என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
![cinema banner](/images/latest_theatre_banner.png)
![cinema banner](/images/rating_banner.png)
- எம் எஸ் ஆரோன் நடிப்பில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை விழா நடைப்பெற்றது
- நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார்
PMS CINE ENTERTAINMENT சார்பில் முரளி பிரபாகரன் தயாரிப்பில், சாய் பிரபா மீனா இயக்கத்தில், கூல் சுரேஷ், செந்தில் மற்றும் எம் எஸ் ஆரோன் நடிப்பில் மிரட்டலான கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.
திரைத்துறையிலிருந்து இயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, பிக் பாஸ் ராணவ், ஷனம் ஷெட்டி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, படக்குழுவினரை வாழ்த்தினர்.
ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கிடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார் என்பது தான் இப்படத்தின் மையம்.
![](https://media.maalaimalar.com/h-upload/2025/02/16/9385424-newproject58.webp)
திரை வாழ்க்கையில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார். இவருடன் கூல் சுரேஷ் கேங்கஸ்டராக நடிக்க, எம் எஸ் ஆரோன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன் , ஸ்ரீவித்யா,வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.
முழுக்க முழுக்க அதிரடி திருப்பங்களுடன் ஆக்சன் கமர்ஷியலாக உருவாகும் இப்படத்தின் ஷீட்டிங் ஆந்திரா மற்றும் கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழு விபரம்
எழுத்து மற்றும் இயக்கம் : சாய் பிரபா மீனா
தயாரிப்பு : முரளி பிரபாகரன்
தயாரிப்பு நிறுவனம் : PMS CINE ENTERTAINMENT
இசை : நரேஷ்
ஒளிப்பதிவு : G.முத்து
படத்தொகுப்பு : நவீன் குமார்
கலை இயக்கம்: சுப்பிரமணி
நடன இயக்கம் : செந்தாமரை ரமேஷ் கமல்
பப்ளிக் சிட்டி டிசைன் : எஸ் கே ஜீவா
தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக் & முரளி
இணை இயக்குனர் : ஷரவன்
சண்டை பயிற்சி : சூப்பர் குட் ஜீவா
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
- ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு அறிமுக இயக்குனரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்து ஜோ திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து ஜோ பட ஜோடி அடுத்து மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனரான கலையரசன் தங்கவேல் இயக்கவுள்ளார். இச்சமூதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இயக்குநர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, பல வெற்றித் திரைப்படங்களைத் தயாரித்த "ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ்" நிறுவனம் சார்பாக, மணிகண்டன் கந்தசுவாமியின் மேற்பார்வையில் , அறிமுக இயக்குனர் "பிளாக் ஷீப்" கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் இந்த படம் உருவாகிறது.
இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்திற்கு ஆண் பாவம் பொல்லாதது என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரியோராஜ் மண்டைக்குள் பல பெண்கள் சித்திரவதை செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு, சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு, என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிட்டனர்.
ரியோ ராஜ் ஸ்வீட் ஹார்ட் மற்றும் நிறம் மாறும் உலகில் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நிவின்பாலி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இப்படத்தில் நிவின் பாலி ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நிவின் பாலி. இவர் சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் போதிய வரவேற்பை மக்களிடம் பெறவில்லை. கடந்த ஆண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் திரைப்படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்தார். படத்தில் சிறுது நேரம் வந்தாலும் அது மக்களிடையே பெரியளவில் கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் நிவின் பாலி கம்பேக் கொடுக்க வேண்டும் என மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் நிவின்பாலி நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு மல்டிவெர்ஸ் மன்மதன் என பெயரிட்டுள்ளனர். இப்படமே இந்தியாவின் முதல் மல்டிவெர்ஸ் சூப்பர் ஹீரோ திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்தில் நிவின் பாலி ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார்.
இப்படத்தை ஆதித்யன் சந்திரசேகர் எழுதி இயக்குகிறார். நிவன் பாலி அவரது நிறுவனமான பாலி ஜூனிய பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படம் ஒரு பான் இந்தியன் திரைப்படமாக உருவாகிறது. மலையாளம், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. திரைப்படத்தை பற்றிய மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் நிவின் பாலி புடல் எடையை குறைத்து ஒரு பக்கா மாஸான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதுக்கு மக்கள் பெரும் அதரவை கொடுத்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
- சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.
பிரபல சினிமா பாடர்களான திப்பு மற்றும் ஹரினி தம்பதியின் மகனான சாய் அபயங்கர் கடந்தாண்டு தொடக்கத்தில் 'கட்சி சேர' என்ற பாடலை இசையமைத்து பாடி வெளியிட்டார். இந்த பாடல் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.
