடல் பருமன் அல்லது மிக குறைவான எடை கொண்டிருப்பது

    இனப்பெருக்க அமைப்பை சேதப்படுத்தும் சில பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் இருப்பது.

    ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

    வெரிகோஸ் வெயின் பிரச்சனை (விரிவாக்கபட்ட நரம்புகள்)

    விந்தணுக்கள் வைத்திருக்கும் சாக்

    மரபணு கோளாறுகள் (சிஸ்டிக், ஃபைப்ரோசிஸ்)

    இறுக்கமான ஆடைகள் அணிவதால் விந்தணுக்கள் அதிக வெப்பத்தை சந்திதல்

    விந்தணுக்கள் குறைவாக இருப்பது (டெஸ்டோஸ்ட்ரான் அளவு குறைவது)

    முன் கூட்டிய விந்து வெளிபாடு

    விந்தணுக்களின் வடிவம், இயக்கம், அது உள் செல்லும் நேரம் போன்ற குறைபாடு

    மருத்துவ நிலைமகள் மற்றும் மருந்துகள் எடுத்துகொள்வது.

    • கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு.
    • சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம்.

    இன்றைய காலகட்டத்தில் வைத்தியசாலையில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகள் மூன்று முதல் மூன்றேகால் கிலோ வரை இருந்தால் ஆரோக்கியமான குழந்தை என கருதுகிறோம். சில குழந்தைகள் பிறக்கும் போது ஐந்து கிலோ எடைக்கு மேல் இருக்கும்.

    இத்தகைய குழந்தைகள் வளர்ச்சி அடையும் போது உடற்பருமன் பாதிப்பிற்கு ஆளாகி, எதிர்காலத்தில் அதாவது நாற்பது வயதிற்குள்ளாகவே இதய பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்.

    இருப்பினும் இந்த கொழுப்பு இயல்பான அளவைவிட கூடுதலாக உடலில் சேகரிக்கப்படும் போது அது ரத்த நாளங்களில் படிமங்களாக தங்கி, ரத்த ஓட்டத்தினை சீர்குலைத்து, இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் மருத்துவர்கள் உங்களுடைய கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு மீது எப்போதும் தீவிர கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார்கள்.

    மேலும் நாற்பது வயதை கடந்த ஆண்களும், பெண்களும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் காலகட்டத்தில் கொழுப்பின் அளவை அறிவதற்கான பிரத்தியேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.

    கொழுப்பு என்பது கல்லீரலில் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருளாகும். இது தண்ணீரில் கரையாத காரணத்தால் தானாகவே கொழுப்பு புரதங்களாக மாறி, ரத்த நாளங்களில் படிவுகளாக படிகின்றன.

    கொழுப்புகள் புரதங்களாக மாறி ஹார்மோன்கள், விட்டமின்கள், செல் கட்டமைப்பை உருவாக்குதல், பராமரித்தல் போன்றவற்றிற்கு இன்றியமையாத பணியை மேற்கொள்கிறது. இதன் காரணமாக அனைவருக்கும் கொழுப்பு என்பது அவசியம்.

    ஆனால் இயல்பான அளவை விட கூடுதலாக அதிகரிக்கும்போது அவை பாதிப்பை ஏற்படுத்துகிறது. நெஞ்சு வலி, மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

     கொழுப்புகளில் நல்ல கொழுப்பு- கெட்ட கொழுப்பு என்ற இரண்டு வகை உள்ளது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரித்தால் பாதிப்புகள் உயர்கிறது. அதீத கொழுப்பு சேர்வது என்பது சிலருக்கு மரபு சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். இவர்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி தங்களது உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.

     நீரிழிவு நோயாளிகள், நாள்பட்ட சிறுநீரக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஹைபோதைராய்டிசம், புற்றுநோய், முகப்பரு, உயர் ரத்த அழுத்தம், சமசீரற்ற இதயத்துடிப்பு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைப்படி அதீத கொழுப்பு பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள பிரத்தியேக ரத்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.

    இந்த பரிசோதனைகளின் முடிவுகளின் படி உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக முதலில் மருத்துவர்கள் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்துவர்.

