search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு

    சென்னையில் 7 ஆயிரத்தில் இருந்து சற்று குறைந்துள்ள கொரோனா தொற்று, மற்ற 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.
    தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைய தொடங்கவில்லை. நேற்று 33 ஆயிரத்தை கடந்த தினசரி தொற்று, இன்றும் 33,172 ஆக உள்ளது.

    சென்னையில் கடந்த 7 ஆயிரத்தை தாண்டிய நிலையில், தற்போது சற்று குறைந்துள்ளது. இன்று 6247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் மற்ற மாவட்டங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சென்னையை தவிர்த்து 8 மாவட்டங்களில் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் கோவையில் 3 ஆயிரத்தை தாண்டியள்ளது. செங்கல்பட்டில் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    1. சென்னை- 6247
    2. செங்கல்பட்டு- 2041
    3. கோவை- 3166
    4. ஈரோடு- 1232
    5. காஞ்சிபுரம்- 1119
    6. கன்னியாகுமரி- 1030
    7. மதுரை 1095
    8. திருவள்ளூர்- 1835
    9. திருச்சி- 1569
    Next Story
    ×