search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கிம் ஜாங் உன்-ஐ குஷிப்படுத்த இன்ப குழு: வருடத்திற்கு 25 அழகான பெண்கள்- வெளியான பகீர் தகவல்
    X

    கிம் ஜாங் உன்-ஐ குஷிப்படுத்த இன்ப குழு: வருடத்திற்கு 25 அழகான பெண்கள்- வெளியான பகீர் தகவல்

    • ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
    • இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக.

    உலகில் மர்மமான நாடு என்றால் அது வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு அந்நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். வடகொரியாவின் முக்கியமான வேலை ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    உலக நாடுகள் பொருளாதார தடைகள் விதித்த போதிலும், சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது உடல் நலம் குறித்து பல்வேறு வதந்திகள் உலா வந்தன. உயிரோடு இருக்கிறாரா? என்ற கேள்வி கூட எழுந்தன.

    கிம் ஜாங் உன் குறித்து பல்வேறு தகவல் வெளியாகுவது சகஜம்தான். ஆனால் தற்போது வடகொரியாவில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர், ஆங்கில பத்திரிகைக்கு அளித்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிம் ஜாங் உன் தனக்காக இன்ப குழு வைத்துள்ளதாகவும், அந்த குழுவிற்கு வருடந்தோறும் 25 கன்னிப் பெண்கள் தேர்ந்தெடுத்து அனுப்பப்படுவார்கள் என்றும் அந்த பெண் கூறியதாக மிர்ரர் செய்தி வெளியிட்டுள்ளது.

    தப்பி வந்த அந்த பெண் கூறியதாக மிர்ரர் வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

    அழகான பெண் கிடைக்கவில்லை என்றால், பள்ளிக்கூடத்திற்குக் கூட சென்று ஒவ்வொரு வகுப்பறையாக சென்று பார்வையிடுவார்கள்.

    ஒரு வழியாக அவர்கள் அழகான பெண்களை கண்டுபிடித்து விட்டால், அவர்களுடைய முதல் விசயம் அவர்களுடைய குடும்பம் குறித்து விசாரிப்பதுதான். அந்த பெண்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வடகொரியாவில் இருந்து வெளியேறி இருந்தால் அல்லது சொந்தக்காரர்கள் தென்கொரியா அல்லது மற்ற நாடுகளில் வசித்து வந்தால் அவர்களை நிராகரித்து விடுவார்கள்.

    ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு விட்டால், அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார். இந்த பரிசோதனை அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறாரா? என்பதை உறுதி செய்வதற்காக. இந்த பரிசோதனையின் போது சிறிய குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டாலும், அவர்கள் தேர்வாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

    இந்த கொடூரமான பரிசோதனைக்குப் பிறகு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சில பெண்கள் பியாங்யாங் அனுப்பப்படுவார்கள். அங்கு அவர்களுடைய ஒரே நோக்கம் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன்-ஐ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதுதான்.

    இன்ப குழு மூன்று தனித்தனி குழுவாக பிரிக்கப்படும். ஒரு குழுவிற்கு மசாஜ் பயிற்சி அளிக்கப்படும். மற்றொரு குழு பாட்டுப் பாட வேண்டும். நடனமாட வேண்டும்.

    3-வது குரூப் சர்வாதிகாரி மற்றும் மற்ற நபர்களுடன் பாலியல் நெருக்கத்துடன் இருக்க வேண்டும். இவர்களை எப்படி மகிழ்விப்பது என்பதை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் அவர்களின் ஒரே குறிக்கோள்.

    மிகவும் கவரக்கூடிய வகையிலான கவர்ச்சிகரமான பெண்கள் சர்வாதிகாரிக்கு சேவை செய்ய தேர்வு செய்யப்படுவார்கள். மற்றவர்கள் குறைந்த ரேங்க் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை திருப்பிப்படுத்த ஒதுக்கப்படுவார்கள்.

    இந்த குழுவில் உள்ள பெண்கள் சுமார் 25 வயதை தொடும்போது, அவர்களின் பணிவிடை காலம் முடிவடைந்துவிடும். அந்த பெண்களில் சிலர் தலைவர்களின் பாதுகாவலர்களை திருமணம் செய்து கொள்வது உண்டு.

    இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளதாக மிர்ரர் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×