    இதனைத் தொடர்ந்து உங்களது வயது, ஆரோக்கிய நிலை, மருந்துகளின் பக்க விளைவு ஆகியவற்றை துல்லியமாக அவதானித்து அதீத கொழுப்பு பாதிப்பை குறைப்பதற்காக பிரத்தியேக மருந்தியல் சிகிச்சைகளை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவர்.

    • நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் கால்கள் வீங்குவதுண்டு.
    • கால்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது.

    நீண்ட தூர கார், பஸ், ரெயில், விமானப் பயணங்களில் இவ்வாறு கால்களும் பாதங்களும் வீங்குவது சகஜம் தான் ஆசிரியர், காவல் துறையினர், பாதுகாப்பு பணியினர் இவர்களைப் போன்று நாள் முழுக்க நின்று கொண்டே வேலை செய்பவர்களுக்கும் கால்கள் வீங்குவதுண்டு.

    உடல் இயக்கம் இருந்தால்தான். உடலிலுள்ள ரத்தம் மேலே ஏறிச்சென்று இதயத்தை அடையும். இல்லை என்றால் ரத்தம் மேலே ஏறுவதற்கு சற்று சிரமப்படும். தாமதப்படும். தொடர்ந்து நீண்ட நேரம் உட்கார்ந்துகொண்டே இருக்கும்போது கால்களில் உள்ள ரத்த நாளங்களுக்கு அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் ரத்தத்திலுள்ள நீர் ரத்தத்தை விட்டு வெளியேறி ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள திசுக்களில் சேர ஆரம்பித்துவிடுகிறது.

    இதனால் உடலின் கீழ்ப்பகுதியான பாதம், கணுக்கால், கால் களின் கீழ்ப்பகுதி இவைகளில் லேசாக நீர் தேங்க ஆரம்பிக்கும். இதைத்தான் நாம் கால் வீக்கம் என்கிறோம்.

    நீண்ட பயணத்திற்குப் பிறகு இரண்டு கால்களுமே வீங்கியிருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

    மறுநாள் இரண்டு கால்களையும் சற்று உயரே தூக்கி வைத்துப் படுத்திருந்தாலே கால் வீக்கம் சுத்தமாக வற்றிவிடும்.

     நீங்கள் பயணம் செய்யும்போதும் கால்கள் வீங்குகிறது என்றால் பின்னாளில் இது 'வேரிகோஸ் வெயின்ஸ்' என்று சொல்லக்கூடிய 'விரிசுருள்சிரை நோயில் கொண்டுபோய் விட்டுவிடக்கூடாது. பயணத்தின் போது அடிக்கடி கால் வீக்கம் வருபவர்கள் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்துச்செல்லும் ரத்தநாளக் குழாய்களின் 'ரத்த ஓட்ட மதிப்பீடு' சோதனையை செய்வது நல்லது.

     உங்கள் கால்களின் மேல் பாதியில் மட்டும் வீக்கம் இருந்தாலோ, ஒரு காலில் மட்டும் தான் வீக்கம் இருக்கிறது என்றாலோ, வலியுடன் வீக்கம் உள்ளது என்றாலோ, கால்களின் மேல் தோல் நிறம் கறுப்பு, பழுப்பு, சிவப்பு நிறத்தில் மாறியிருந்தாலோ நீங்கள் உடனடியாக சிறப்பு ரத்தக் குழாய் சிகிச்சை நிபுணரைச் (வேஸ்குலார் நிபுணர்) சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் இது 'ஆழ்சிரை ரத்த உறைவு நோயாக (டி.வி.டி.) இருந்து விடக்கூடாது.

    இதய நோய், கல்லீரல், சிறுநீரக நோய், தைராய்டு கோளாறு, புற்றுநோய், கர்ப்ப காலம், அதிக உடல் எடை உள்ளவர்கள், தூக்கமின்மை நோய் உள்ளவர்கள், உணவில் அதிக உப்பு சேர்த்துக்கொள்பவர்கள், நுரையீரல் நீர் வீக்க நோய் உள்ளவர்கள் இவர்களுக்கெல்லாம் கூட ஒரு காலோ அல்லது இரண்டு கால்களுமோ வீங்குவதும் பின் வற்றுவதும் காணப்படும்.

    இது தவிர எப்பொழுது பயணம் செய்தாலும் இரண்டு கால்களும் வீங்குகிறது என்றால் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சிறப்பு ரத்த சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோனை பெறுங்கள்.

    • கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம்.
    • எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும்.