அதைத்தொடர்ந்து சாய் அபயங்கர் 'ஆசை கூட' என்ற பாடலை வெளியிட்டார். இந்தப் பாடலும் இணையத்தில் மிகப் பெரிய வைரல் ஆனது.
இந்த இளம் வயதிலேயே அவர் இசையமைத்த இரு பாடல்களும் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. இதனால் சூர்யா 45 படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரை தேடி வந்தது.
இந்நிலையில், கட்சி சேரா, ஆசை கூட வரிசையில் சாய் அபயங்கரின் 3 ஆவது இண்டிபெண்டண்ட் பாடலான 'சித்திர புத்திரி' பாடலை நடிகர் சூர்யா வெளியிட்டார். இந்த ஆல்பத்தில் பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி நடனமாடியுள்ளார். இப்பாடலும் மிகப்பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்பாடல் யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட சாய் அபியங்கர் சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் அவர் கூறியதாவது " எனக்கு திரைப்படங்கள் பார்ப்பது பிடிக்கும். அவ்வப்போது என் நண்பர்களோடு திரைப்படங்கள் பார்ப்பேன். சமீபத்தில் விடாமுயற்சி திரைப்படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மேலும் ஒரு மலையாள திரைப்படத்திற்கு இசையமைக்கிறேன். என் பாடலை கேட்டு நடிகர் சிம்பு அழைத்து பாராட்டினார்." என கூறீனார்.
மேலும் சாய் அபியங்கர் சிம்பு நடிக்கும் STR49 மற்றும் STR51 ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம்
- இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இயக்குனர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ள 'குடும்பஸ்தன்' திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தெலுங்கு நடிகை சான்வி மேகனா இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு நடுத்தர குடும்ப ஆண்மகன் படும் பண கஷ்டங்களை மிக நகைச்சுவையாக இப்படம் கையாண்டுள்ளது. இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் 'குடும்பஸ்தன்' படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். இந்நிலையில் படத்தை குறித்த வசூல் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி திரைப்படம் 25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 3 வாரங்களில் பல திரைப்படங்கள் வந்தாலும் குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக அதன் 4-வது வாரம் திரையரங்கிள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் நாளை (17.2.2025) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அமரன் வெற்றியை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ், சுதா கொங்கரா உள்ளிட்ட முன்னணி இயக்குனர்களுடன் கைக்கோர்த்து உள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நாளை (17.2.2025) தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறது.
இதைமுன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும்,
நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும்,
குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்,
தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய பெருங்கனவை நனவாக்கிய வெற்றி நாயகன்,
தமிழ்த்திரையுலகின் வளர்ந்து வரும் உச்ச நட்சத்திரம் என் ஆருயிர் இளவல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
அடுத்தடுத்து மக்கள் மகிழும் வெற்றிப்படைப்புகள் பல தந்து சாதனை புரிந்திட அண்ணனின் அன்பும், வாழ்த்துகளும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தன் தனித்துவமிக்க நடிப்புத்திறனாலும், நகைச்சுவை இழையோடும் உடல்மொழியாலும்,குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட திரைக்கலைஞன்,தன் விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற தன்னுடைய… pic.twitter.com/FUUuDkU1b8
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) February 16, 2025
- ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும்.
ஜி.வி. பிரகாஷ் குமார் அவரது 25 படமாக கிங்ஸ்டன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார்.
இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. இப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ராசா ராசா பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தின் இரண்டாம் பாடலான மண்ட பத்ரம் பாட்லை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கானா பிரான்சிஸ் எழுதி பாடியுள்ளார். இப்பாடல் ஒரு குத்து கானா பாடலாக அமைந்துள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
- திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' வெளியானது. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் 25-வது படமான 'பராசக்தி' படத்திலும் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'எஸ்கே 23' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான வருகிற பிப்ரவரி 17-ந் தேதி காலை 11 மணிக்கு இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சங்கிலி செயின் தொங்கிக் கொண்டு இருக்கிறது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
திரைப்படத்தின் ஆடியோ உரிமையை ஜங்கிலி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கதாநாயகன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து உள்ளார்.
- இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'மகாராஜா' திரைப்படம் இவருக்கு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது.
விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதால் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்படுகிறார். குறிப்பாக இவர் கதாநாயகன் என்று இல்லாமல் வில்லனாகவும் நடித்து உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 'பேட்ட' படத்திலும், உலக நாயகன் கமல்ஹாசனுடன் 'விக்ரம்' படத்திலும், இளையதளபதி விஜயுடன் 'மாஸ்டர்' படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். அஜித்துடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில், அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு என்று நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.
கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம், அஜித்துடன் படம் எப்போ பண்ணுவீங்க என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு விஜய் சேதுபதி கூறுகையில்,
போற இடத்தில் எல்லாம் இந்த கேள்விய கேட்கிறார்கள். இதுவரைக்கும் நடந்தது எதுவும் நான் திட்டமிடவில்லை. ஏதாவது ஒரு நல்ல சந்தர்ப்பத்தில் நடக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நடக்கறதா இருந்தது.. நடக்கவில்லை. விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
இதையடுத்து எந்த படத்தில் நடிக்கிறதா இருந்தது? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, படம் பெயர் சொல்ல வேண்டாம்... என தெரிவித்து படத்தின் பெயரை கூற மறுத்துவிட்டார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தப் படத்தை ஆனந்த் எல் ராய் இயக்குகிறார்.
- இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் தனுஷ். இந்திய மொழிகள் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தமிழில் இவர் இயக்கியுள்ள நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வருகிற 21-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் நடிக்கும் இந்தி திரைப்படமான "தேரே இஸ்க் மேன்" படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில் நடிகர் தனுஷ் கேரவனில் இருந்து வெளியே வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கேரவனில் இருந்து வெளியே வரும் போது வீடியோ எடுக்கப்படுவதை உணர்ந்த நடிகர் தனுஷ் கேமராவை நோக்கி கையசைக்கிறார்.
இதோடு, படப்பிடிப்பு தளத்தில் தனுஷ் ஒருத்தரை துரத்திக்கொண்டு ஓடுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ஆனந்த் எல் ராய் தயாரித்து இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷால் சின்கா மேற்கொள்ள, ஆக்ஷன் இயக்குநராக ஷாம் கௌஷால் பணியாற்றுகிறார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
@dhanushkraja #TereIshkMein shooting spot ???? pic.twitter.com/P0LYLhGg1o
— KOKKIKUMARU (@Vignesh98_) February 15, 2025
- அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்.'
- இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது டீசல் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.
டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடல் வெளியீட்டை ஒட்டி படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.
தற்போது டீசல் படத்தின் இரண்டாம் பாடல் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி இந்தப் பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியிருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் வருகிற 18-ம் தேதி வெளியாகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
#STRforDiesel
— Harish Kalyan (@iamharishkalyan) February 16, 2025
Ennoda kaadhuku idhu paata irundhalum, en nenjukku anbu dhan kekkudhu.
@SilambarasanTR_ kuralil #DillubaruAaja from #Diesel
Thanks for doing this. Love you na ❤️?
Song releasing on Feb 18th. Check out the promo ⬇️
@AthulyaOfficial @devarajulu29… pic.twitter.com/zxcPdd1rds
- இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் மம்மூட்டி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருந்தார்.
இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக கவுதம் வாசுதேவ் மேனனுடன் மம்மூட்டி இணைந்து நடித்த 'பசூகா' படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியாகிறது.
இந்த நிலையில் மம்மூட்டியின் அடித்த பட அப்டேட் கிடைத்துள்ளது. இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பேனி தயாரிக்கிறது.
Unveiling the other side of #Kalamkaval, Ft. #Vinayakan ??#Mammootty #Vinayakan #MammoottyKampany #JithinKJose #SamadTruth #WayfarerFilms #TruthGlobalFilms pic.twitter.com/0cgCgnAfS8
— MammoottyKampany (@MKampanyOffl) February 15, 2025
குரூப், ஓஷானா படங்களுக்குக் கதை எழுதிய ஜிதின் கே ஜோஷ் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விநாயகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்திற்கு 'களம்காவல்' என்று பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் போஸ்டரை வெளியிட்டு, இதுவரை பார்த்திராத மம்மூட்டியைக் காணத் தயாராக இருங்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
Unveiling Mammootty Kampany's Production No. 7 titled as #@kalamkaval, Directed by Jithin K Jose.
— MammoottyKampany (@MKampanyOffl) February 15, 2025
Wait for another "NEVER SEEN BEFORE " Mammootty to be unleashed Soon ??#Mammootty @mammukka #Vinayakan #MammoottyKampany #JithinKJose @SamadTruth #WayfarerFilms… pic.twitter.com/jJnw5PN9Iv
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்