    கேழ்வரகில் கால்சியம் சத்து அதிகம். வாரம் இருமுறை, கேழ்வரகில் செய்த உணவுகளை சாப்பிட்டுவந்தால் பற்கள் மற்றும் எலும்புகளின் உறுதித்தன்மை அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை இனிப்பு உருண்டையாக செய்துகொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்:

    கேழ்வரகு மாவு- 1 கப்

    நிலக்கடலை - 1/4

    தேங்காய்த்துருவல் - 1/2 கப்

    வெல்லம் (பொடித்தது) - 1/2 கப்

    ஏலக்காய்- ஒரு சிட்டிகை

    உப்பு - 1 சிட்டிகை

    செய்முறை:

    முதலில் கேழ்வரகு மாவை மிதமான தீயில் வறுத்து, ஒரு பாத்திரத்தில் ஆறவிடவும். பிறகு நிலக்கடலையை வறுத்து தோலை அகற்றிவிட்டு, மிக்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றி கரகரப்பாக திரித்து, ஆறவைத்த கேழ்வரகு மாவுடன் சேர்க்க வேண்டும். கூடவே தேங்காய் துருவலையும் சேர்க்க வேண்டும்.

    பின்னர் ஏலக்காயை பொடித்துப்போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரையை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து, கொதித்து சர்க்கரை கரைந்ததும் இறக்கி வடிகட்டி இந்த மாவுடன் ஊற்றவும். நன்றாக கிளறி சப்பாத்தி மாவு பக்குவத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    பின்னர் மாவினை உருண்டைகளாக உருட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். மிகவும்சுவையான, சத்தான கேழ்வரகு உருண்டகளை குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


    • கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம்.
    • புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    கோடைகாலத்தில் அதிக நீரைப் பருகுவது மிகவும் முக்கியம். இதற்கு சில உணவுகளையும், நீர் பானங்களையும் உள் பருக வேண்டும். அதற்கு வெள்ளரி, தர்பூசணி, இளநீர் போன்றவற்றை அதிகமாக பருகுவது நல்லது. இதனால் சருமம் மங்காமல், செழுமை அடையும்.

    கோடைக் காலத்தில் புரோட்டீன் சத்து குறைவாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிகுந்த காய்கறிகளான, வாழைத் தண்டு, கீரை முதலானவற்றை எடுத்துக்கொள்ளுதல் அவசியம். அதோடு அதிக அளவிலான தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து குறைபாடு இன்றி உடலை பாதுகாக்க வேண்டும்.

    கோடைக் காலத்தில் சருமத்தில் நீர்த்தன்மை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதனால் கோடைகாலத்தில் அதிக தண்ணீர் பருகுவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வெயிலில் செல்வதால் தோல்களில் அலர்ஜி, உடலில் தடிப்புகள், முகத்தில் பருக்கள், உடல் முழுது வியர்க்குரு போன்றவை ஏற்படும். இவற்றை தடுக்க வேண்டியது அவசியமான ஒன்று.

     அழகு நிலையங்கள் செல்வதைத் தவிர்த்து வீட்டிலேயே அரிசி மாவு, கடலை மாவு, தயிர் முதலியவற்றைப் பயன்படுத்தி இயற்கை முறையில் உங்கள் முகம் மற்றும் உடலை பாதுகாத்துக் கொள்ளலாம்.

     வாரம் இமுறை வேப்பிலைகள் உடன் சிறிது கறிவேப்பிலையையும் சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து நீராடினால் தலைச்சூடு குறைந்து தலைமுடி குளிர்ச்சியாகவும் நறுமணத்துடன் காணப்படும்.

     அவ்வப்போது நெல்லிக்காயை, ஒரு துண்டு இஞ்சி, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்து சாறாக குடித்து வரவும் இதன் மூலம் ரத்தசோகை குறைந்து உடல் புத்துணர்ச்சி பெறும்.

    சோற்றுக் கற்றாழையை அவ்வப்போது முகம், கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து நீராடவும் உடல் குளிர்ச்சியாகவும் பொலிவும் காணப்படும்.

    கோடையில் விலை உயர்ந்த குளிர்பானங்களை வாங்குவதை தவிர்த்து தயிர் மோர் பயன்படுத்தலாம் அதில் வெந்தயம் சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.

    இயற்கை பொருட்களான தேன் மற்றும் தயிர் இரண்டும் வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. அதேபோல் பாலாடையில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.

     ஒரு ஸ்பூன் தயிர், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் நன்றாகக் கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் பட்டுப்போல பளப்பளப்பாக இருக்கும்.

    இதனை தொடர்ந்து செய்யும்போது வறண்ட சருமம் பளிச்சென்று ஆகிவிடும். மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளையும், அழுக்குகளையும் மற்றும் இறந்த செல்களை நீக்கி பொலிவு பெறச் செய்கிறது. முகத்தில் சுருக்கங்களை நீக்குவதால் இளமையைத் தக்கவைக்கும்.

    கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பருக்கள், கட்டிகள் இருக்கும் இடத்தில் தடவி வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம். தேன் மற்றும் தயிர் இரண்டையும் சேர்த்து பயன்படுத்தும் போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் தக்க வைக்கப்படுகிறது. முகம் வறண்டு போகாமல் தடுக்க இவை உதவுகின்றன.

     மேலும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவலாம். எலும்பிச்சைச் சாறு மற்றும் சர்க்கரையை இணைத்து முகத்தில் பயன்படுத்தினால் முகம் பொலிவு பெறும். தக்காளிப் பழத்தையும், சர்க்கரையையும் இணைத்து அதன் சாற்றை முகத்தில் தடவி வந்தால் முகம் பளப்பளவென மாற்றம் அடையும்.

    • உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க வேண்டும்.
    • வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

    உச்சி வெயிலில் சாலையில் நடந்து செல்லும் சிலர் திடீரென மயக்கம் அடைந்து விழுவதை காணலாம்.

    வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்து மயக்கம் அடைவது மற்றும் உடல் உறுப்புகள் செயல்படாமல் போவது 'ஹீட் ஸ்ட்ரோக்' அல்லது 'வெப்ப பக்கவாதம்' என்று அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்ட நபர்களை பாதிக்கிறது.

    சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும்போது உடலின் வெப்பநிலை உயர்ந்து மற்றும் உடலில் ஏற்படும் நீர் வறட்சி காரணமாக இது ஏற்படுகிறது.

    இதன் காரணமாக, உடலின் மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகிறது.

    ஒருவருக்கு வெப்பத்தால் பாதிப்பு ஏற்படும்போது தலைச்சுற்றல், தலைவலி, வறண்ட தோல், வியர்வை இல்லாமை, குமட்டல் மற்றும் வாந்தி, விரைவான அல்லது பலவீனமான இதய துடிப்பு, மூச்சு வாங்குதல், குழப்பம், தடுமாற்றம், வலிப்பு, மயக்கம் ஆகியவை ஏற்படலாம்.

    ஒருவருக்கு வெயில் காலங்களில் இந்த அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் அவரை குளிர்விக்க முதலுதவி செய்ய வேண்டும்.

    பாதிக்கப்பட்ட நபரை நிழலான பகுதியில் அமர்த்தி, ஆடைகளை தளர்த்தி ஓய்வு கொள்ள செய்ய வேண்டும். உடலில் காற்று படும்படி விட வேண்டும்.

    நோயாளியின் அக்குள், இடுப்பு, கழுத்து மற்றும் முதுகில் ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுத்து உடல் வெப்பநிலையை குறைக்க வேண்டும். இதனை தொடர்ந்து உடனடியாக மருத்துவரின் உதவியை நாடி தகுந்த மருந்துகளின் துணையோடு அவரை பாதிப்பில் இருந்து மீளச்செய்ய வேண்டும்.

    வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களாகவோ, சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் ஏற்கனவே பாதிப்புக்கு உள்ளாகியவர்களாக இருந்தால் அவர்களுக்கு ஐஸ் கட்டிகளை கொண்டு ஒத்தடம் கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வது ஆபத்தாக முடியும். இவர்களுக்கு சற்று காற்றுபடும்படி ஓய்வு கொடுத்து தாமதிக்காமல் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிப்பதே தீர்வாகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

     உடலில் நீர்சத்து குறையாமல் பாதுகாக்க பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஓஆர்எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும், முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேண்டும்,

    இளநீர் போன்ற திரவங்களை கொடுங்கள், தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்கவேண்டும். போதிய இடைவேளைகளில் நீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும்.

    ×